வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா! கிருஷ்ணா!...

கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று கூப்பிட்ட குரல் தேடி ஓடி வருவான் கிருஷ்ணன். அவனே ஆத்மசக்தி அவனே அனைத்தும், அவனே ஆதியும், அந்தமும், ஜோதியும், சுடர் ஒளியும். அவனை நினைத்தாலே மனம் இனிக்கும், உடல் சிலிர்க்கும், மனதில் பக்தி தானாய் வந்து துளிர்க்கும். கிருஷ்ணா என்று அழைக்கும்போதே அண்ட சராசரமும் நம்மை ஆனந்தமாய் ரசிக்கும். அவன் பேரை சொன்ன வாய்க்கு தேவஅமுதம் கிடைக்கும்.நாளும் பொழுதும் அவனை நான் நினைக்க நயமாய் அருள் புரிந்திடுவான். வாழும் உயிரெல்லாம் அவன்ர் அவனே  ஆவான். இனியென்ன வேண்டும் இவ்வுலகில் அவனே  அனைத்துமாய் அலைபவன் அவனைத்தவிர வேறு எதை பெற்று நம்மால்  வாழ்த்திட முடியும்.   
 பலரும் பலவிதத்தில் அவனை சொந்தம் கொண்டாடுக்கின்றனர், அவனை குழந்தையாய், நண்பனாய், தெய்வமாய், காதலனாய், கணவனாய், மன்னனாய், தேரோட்டியாய் எல்லாமாய் அவரவர் விருப்பதிட்கேட்ப அவனை போற்றுகின்றனர்.பாவத்தை போக்குகின்ற பரந்தாமனைப்பற்றி கொஞ்சம் கேளுங்களேன், அவன் நாமம் சொன்னால் போதும் அணைத்து பாவமும் பறந்து ஓடும்.   
கண்ணன் கார்குழல் வண்ணன். புல்லாங்குழல் கொண்டு அனைவரையும் கவரும் மன்னன். அன்புக்கு அவன் அடிமை. அன்பால் கட்டுண்டான். அகிலத்தை ஆளுக்கின்றான். அவனே அனைதுமாவான். பயமற்றவன், பிறப்பற்றவன் அவனே அவதாரபுருஷன். 
வாழ்கையில் ஒருவன் ஒவ்வரு பருவத்திலும் எப்படி வாழவேண்டும் என்பதை வாழ்த்துகாட்டியவன் ஸ்ரீ கிருஷ்ணன். அவனே அன்பின் சுடர். அவனே அனுபவ வெளிச்சம். அவனே ஆத்மா நம்பிக்கை.அவனே இடையன் அவனே பசுவுமாவன். அவன் கை புல்லாங்குழல் அதில் வரும் கீதமோ தேவகுரல். காதலாய் உருகுவான். மகனாய் அடம்பிடிப்பான். தோழனாய் தோளில் கைபோட்டு நடப்பான். எதிரியின் உயிரை எடுப்பான். அவனே உலகநாயகன்.
 கிருஷ்ண பக்திக்கு அவன் கொடுப்பான் முக்தி. நீ நீயாகவே இரு அப்போதும் தெய்வத்தை நினைத்திரு. கடமையை செய் மடமையை செய்யாதே என்று உபதேசித்தவன். அவனை நினைத்தால் உடலும், உள்ளமும் சுகப்படும். அவனது ஒவ்வரு பருவமும் நமக்கு  ஒவ்வரு பாடம். அவனை வணங்குவோம். அவன் சொன்னதை ஏற்று நடப்போம்.  சர்வம் கிருஷ்ணட்பனம்!

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

நான் காலம் பேசுகிறேன்...


நான் காலம் பேசுகிறேன் எனக்கு என் கடமையை செய்துதான் பழக்கம் வெட்டிப்பேச்சு பேசி பழக்கமில்லை, ஆனால் உங்களை உருவாக்கியவன் என்கின்ற முறையில் உங்களிடம் கொஞ்சம் பேச எண்ணுகிறேன்.  உங்களுக்கு நான் கொடுத்த ஆறாம் அறிவை அகந்தைக்கு பயன்படுத்தினீர்கள். உங்கள் அறிவை அழிவிற்கு பயன்படுத்தினீர்கள். எல்ல உயிர்களுக்காகவும் படைக்கப்பட்ட பூமியை உங்கள் சொந்த உபயோகத்திற்காக அழிக்கத் தொடங்கினீர்கள். உங்கள் கழிவுகளால் புனிதமான நதிநீரை கெடுத்தீர்கள். நச்சு புகைகளால் பூமியை வெப்ப காடாக்கினீர்கள். உங்களை பெரியவன் என்று நிரூபிக்க நீங்கள் செய்த கேவலங்களை பார்க்க சகிக்காமல் உலகம் உங்கள் கையில் இல்லை என்பதை நிரூபிக்க  சுனாமிகளையும், பூகம்பங்களையும் உங்களுக்கு கொடுத்தேன் ஆனாலும் உங்கள் ஆணவம் அடங்காமல் அணுஆயுதத்தை கையில் எடுத்துக்கொண்டு உலகை அழிக்கிறேன் என்று புறப்பட்டுவிட்டீர்கள். அட முட்டாள் மனிதர்களே! நீங்கள் அழிக்க நினைப்பது நான் படைத்த ஒரு சிறிய உருண்டையை. நீங்கள் கற்பனைகூட செய்யமுடியாத பிரபஞ்சத்தை காட்டுகிறேன். அதை பார்த்த பிறகு யார் பெரியவர் என்கின்ற முடிவெடுங்கள். நீங்கள் மேலே பார்க்கும் படத்தில் உள்ளதுதான் பூமி. இப்போது உங்கள் பூமி பெரியதாக உங்கள் கண்களுக்கு தெரியலாம் ஆனால் என்னுடைய படைப்பின் துவக்கமே தவிர முடிவல்ல.   
இப்போது தெரிகிறதா உங்கள் பூமி எங்கே இருக்கிறது என்று.என்னுடைய படைப்பின்  ரகசியம் அறிந்தவர் யாரும் தன்னை எல்லாவற்றிலும் மேலானவன் என்று கர்வப்படமாட்டார்கள், அனைத்தும் எனக்கே சொந்தம் என்று சொந்தம் கொண்டாடமாட்டார்கள். தனக்கு, தனக்கு என்று சுயநலமாக இருக்கமாட்டார்கள். என்னுடைய  படைப்பு இதோடு முடியவில்லை பாருங்கள் இன்னும் காட்டுகிறேன்.  

உங்கள் பூமி எங்கு இருக்கிறது தெரிகிறதா?  உங்கள் பூமியின் நிலை இதோ நீங்கள் பார்க்கும் நிலையில்தான் உள்ளது ஆனால் இதுவும் முடிவல்ல.இப்போது கர்வப்பட யார் இருக்கிறார்கள் பூமியில் நான்தான் பெரியவன் எனக்கே எல்லாம் சொந்தம் என்று கர்வப்படுபவன் அடிமுட்டாள் என்றே கருதிக்கொள்ளலாம். இன்னும் என் படைப்பை நான் காட்டுகிறேன் அதையும் பாருங்கள்
பெரிய சூரியணே அதைவீட பெரிய அர்ச்டுருஸ் (ARCTURUS) முன்னால் எவ்வளவு சிறியவையாக காட்சிதருவதை பார்கிறீர்கள் அல்லவா. இப்போது எங்கே உங்கள் பூமி? அதற்குள் ஏன் பைனாகுலரை தேடுகிறீர்கள். பூமியின் அளவுகோல் மிகசிறியது என்று உங்களுக்கு இப்போது தோன்றினால் உங்கள் அளவுகோல் என்ன? சரி என்னுடைய முழு படைப்பையும் பார்த்துவிட்டு பிறகு முடிவு செய்யுங்கள். 
  என்னை யார் போற்றினாலும், தூற்றினாலும் எதற்கும் சந்தோசமோ, வருத்தமோ படப்போவதில்லை.
உங்கள் அகந்தையை, பெரியவன், சிறியவன் என்கின்ற வேறுபாட்டினை கழைந்துவிட்டு உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி பாருங்கள் நான் இப்போது உங்கள் கண்களுக்கு என் முழு வடிவையும் காண்பிக்கிறேன். நான்தான் முலாதார சக்தி. நான் அன்னிச்சையாக செயல்படுபவன். நான் எல்லோருக்கும் சமமானவன். என்னை புரிந்துகொண்டவர்கள் ஞானி ஆகிறார்கள் அவர்கள் மறுபடியும் பிறப்பதில்லை. என்னை புரியாதவர்கள் மற்றும் புரிய முயற்சிக்காதவர்கள் மறுபடியும் பிறக்கிறார்கள். அவர்களது பிறப்பும், இறப்பும் எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கும். எனக்கு முக்காலமும் தெரியும். நேற்று நடந்தது, இன்று நடப்பது மற்றும் நாளை நடக்கப்போவது எல்லாம் எனக்கு தெரியும் ஆனால் என்னால் எதையும்  தடுக்க இயலாது. நான் அனைத்தும் அறிந்தவனாக இருந்தாலும் எனக்கும் விதியை மாற்றும் சக்தி கிடையாது ஆகையால் நான் கர்வப்பட்டு பயனில்லை . எதுவும் என் கையில் இல்லை அதனால் நான் கர்வப்படுவதில்லை. இதை  உங்களுக்கு உணர்த்தவே இப்போது பேசினேன்.

புதன், ஆகஸ்ட் 01, 2012

மரணம்


ஒரு வார்த்தை கேட்டால் நமக்கு நடுக்கம் வருகிறதே அந்த வார்த்தையை கேட்ககூட நாம் விரும்புவதில்லை. ஆனால் வாழ்கையில் ஒவ்வருவரும் சந்திக்கபோகிற விஷயம். தினமும் எங்கோ ஒரு இடத்தில் நிகழ்த்துகொண்டிருக்கும் விஷயம். யாரும் விரும்பாத விஷயம் அப்படி விரும்பினாலும் அதை செயலபடுத்த பயம்கொள்ளும் விசயம் "மரணம்". ஒரு குழந்தை இந்த உலகத்தில் ஜனிக்கும்போது அதன் முடிவும் எழுதப்பட்டுவிடுகிறது. அப்படிப்பட்ட மரணம் தனக்கு வரக்கூடாது என்பதில் எல்லோரது நம்பிக்கையாக இருக்கிறார்கள். பலர் தங்களுக்கான மரணம் வருவதற்கு முன்பே மரணபயத்தில் தாங்களே மரணத்தை வரவழைத்து கொள்கிறார்கள். மரணம் என்ற வார்த்தை கேட்டாலே மரணம் வந்துவிட்ட பயம்தான் ஒரு மனிதனை அதிலிருந்து தப்பிக்க பலவாறான தவறுகளை செய்யவைக்கிறது. ஒவ்வரு மரணமும் நமக்கு கற்றுத்தருவது என்ன? நீயும் ஒருநாள் மரணமடைவாய் அதனால் தலைகனத்தோடு ஆடாதே என்பதை எத்தனை பேரால் புரிந்துகொள்ள முடிந்தது. நாளை இறக்கப்போகும் மனிதன் இன்று இறந்தவனை பார்த்து அழுகிறான். இந்த மரணம் வாழ்கையைவீட சிறந்ததாக நினைத்து செய்யும் தற்கொலைகூட துன்பமுள்ள வாழ்கையைவீட கொடுமையானது. 

பகவத்கீதை சொல்கிறது "மரணம் என்பது உடலுக்கு மட்டுமே ஆத்மாவிற்கு மரணம் கிடையாது. ஆத்மாவை யாராலும் கொல்லமுடியாது, தண்ணீரால் நனைக்கமுடியாது, காற்றால் உலர்த்த முடியாது. நாம் அணியும் சட்டை பழையதாகி கிழிவது போல உடலாகிய சட்டை கிழிந்து வேறொரு உடல் என்னும் புதிய சட்டைக்குள் புகுகிறது. ஆத்மாவை கொன்றதாக நினைப்பவனும், கொலைசெய்யப்பட்டதாக நினைபவனும் முட்டாள்களே". ஆகவே மரணத்தை பார்த்து பயம்கொள்வது கூடாது. முற்றுப்புள்ளி இல்லாத வாக்கியமும் மரணமில்லாத வாழ்கையும் என்றுமே அர்த்தம்தராது.   

மரணம் என்பது இயற்கை நமக்கு கொடுத்த சுழற்சிமுறை. பிறப்பதும் பின்பு இறப்பதும் மீண்டும் பிறப்பதும் காலத்தால் நடந்துகொண்டே இருப்பவை. எந்த மனிதனும் இறக்காமல் இருக்கப்போவதில்லை அப்படியானால் யாருக்காக, எதற்காக "தான்" என்கின்ற ஆணவத்தோடு அலைகின்றான்?.தன் உயிர் எங்கிருக்கிறது என்பதுகூட அறியாதவன் எப்படி அடுத்தவர் உயிரை எடுக்கிறான்?. ஒவ்வருவரும் தனக்குள்ளேயே ஒரு மயானத்தை வைத்துக்கொண்டு அடுத்தவருக்காக ஒரு மயானம் தேடுவதுதான் வேடிக்கையாக உள்ளது. மரணத்தை ஒத்திப்போடலாமே தவிர மரணம் வராமல் தடுக்க யாராலும் முடியாது. அத்தகைய ஒத்திப்போடல்தான் மனிதன் இயற்கையை தன் அறிவால் வென்றுவிட்டதாக வந்த ஆணவம். எங்கு சென்றாலும் பின்தொடரும் மரணத்தை கண்டு பயப்படுவதும் தவறு, மரணத்தை அறிவால் வென்றுவிட்டதாக ஆணவம் கொள்வது தவறு. இரண்டுமே அறியாமையால் நிகழ்வது. உண்மையை அறிந்தவர் பயப்படவும்மாட்டார்கள், ஆணவப்படவும்மாட்டார்கள். மரணம் என்பது முழுஅமைதி அந்த அமைதியை மனதுள் பார்க்க பழகியவர்கள் மரணத்தை வீட மேலானவர்கள் அத்தகைய மரணம் வரும்வரை அமைதியாக காத்திருப்பார்கள்.