வெள்ளி, செப்டம்பர் 30, 2011

ஓர் இரவில்... ஓர் மரணம்... ( மர்ம தொடர்) பாகம்- 7



                               இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் போஸ்ட் மார்டன் ரிபோர்டை தனது அறையில் ஆராய்ந்து கொண்டிருக்கும்போது கார்த்திக் ரவீந்திரனை பார்க்க வருகிறார்.

     சார் உங்கள பார்க்க தினசெய்தி ஆசிரியர் கார்த்திக் வந்திருகிறார் என்று கான்ஸ்டபில் இளமாறன் அனுமதி கேட்கிறார்.

வரச்சொல் என்று சொன்னதும் கார்த்திக் உள்ளே வருகிறார்.

 வாங்க கார்த்திக் உட்காருங்க என்று இன்ஸ்பெக்டர் உபசரித்ததும் பேச்சை ஆரம்பிக்கிறார்.

சார் கேசை பற்றிய போஸ்ட் மார்டன் ரிப்போர்ட் என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சிக்கலாமா?

கார்த்திக் இது ஒரு சிக்கலான கேஸ் காரணம் இந்த கை ரேகை எங்ககிட இருக்கற மற்ற கைதிக யாரோடையும்
பொருந்தல. கொலையாளிக்கு இந்த கொலையை  புத்திசாலிதனம பிளான் போட்டு தடயம்
இல்லாம செய்ய முயற்சி செய்திருக்கான். கொலை செய்தது பணதுக்காகவோ, நகைக்காகவோ செய்யவில்லை,  அவங்க ஏதோ ஒரு
பொருளையோ, தடையத்தையோ தேடித்தான் இந்த கொலைகள் நடந்திருக்கணும். சிவா பத்தி உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க கார்த்திக்?

சிவாவ எனக்கு ஒரு பத்து நட்கலாதான் தெரியும். அவர எல்லோருக்கும் பிடிக்கும். ஒரு காரியத்த எடுத்தார்ன அத முடிக்காம விடமாட்டார் அவ்ளோ
ஈடுபாடு வேலையில். அதுவே அவர் உயிருக்கு ஆபத்த முடிஞ்சுருச்சு. ஆனா  சமையல்காரன் ராஜு ஏன் கொலை செய்யப்படானு தெரியல?

நான் விசாரிச்சதுல சிவாவும், ராஜுவும் சிறுவயசு நண்பர்கள், சிவா நல்லா  படிச்சு உங்க பத்திரிகைல வேலைக்கு சேர்ந்தார் அவரது நண்பன் ராஜு படிப்பு வராம சமையல்காரர் ஆகிட்டாரு.

சார் ஆனா சிவா ஏன் அவர் நண்பர எனக்கு சமையல் செய்ய அனுப்பினாரு?

சிவா உங்ககிட்ட ராஜு இருக்கிறது ஏதொரு ஒரு வகையில அவருக்கு  உதவும்னு நினைச்சிருக்கலாம். கார்த்திக் சிவா, ராஜு ரெண்டு பேரும் ஒரு திட்டதொடதான் உங்களுக்கு சமைக்க அனுப்பி இருக்கனும். அதை கண்டுபிடிக்க நீங்க எனக்கு கொஞ்சம்  உதவனும்.

கண்டிப்பா இன்ஸ்பெக்டர் நான் என்ன செய்யணும் சொல்லுங்க?

சிவா என்னென்ன கேசுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரு? யார் யார சந்திசாருனு நிருபமாகிட்ட பேசி தெரிஞ்சுகோங்க. அவங்க எங்களைவிட  உங்ககிட்ட கொஞ்சம் இயல்ப பேசுவாங்க.

ஓகே இன்ஸ்பெக்டர் நான் இப்பவே நிருபமாவை சந்திக்கறேன்.

சரி கார்த்திக் அவங்ககிட்ட பேசிட்டு என்ன கூப்பிடுங்க என்று கூரி கார்த்திக்கு விடையளித்தார்  இன்ஸ்பெக்டர்.

                                                            ( விசாரணை தொடரும்...)


 

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

ஓர் இரவில்... ஓர் மரணம்... (மர்ம தொடர்) பாகம்- 6


இன்ஸ்பெக்டர் கொடுத்த நம்பரை தனது தொலைபேசியில் பரிசோதித்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக்கும் மற்ற மூவரும் கார்த்திக் தங்கி இருக்கும் அறைக்கு விரைகிறார்கள்.

கார்த்திக் இப்போ உங்க சமையல்காரர் ராஜு எங்க தங்கி இருக்கார்?

இன்ஸ்பெக்டர் அவரு என் கூடதான் தங்கி இருக்கிறார்.

அப்ப  வாங்க உடனே உங்க அறைக்கு போவோம் என்று நால்வரும் கார்த்திக் அறையை நோக்கி அவசரமாக முன்னேறுகிறார்கள்.

கார்த்திக் சீக்கிரம் உங்க அறையை திறங்க  என்று ஆவேசத்துடன் சொல்லுகிறார் இன்ஸ்பெக்டர். 

கார்த்திக் அறையை திறந்த உடன் நான்கு பேருக்கும் மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. நால்வரும் 
உறைந்து போய் இருந்தார்கள். 

அப்போது இன்ஸ்பெக்டர் செல்போன் ஒலித்தது அழைத்தவர்  இன்ஸ்பெக்டர் ரவீந்தரனுடைய மேல் அதிகாரி.

ஹலோ சார் சொல்லுங்க!

என்ன ஆச்சு ரவீந்தரன் அந்த கொலை கேசு எதாவது துப்பு கிடைச்சுதா?

சார் இந்த  கேசோட இன்னொரு கொலையும் நடந்திருக்கு. சிவாவ கொலை செய்த மாதிரி நிருபமாவையும் கொலை செய்வத நிருபமாவிட்கு ஒரு கால் வந்துச்சு. அது கார்த்திக்   உடைய சமையல்காரர் ராஜு நம்பர். அந்த நம்பருக்கு கூப்பிடேன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. நாங்க நாலு பேரும் கார்த்திக் அறைக்கு வந்து பார்த்தோம் அங்க ராஜுவ கொலை செய்து தூக்குல  போட்டுடாங்க . 
ராஜு நெத்தியில "கொலைகள் தொடரும்" அப்படின்னு போட்டிருகாங்க சார். இது சாதாரண கேஸ் இல்லை சார் கொலைகாரன் ஒரு அபாயகரமான தொடர் கொலைகள் செய்ய கூடியவன். ஒரு சைகோ கொலைகாரன கூட இருக்கலாம். அவன் அந்த ராஜுவ டார்ச்சர் செய்து கொலை செய்திருகான் என்று நடந்ததை கூறி முடித்தார் இன்ஸ்பெக்டர் 
ரவீந்தரன்.  
ரவி நீங்க இந்த கேசபத்தி அப்பப்போ எனக்கு அப்டேட் பண்ணுங்க. நான் உடனே கமிஷினர் கூடவும் இதபத்தி  பேசிடறேன்.

ஓகே சார்! என்றபடி போன் ஆப் செய்தார் இன்ஸ்பெக்டர் ரவீந்தரன்.

கார்த்திக் இனிமேல்தான் நீங்க எச்சரிகைய இருக்கணும். நிருபமா உங்களுக்கு சென்னைல தெரிஞ்சவங்க யாரவது இருக்காங்களா?

ஆமா இன்ஸ்பெக்டர் என் தோழி தரமனில இருக்க.

சரி நீங்க இந்த கேஸ் முடியற வரைக்கும் தனிய இருக்க வேண்டாம் நீங்க அவங்களோட 
தங்கிகங்க. அப்பறம் கார்த்திக் நீங்களும் வெளிய தங்கிகங்க.அப்பறம் என் நம்பர் உங்ககிட்ட இருக்குள்ள எதாவது அவசரம்ன உடனே கூப்பிடுங்க.என்று மூவரையும் பத்திரமாக அனுப்பிவைத்துவிட்டு கொலையை ஆராய துவங்கினார் இன்ஸ்பெக்டர் ரவீந்தரன். 

 ( தொல்லைகள் தொடரும்... )

 

  



திங்கள், செப்டம்பர் 26, 2011

ஓர் இரவில்... ஓர் மரணம்... (மர்ம தொடர்) பாகம் - 5



முன்கதை சுருக்கம்: கார்த்திக் தினசெய்தி பத்திரிகைக்கு கோவையில் இருந்து  சென்னைக்கு மாற்றலாகி வருகிறான். அவனுக்கு துணையாக ராஜு என்ற சமையல்காரன் உடன் இருக்கிறான். காலை சிக்கிரமே எழுந்துவிடும் கார்த்திக் தனது  பால்கனியில் வேடிக்கை பார்துக்கொண்டிருக்கிறான், அப்போது கார்த்திக்குடன்    பத்திரிகையில் வேலை செய்யும் சிவா, கார்த்திக் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு   வழியாக ஜாக்கின் செலும்போது கொலை செய்யப்படுகிறான்.  இந்த செய்தி தெரிந்ததும்  கார்த்திக்கும்  துணையாசிரியர் பாலசுந்தரம்  
சிவாவின் உடலை  காண GH செல்கிறார்கள் . அங்கு  இன்ஸ்பெக்டரை சந்திக்கிறார்கள். அப்போது பாலசுந்தரதிட்கு நிருபமாவிடம் 
இருந்து போன் கால்  வருகிறது . அப்போது நிருபமா பாலசுந்தரதிடம் தன்னை கொலை செய்ய போவதாக 
யாரோ மிரட்டுவதாக கூருகிறாள் அதை கேட்டு  கார்த்திக், பாலசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டர் மூவரும் நிருபமாவை சந்திக்க செல்கின்றனர்.க்டரை சந்திக்கிறார்கள். அப்போது பாலசுந்தரதிட்கு நிருபமாவிடம் 
இருந்து போன் கால்  வருகிறது . அப்போது நிருபமா பாலசுந்தரதிடம் தன்னை கொலை செய்ய போவதாக 
யாரோ மிரட்டுவதாக கூருகிறாள் அதை கேட்டு  கார்த்திக், பாலசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டர் மூவரும் நிருபமாவை சந்திக்க செல்கின்றனர்.அப்போது   இன்ஸ்பெக்டர் லிப்ட் ஆபரேடர் சண்முகத்தை விசாரிக்கிறார்.
( இனி...)


நிருபமா பயந்தபடியே கதவை திறக்கிறாள்!

பயபடாதேமா நாங்கெல்லாம் உன் கூடவே இருகிறோம் உனக்கு ஒன்னும் ஆகாது என்று பாலசுந்தரம் ஆறுதல் சொன்னபடியே அறைக்குள் நுழைந்தார்.

இன்ஸ்பெக்டர் நிருபமாவிடம் விசாரணையை ஆரம்பித்தார்.

நீங்கதான் நிருபமாவ?

ஆ ஆமா சார்!

சரி என்ன நடந்ததுன்னு சொல்லுங்க?

நான் என் சொந்த ஊரு  திருவனந்தபுறத்துல இருந்து ஒருமணி நேரத்துக்கு முன்னாடிதான் என் அறைக்கு வந்தேன். என்னுடைய அறைய திறந்ததும் யாரோ ஜன்னல் வழியா என் ரூமுக்கு வந்து என்னுடைய எல்லா பொருட்களையும் அலங்கோலப்படுத்தி இருக்காங்க
என்று விம்மிய படி கூறினால் நிருபமா.

நகை? பணம்? எதாவது காணாம போயிருக்க?

இல்லை இன்ஸ்பெக்டர்! நான் நகையும்,பணமும் ஊருக்கு போகும்போது எடுத்துட்டு போய்டேன். அதனால எதுவும் திருட்டு போகல.

சரி உங்களுக்கு யாருமேலயாவது  சந்தேகம் இருக்க? 

இல்லை இன்ஸ்பெக்டர் எனக்கு இப்ப உள்ள சூல்நிளையில என்னால அந்தளவுக்கு சிந்திக்க முடியல.

சரி உங்களுக்கு போன் செய்து மிரடியதா சொன்னிங்களே.

ஆமா இன்ஸ்பெக்டர், நான் என் பொருட்கள் எல்லாம் அலங்கோலமா இருக்கறத பார்த்து பயந்து போய் இருந்தப்ப 
ஏதோ ஒரு நம்பர்ல இருந்து போன் வந்தது. அந்த குரலை இதுவரைக்கும் நான் எங்கயும் கேட்டதில்லை. அவன் சொன்னான் மரியாதையா நாங்க  தேடுறத
எங்ககிட்ட கொடுத்துடு இல்லை சிவா செத்த மாதிரி நீயும் சாவேன்னு சொல்லிட்டு வச்சுட்டான். சார் சிவாவுக்கு என்ன ஆச்சு அவரு உயிரோடதானே  இருக்காரு?

சாரி நிருபமா!அவன் போன்ல சொன்னமாதிரி சிவாவ கொலை செய்துட்டான்! என்று பதட்டத்தோடு 
பாலசுந்தரம் பதில் கூறினார்.

மிஸ். நிருபமா உங்க போன குடுங்க என்று இன்ஸ்பெக்டர் நிருபமா போனை வாங்கி அந்த நம்பரை பரிசோதித்தார். 

இந்த நம்பர் உங்க யாருக்காவது தெரியுமான்னு பாருங்க 7824921949 .

சார் இருங்க நான் பார்க்கறேன் என்றபடி இன்ஸ்பெக்டர் சொன்ன நம்பரை கார்த்திக் தனது 
செல் போனில் டயல் செய்தான். கார்த்திக் முகத்தில் ஒரே அதிர்ச்சி 
ஒ! மை காட்! இது என்னுடைய சமையல்காரன் ராஜுவுடைய நம்பர்.

அதை கேட்டு மற்ற மூவருமே அதிர்ச்சி அடைந்தனர்.

        ( மர்மம் தொடரும்...)

சனி, செப்டம்பர் 24, 2011

ஓர் இரவில்... ஓர் மரணம்... (மர்ம தொடர்) பாகம்- 4


முன்கதை சுருக்கம்: கார்த்திக் தினசெய்தி பத்திரிகைக்கு கோவையில் இருந்து  சென்னைக்கு மாற்றலாகி வருகிறான். அவனுக்கு துணையாக ராஜு என்ற சமையல்காரன் உடன் இருக்கிறான். காலை சிக்கிரமே எழுந்துவிடும் கார்த்திக் தனது  பால்கனியில் வேடிக்கை பார்துக்கொண்டிருக்கிறான், அப்போது கார்த்திக்குடன்    பத்திரிகையில் வேலை செய்யும் சிவா, கார்த்திக் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு   வழியாக ஜாக்கின் செலும்போது கொலை செய்யப்படுகிறான்.  இந்த செய்தி தெரிந்ததும்  கார்த்திக்கும்  துணையாசிரியர் பாலசுந்தரம்  
சிவாவின் உடலை  காண GH செல்கிறார்கள் . அங்கு  இன்ஸ்பெக்டரை சந்திக்கிறார்கள். அப்போது பாலசுந்தரதிட்கு நிருபமாவிடம் 
இருந்து போன் கால்  வருகிறது . அப்போது நிருபமா பாலசுந்தரதிடம் தன்னை கொலை செய்ய போவதாக 
யாரோ மிரட்டுவதாக கூருகிறாள் அதை கேட்டு  கார்த்திக், பாலசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டர் மூவரும் நிருபமாவை சந்திக்க செல்கின்றனர்.
    
                          ( இனி... )


மூவரும் ஜீப்பில் சென்று அடுக்குமாடி குடியிருப்பை அடைந்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் ஜீப்பை நிறுத்திவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் செல்லும்போது அங்கு வருவோர், போவோர் அனைவரையும் சந்தேக கண் கொண்டு பார்த்தார். அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே லிப்டினுள் மூவரும் சென்றனர். அப்போது லிப்ட் ஆபரேடர் சண்முகத்தை பார்த்து இன்ஸ்பெக்டர்

உன் பேர் என்ன? என்று கேட்கிறார்

ஸா! சார் என் பே பேர் சண்முகம் சார்!

இங்க எத்தன வருசமா லிப்ட் ஆபரேட்டரா வேலை பாக்கற?

ஆறு மாசமா சார்?

இதுக்கு முன்னாடி எங்க இருந்த?

உஸ்மான் ரோடு சார்!

இந்த அப்பார்ட்மென்ட்ல குடியிருந்த சிவாவ தெரியுமா?

தெரியும் சார்!

அவர் கொலை செய்யப்பட்டது தெரியுமா?

சா.....ர்! என்று வாயடைத்து நின்றான் சண்முகம் அதற்குள் அவர்கள் செல்லவேண்டிய இடம் வந்துவிட்டது!

நாங்க எப்ப கூப்பிடாலும் ஸ்டேஷன் வரணும் சரியாய் என்று இன்ஸ்பெக்டர் சண்முகத்திடம் கூரிவிட்டு மூவரும் நிருபமா இருக்கும் அறையை நோக்கி சென்றார்கள்!

  நிருபமா அறை கதவை தட்டியதும் நிருபமா பதட்டத்துடன் யா... யாரு? என்று கதவினருகே சென்று கேட்கிறாள்!

நான்தாம்மா பாலசுந்தரம் கதவ திறம்மா... என்று சொன்னதும் நிருபமா கதவை மெல்ல திறந்தாள்.

                         ( பதட்டம் தொடரும்... )


வியாழன், செப்டம்பர் 22, 2011

போற்றவும், பராமரிக்கவும் படவேண்டிய பொக்கிஷம் கோவில்கள்...


                                   கோவில் என்பது ஒரு மனிதனின்  வாழ்க்கையை மேம்படுத்த  முக்கியமான ஒன்றாகும். கோவில் என்பது  நமது  ஆத்மாவை அமைதிப்படுத்தும் இடம் ஆகும். அனைவர்க்கும் பொதுவான அன்பை மட்டுமே போதிக்கிற இடமும் கூட. இந்த கோவில் மனதின் ஆத்மாவை மட்டும் தூய்மைப்படுத்தவில்லை அழியப்போகும் உடம்பையும் தூய்மைப்படுத்துகிறது. அதனால்தான்  "கோவில் இல்லாத ஊரில் 
குடியிருக்காதே!" என்று முன்னோர்கள் பறைசாற்றி இருக்கிறார்கள். அதனால்தான் ஊருக்கு ஒரு கோவிலாவது கட்டினார்கள். ஊருக்கு ஒரு கோவில் என்பதே அவ்வளவு சிறப்பு என்றால் கோவிலுக்கு நடுவே ஊராக கும்பகோணம் இருப்பது அன்புக்குள் ஆன்மீகத்தையும், ஆன்மீகதுக்குள் அன்பையும் தேடுவோருக்கு உகந்த இடமாகும்.


அந்த காலத்தில் ராஜா ராஜா சோழனும், ராஜேந்திர சோழனும் கட்டிய மிக பிரமாண்டமான கோவில்கள் இப்போது நினைத்தாலும் இனிவரும் காலங்களில் கூட நினைத்தாலும் அப்படி  ஒரு சாதனையை நிகழ்த்திவிட  முடியாது.  மனதில் உள்ளதை சிற்பமாக்கி. சிற்பதையே கோவிலாக்கும் உன்னதம் இனி யாராலும் நிகழ்த்திவிட முடியாத அற்புதம். காலத்தால் அழியாத பொக்கிஷமாக இருக்கிறது அத்தகைய கோவில்கள். பல ஆண்டுகால 
உழைப்பு, பலரது தியாகே அதற்கு சாட்சி.  


கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல்  எத்தனையோ மனிதர்களை எத்தனையோ வருடங்களை சந்தித்த இத்தகைய கோவில்கள் நமக்கு மனதில் சாந்ததையே ஏற்படுத்துகிறது. பிரம்மாண்டம் என்பது கோவிலில் மட்டுமல்ல நம் மனதிலும் ஏற்படுகிறது அந்த பிரம்மாண்டமான  வியப்பு  அந்த கோவிலை கட்டிய நம் முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை. அவர்கள் வந்தோம் வாழ்ந்தோம் என்பதை மீறி அடுத்த தலைமுறைக்கடுத்த தலைமுறைக்கு என்று எண்ணிலடங்கா தலைமுறைகளுக்கு உதவும்படி கோவிலை கட்டியது அதிசயமும்,ஆச்சரியமும் ஏற்படுத்துகிறது. 
 ஆண்டாண்டு கால நம்பிக்கை அவரவர் வாழ்கையை மேம்படுத்த வைக்கப்பட்ட வழிபாடு என்று இந்த கோவில்கள் எப்போதுமே மக்களுக்கு ஒரு நன்மையை போதிக்கும் போதிமரம். அதை யார் சரியாக புரிந்துகொண்டு  கோவிலைப்போல் பொதுப்படையாக அனைவர்க்கும் அன்புகாட்டுகிறார்களோ அவர்கள் அந்த கோவிலை போல் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கிறார்கள். அத்தகைய கோவிலை நாடுபவர்கள்  அமைதி என்பது மிக முக்கிய விஷயமாகிறது.

"சாந்தம் லேது! சவுக்கியமும்  லேது!"  என்ற புகழ்பெற்ற தியாகராஜா  கீர்த்தனை   சான்று.

அமைதியற்ற மனது எப்போதுமே அலைபாயும் கடலலை போன்றது அதற்கு நிசப்தம் என்பதே கிடையாது. அப்படிப்பட்ட மனது கொஞ்சம்  சப்தத்தில் இருந்து விடுபட   கோவில் அவசியமாகும்.


கோவிலை கட்டியவர்கள் இப்போது உயிரோடு இல்லை என்றாலும் அவர்கள் கட்டிய கோவிலும், அவர்கள் காட்டிய வழியும் நமக்கு பயன்படுவது போல்  அந்த கோவிலை பராமரிக்க நல்ல மனது படைத்த மனிதர்களும், அரசும் முன்வரவேண்டும். அப்போதுதான் நமக்கு பின்னல் வரும் சந்ததிகளுக்கும் அந்த கோவில் முழுமையான ஒரு பிரம்மிப்பை, கலையை, அன்பை, அமைதியை, பக்தியை, நல்லென்னத்தை, மதிப்பை, மரியாதையை, வாழ்க்கையை அக் கோவில் நமக்கு தந்ததை 
போல் அவர்களுக்கும்   தரும். கோவிலை தூய்மையாக, தாய்மை உள்ளதோடு பராமரிப்பது நமது கடமை. அதுவே இந்த 
கோவிலை கட்டிய நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் ஆகும். 

ஓம் நமச்சிவாய!  ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய!


செவ்வாய், செப்டம்பர் 13, 2011

ஓர் இரவில்... ஓர் மரணம்...(மர்மத் தொடர் பாகம்- 3 )...



முன்கதை சுருக்கம்: கார்த்திக் தினசெய்தி பத்திரிகைக்கு கோவையில் இருந்து  சென்னைக்கு மாற்றலாகி வருகிறான். அவனுக்கு துணையாக ராஜு என்ற சமையல்காரன் உடன் இருக்கிறான். காலை சிக்கிரமே எழுந்துவிடும் கார்த்திக் தனது  பால்கனியில் வேடிக்கை பார்துக்கொண்டிருக்கிறான், அப்போது கார்த்திக்குடன்    பத்திரிகையில் வேலை செய்யும் சிவா, கார்த்திக் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு   வழியாக ஜாக்கின் செலும்போது கொலை செய்யப்படுகிறான்.  இந்த செய்தி தெரிந்ததும்  கார்த்திக்கும்  துணையாசிரியர் பாலசுந்தரம்  
சிவாவின் உடலை  காண GH செல்கிறார்கள் . அங்கு  இன்ஸ்பெக்டரை சந்திக்கிறார்கள். அப்போது பாலசுந்தரதிட்கு நிருபமாவிடம் 
இருந்து போன் கால்  வருகிறது  
    
                          ( இனி... )



 சார்! சார்! நான் நிருபமா பேசறேன் யாரோ என் போன் நம்பருக்கு போன் செய்து  சிவாவ கொலை செய்த மாதிரி என்னையும் கொலை செய்யப்போரதா  பயமுறுத்தராங்க. சார் ப்ளீஸ் என்ன காப்பாத்துங்க!

பதட்டப்படாதிங்க நிருபமா நீங்க இப்ப எங்க இருகிங்கனு சொல்லுங்க நாங்க அங்க 
வரோம் என்றார் பாலசுந்தரம் 


நான்   தி-நகர்ல உள்ள  சிவப்பிரகாசம் அப்பார்ட்மென்ட்ல ரூம் நம்பர் 335 லதான் இருக்கேன். சார் ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரம் வாங்க எனக்கு பயமா இருக்கு.

பயபடாதிங்க நிருபமா இன்ஸ்பெக்டர் எங்க கூடதான் இருகார் அவரையும் கூட்டிக்கிட்டு இப்பவே அங்க வரோம் என்றபடி செல்போனை ஆப் செய்துவிட்டு பதட்டத்துடன்  இன்ஸ்பெக்டரை 
பார்த்து  சிவாவை கொலை செய்தவங்க  நிருபமாவையும் கொலைசெய்யப் போவதாக  பயமுறுத்தி இருக்காங்க. இப்ப அவங்க தி-நகர் சிவப்பிரகாசம் அப்பார்ட்மென்ட்ல ரூம் நம்பர் 335 ல இருகாங்க என்று கூரி முடித்தார் பாலசுந்தரம் .

 அப்போது கார்த்திக் பதட்டத்துடன் சார் அதே அப்பார்ட்மென்ட்லதான் சிவாவும் குடியிருந்தாறு நானும் அதே  அப்பார்ட்மென்ட்லதான் குடியிருக்கேன்.எனக்கு அந்த அப்பார்ட்மென்ட்ல ரூம் ஏற்பாடு செய்தது சிவா சார் தான். இன்னைக்கு காலையில நான் என்னுடைய  பால்கனில இருந்து பார்த்த போது நிருபமா குடியிருக்குற 335 ஆம் நம்பர் ரூம் பூட்டியிருந்தது   நான் அந்த பக்கமா வேடிக்கை  பார்த்துகிட்டு  இருந்தப்போ   பூட்டியிருந்த
ரூம்ல  இருந்து லைட் எரிஞ்சு ஆப் ஆச்சு அப்பத்தான் சிவா சார்    அப்பார்ட்மென்ட் கீழ இருந்து எனக்கு போன் செய்தாரு. அப்ப எனக்கு அந்த 335 ஆம் நம்பர் ரூம் நிருபமாவுடையதுன்னு  தெரியாது.  


 யாரோ அந்த  அப்பார்ட்மென்ட்ல  இருந்துதான் சிவாவை  கொலை செய்திருக்கணும் என்றார் இன்ஸ்பெக்டர் ரவீந்தரன் சந்தேகபடும் தோரணையில்.

சரி வாங்க உடனே அங்க போகலாம் என்று பாலசுந்தரம் கூறியதும் மூவரும்  ஜீபிட்குள்  சென்று அமர்ந்தனர்.

( மர்மம் தொடரும்...)


  

திங்கள், செப்டம்பர் 12, 2011

ஓர் இரவில்... ஓர் மரணம்... (மர்மத் தொடர் பாகம்- 2 )...


முன்கதை சுருக்கம்: கார்த்திக் தினசெய்தி பத்திரிகைக்கு கோவையில் இருந்து  சென்னைக்கு மாற்றலாகி வருகிறான். அவனுக்கு துணையாக ராஜு என்ற சமையல்காரன் உடன் இருக்கிறான். காலை சிக்கிரமே எழுந்துவிடும் கார்த்திக் தனது  பால்கனியில் வேடிக்கை பார்துக்கொண்டிருக்கிறான், அப்போது கார்த்திக்குடன்    பத்திரிகையில் வேலை செய்யும் சிவா, கார்த்திக் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு   வழியாக ஜாக்கின் செலும்போது கொலை செய்யப்படுகிறான். 
    
                          ( இனி... )




கார்த்திக் அவரசர அவரசரமாக தனது மேல்பையை மாட்டிகொண்டு படபடப்போடு ஆபீஸ் செல்கிறான்.

வா கார்த்திக்! பாடிய மார்ச்சுரிக்கு எடுத்துட்டு போயிருக்காங்க வா நாமளும் அங்கு போவம் என்றபடியே கார்த்திக்கை அழைத்துக்கொண்டு GH செல்கின்றார் தினசெய்தி துணை ஆசிரியர் பாலசுந்தரம்.அங்கு இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் நடந்த செய்திகளை தனது உயர் அதிகாரிக்கு தெரிவித்து கொண்ருக்கிறார்.

 இன்ஸ்பெக்டர் தொலைபேசியில் பேசிமுடித்த பின் தன்னை  இன்ஸ்பெக்டருக்கு  
அறிமுகம் செய்து கொண்டதோடு   கார்த்திகை   இன்ஸ்பெக்டருக்கு அறிமுகம் செய்து வைத்தார் பாலசுந்தரம்  

நீங்கதா  அந்த கார்திக்கா? சிவா கிட்ட கடைசியா பேசினது நீங்கதானா?

ஆமா இன்ஸ்பெக்டர் நான் தான் அந்த கார்திக்!

சரி அவர் உங்ககிட்ட என்ன பேசினாரு?

நான் என் அப்பார்ட்மென்ட்  பால்கனில காலை 5 மணிக்கு நின்னுகிட்டு இருந்தேன்  அப்போது என்ன கீழ இருந்து பார்த்த சிவா என்னை  தொலைபேசியில்  கூப்பிட்டு என்னையும் அவரோட ஜாக்கிங் வர சொன்னார் நான்  வேற
  ஒருநாள் வரதா சொல்லிட்டு போன கட் பண்ணிட்டேன். அப்பறம் பாலசுந்தரம் சார் சொல்லித்தான் சிவா கொலையான சம்பவம் எனக்கு தெரியும் என்று கார்திக் சொல்லிமுடிக்கும் பொது டாக்டர் நடேசன் மார்சுரியை விட்டு வெளியே வந்தார்.

டாக்டர்! என்று இன்ஸ்பெக்டர் அழைத்தவுடன்

டாக்டர் பேச ஆரம்பித்தார் கழுத்துல ஆழமா வெட்டு காயம் இருக்கு மொதல்ல தலையில பலமா அடிச்சிருக்காங்க அப்பறம் கத்தியால கழுத அறுத்திருகாங்க. இது ஒரு திட்டமிட்ட கொலை   என்று கூறிவிட்டு   சென்றார் டாக்டர் நடேசன்.

சிவாவுக்கு யாராவது எதிரி இருகாங்களா ? என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் ரவீந்தரன்

நோ இன்ஸ்பெக்டர் எனக்கு தெரிஞ்சு இல்லை சிவா எப்பவும் எல்லார் கூடவும் நல்ல பழகுவார் அவர கொடுரம்மா கொல்ற அளவுக்கு அவருக்கு யார் எதிரின்னு தெரியல என்றார் பாலசுந்தரம்

அவரு பொண்ணுக  விசையதுல எப்படி? என்று அடுத்த கேள்வி கேட்டார் இன்ஸ்பெக்டர்

அவர் எங்க பத்திரிக்கையில  நிருபர  வேலை செய்யற  நிருபமா, எப்பவும் அவர் கூடவே இருப்பாங்க. மத்தபடி அவங்களுக்குள்ள எப்படி பட்ட உறவுன்னு எனக்கு தெரியாது  என்று பதில் சொல்லிகொண்டிருகும்போதே பாலசுந்தரத்தின் செல்போன் மணி ஒலித்தது. பாலசுந்தரம் தனது  செல்போனை எடுத்து பார்த்தார் அதில் நிருபமா என்ற பெயர் தெரிந்தது.

                                                                                                         ( மர்மம்  தொடரும்... )

ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

ஓர் இரவில் ஓர் மரணம்... (மர்மத்தொடர் பாகம்- 1 )



காலை முதல் இரவு உறங்கும் வரை எப்போதும் பரபரப்பாய் இயங்கிகொண்டிருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு புதிதாய் குடிவருகிறான் கார்த்திக். தினசெய்தி பத்திரிகையின் ஆசிரியரான கார்த்தி 
கோவையில் இருந்து மாற்றலாகி சென்னை வருவது இதுவே முதல்முறை என்பதால் அவனுக்கு உதவியாக ஒரு ஆளை சமையலுக்கு    ஏற்பாடு செய்யபடுகிறது.அந்த சமையல்காரன் பெயர் ராஜு.

என்ன சார் சண்டே கூட சிக்கிரம் எளு ந்துட்டிங்க? என்ற படியே காபியை கார்த்திக்கிடம் கொடுத்தான் ராஜு.

எங்கம்மா இருந்தவரைக்கும் என்ன ரொம்பநேரம் துங்க விடமாட்டாங்க என்ன சீக்கிரமா எளுந்து குளிக்க சொல்வாங்க அந்த பழக்கம் தான் என்றபடி காபியை குடித்துவிட்டு மெல்ல பால்கனி சென்று நோட்டமிட்டான் கார்த்திக்.

கார்த்திக் பால்கனி வழியாக பார்த்துகொண்டிருக்கும் போது மணி அதிகாலை 4 .00  அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எல்ல வீடுகளும் அப்போது பரபரபற்று  இருந்தது ஒரு வீடு மட்டும் பூட்டி இருந்தது அந்த வீட்டை உற்று கவனித்து கொண்டிருந்தான் கார்த்திக் அந்த பூட்டிய வீட்டில் ஏதோ ஒரு உருவம் நடமாடுவதை போல் அவன் உள்ளுணர்வுக்கு தோன்றியது. அப்போது அந்தவீட்டில் ஒரு விளக்கு திடீர்  என்று எரிந்து அணைந்தது. அவன் சற்று தடுமாறி பயந்தபடி பார்த்தான் அவன் செல்போன் ஒலித்தது.

ஆலோ என்று குரல் நடுக்கதோடு ஒரு பயந்த குரலில் பேசினான் கார்த்திக்.

ஹல்லோ கார்த்திக் எளுந்துடிய நான் சிவா பேசறேன் கீழ பாரு  நான் ஜாகிங் போறேன் இந்த வழியாதான்    எப்பவும் ஜாகிங் போவேன் நீயும் வரியா ஜாகிங் போகலாம் என்றான் கார்த்திக்குடன்  வேலை செய்யும் சிவா .

இட்ஸ் ஓகே சிவா நீங்க போங்க நான் வேற ஒரு நாள் வரேன் என்ற படியே போனை அணைத்து பாக்கெட்டுகள் வைத்துக்கொண்டன் கார்த்திக். அந்த பால்கனியில் இருந்து திரும்பிவந்து மேஜையில் அமர்ந்தான் கார்த்திக்.

என்ன சார் இந்த குளுர்லையும் உங்க முகம் இப்படி வேர்த்திருக்கு? என்று கேட்டான் சமையல்காரன்   ராஜு.

ஒண்ணுமில்ல ராஜு  ஐ  ஆம் ஓகே என்றபடி குளிக்க சென்றான் கார்த்திக்.

மணி காலை 7  கார்த்திக் தன் உடைகளை மாற்றிக்கொண்டு ஆபீஸ் செல்ல தயாரானான் கார்த்திக், அப்போது அவனது செல்போன் சிணுங்கியது.

ஹலோ என்றான் கார்த்திக் மறுமுனையில் பேசியவர் சொன்ன செய்தி கேட்டு அதிர்ந்துபோய் நின்றான். அப்போது பக்கத்தில் இருந்த ராஜு.

சார் என்ன ஆச்சு சார்? என்று பதட்டமாக கேட்டான்

சிவா சார்  பீச் ரோட்ல மர்மமான முறைல இறந்து கிடக்கறாராம் என்ற அதிர்ச்சி தகவலை முகத்தில் உள்ள வேர்வையை துடைத்த படியே சொல்லிவிட்டு  சென்றான் கார்த்திக்.

         ( மர்மம் தொடரும்...)


சனி, செப்டம்பர் 10, 2011

குறியீடுகள் பெரிதாக்கப்பட்டது... தத்துவம் மறைந்துவிட்டது...


                                          சாஸ்திர சம்பரதாயங்கள் தேவையா? இல்லையா? என்று பலர் விவாதிக்கும் நிலையில், நம் முன்னோர்கள் வகுத்த சம்பரதாயங்கள் தேவை, தேவையில்லை என்பதைவிட நாம் அதனை புரிந்துகொள்ளவில்லை என்பதே உண்மை. முன்னோர்கள் நம்மைவிட நன்றாகவே வாழ்கையை பற்றி யோசித்திருக்கிரார்கள்  என்பதுதான் உண்மை. இப்போது நமக்கு அத்தகைய சிந்தனை இயலாது போனதற்கு நம்முடைய வாழ்க்கை முறை மாற்றமே காரணம். தொலைக்காட்சியும், அலைபேசியும் நம்முடைய இயல்பான சிந்தையை மழுங்கடித்து விட்டது என்பதே உண்மை. நம் முன்னோர்கள் ஒரு ஆழ்ந்த உள் அர்த்ததிட்காக  வகுத்த குறியீட்டை பெரிதாக எடுத்துகொண்டு அதன் உண்மையான அர்த்தத்தை குழிதோண்டி புதைத்துவிட்டோம்.


                                  நாம் வாழ்க்கையை பற்றி புரிந்துகொள்ளவில்லை, முன்னோர்கள் வகுத்த வழிபாடு முறையையும் புரிந்துகொள்ளவில்லை. இதற்கான சரியான உதாரணம் நாம் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகரை கடலில் கறைப்பது. முன்னோர்கள் வாழ்க்கை தத்துவமாகிய எதுவுமே உண்மையில்லை நம்முடைய வாழ்கையும் அந்த விநாயகர் சிலை போல கறைந்துபோகும் என்பதை உணர்த்தவே விநாயகர் உருவத்தை களிமண் பொம்மையாக்கி அதை கடலில் கறைத்து வழிபட்டனர். அப்படி களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை கடலில் கறைகும்போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வாழ்க்கை தத்துவமும் பலருக்கு குறிப்பால் உணர்த்தப்பட்டது. இப்போது நிலைமை வேறு ஆணவம்,அகங்காரம் மற்றும் அடுத்தவர் நலத்தை பற்றி அக்கறை கொஞ்சம்கூட இல்லை, இயர்க்கை மாசுபடுத்துகிறோம் என்ற குற்ற உணர்வே இல்லாமல். பல
ரசாயனம்,வேதிபொருட்களால்  ( plastoparish ) உருவான மிக பிரம்மாண்டமான  ஒரு விநாயகர் சிலை செய்து அதில் உள்ள வண்ணகலவை ( paint ) காய்வதற்குள் அதை எடுத்துவந்து தன்னுடைய ஆடம்பரத்தை மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டுவது போல் ஊர்வலமாய் அதை கொண்டுவது நன்றாக உள்ள நதிநீரை, கடல் நீரை, குட்டையை மற்றும்  விநாயகர் சிலை கறைபதட்கு என்றே தோண்டப்பட்ட குழிக்குள் தண்ணீர் லாரிமுலம் கொண்டுவரப்பட்ட நீரில் அந்த பிரம்மாண்டமான  அந்த அழகான விநாயகரை முழ்கடித்து மிக இயல்பாய்  கறைய வேண்டிய விநாயகரை  குச்சி எடுத்து அடித்து அந்த சிலையை உடைத்து ஒரு கொடுரத்தை நிகழ்த்துவது கடவுளுக்கும் இதே கதிதான் பூமிக்கு வந்தால் என்று கடவுளையே பயமுறுத்தும் வேலை மிக ஜோராக நடந்துகொண்டிருகிறது மனதை கசப்பாக்குகிறது. அன்று விநாயகர் பிறந்தார் என்பதற்காக தர்ம அடிவாங்குவது நியாயமா?

தன்னை கடலில் கறைகும்படி ஒருபோதும் விநாயகர் கேட்டதில்லை,ஒரு குறியீடாக நாம்தான் அதை செய்கிறோம் அந்த குறியீடு வாழ்கையை பற்றியது வாழ்க்கைக்கு பின் அடையவேண்டிய முக்திக்கான வழிபாடு. அப்படிப்பட்ட வழிபாட்டை நதிநீர் மாசடையவும், குட்டிக்  குட்டி மீன்கள் வேதிபொருட்களால் சாவதட்கல்ல என்பது மக்கள் எப்போது உணர்வார்களோ அப்போதுதான் இயற்கை அழிவது தவிர்க்கப்படும். அதுவரை விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை உண்பதோடு நமது  வழிபாட்டை நிறுத்திக்கொள்வோம். அதுவே விநாயகருக்கும், இயற்கைகும்  செய்யும் பெரும் தொண்டாக இருக்கும். 


சனி, செப்டம்பர் 03, 2011

காத்திருத்தல் சுகமே...


காத்திருப்பதே ஒரு சுகமான அனுபவம். காத்திருத்தல் என்பது நம் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய விஷயம். ஒரு குழந்தை பிறக்க பத்துமாத காத்திருப்புதான் தாய்க்கு தன் குழந்தை  மீது அதிக ஈர்ப்பு வரக்காரணம். ஒன்று நமக்கு உடனே கிடைத்துவிட்டால் அதன் மீது நமக்கு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. அதன்மீது உள்ள மதிப்பு குறைந்துவிடுகிறது. காலப்போக்கில் அது நம் மனதை விட்டு அகன்று விடுகிறது. ஒன்று  நினைத்தவுடனே அது நமக்கு  கிடைத்துவிட்டால் பிறகு வாழ்கையில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்?. அப்படி கிடைக்கும் போது அந்த பொருள் மீது அலட்சியம் ஏற்படுகிறது அதன் பயன்கள் நமக்கு பெரிதாக தெரிவதில்லை.  ஒன்றை காத்திருந்து பெறும்போது அதன் உண்மையான மதிப்பு நமக்கு தெரிகிறது. அதன் மேல் நமக்கு ஒரு பாசம் ஏற்படுகிறது. எதையும் வீணாக்கும் சிந்தை  நம்மை விட்டு அகன்று விடுகிறது. நமக்கு அதன் மீது சலிப்பு ஏற்படுவதில்லை. ஒன்றை பெற காத்திருக்கும்போது   நமக்கு அதன் மதிப்பு  முழுமையை உணரமுடிகிறது.


காத்திருத்தல் என்பது ஒவ்வரு நாளும் ஒவ்வரு நிமிடமும் நமக்கு நடந்துகொண்டே இருப்பவை. அதேபோல் காத்திருக்கும் விஷயங்கலும் ஒவ்வொரு வயதிலும் மாறிக்கொண்டே இருக்கும். ஒன்று கிடைத்து விட்டால் அதை மறந்து விட்டு அடுத்த விஷயத்திற்காக காத்திருத்தல் என்பதற்கு மனம்  மாறிவிடுகிறது. ஒரு பொருளின் மீதோ நபரின் மீதோ நமக்கு பற்று ஏற்படின் காத்திருத்தல்  என்பது மிக நீளமானாலும் அந்த காத்திருத்தல் சுகமாகவே நம் மனதிற்குள் சென்று காத்திருக்கும் நேரத்தில் அந்த இனிமையான நேரங்கள் நம்மை ஆக்கிரமித்து விடுகிறது. எனவே அப்போது காத்திருத்தல் என்பது சுகமாக மாறிவிடுகிறது. அதே பொருள் அல்லது நபர் மீது நமக்கு சலிப்பு வந்த பின்பு காத்திருத்தல் என்கின்ற எதிர்பார்ப்பு மறைந்து கோபமாக அது மாறிவிடுகிறது.
ஒரு சில நேரங்கள் எல்லோரும் ஒரு இலக்கை நோக்கி காத்திருத்தல் என்பது அமைந்துவிடுகிறது. அது அன்றாடம் நாம் பார்க்கும் பேருந்து மற்றும் ரயில் வருவதற்கான காத்திருப்பு யாராலும் தவிர்க்கமுடியாத  ஒன்று, அப்படி காத்திருக்கும்போது காத்திருத்தளுக்கான   இலக்கு ஒன்றாக இருக்கும்போது அவரவர் எண்ண அலைவரிசை மாறுபடுகிறது. சிலர் அந்த நேரத்தில் தனக்கு நடந்த இனிமையான சம்பவங்களை நினைத்து சந்தோசப்படுவார்கள், சிலர்  கவலை    என்னும் முகத்தை அணிந்துகொல்வார்கள், சிலர்   யாரோ ஒரு சிலர்மீது உள்ள கோபத்தை மனதில் வைத்துகொண்டு மனதுக்குள் திட்டிக்கொண்டிருபார்கள், இன்னும் சிலர்    தாங்கள் எப்போதுமே சரியாக நடந்துகொள்வது  போல் மற்றவர்கள் பற்றியும், அரசு அதிகாரிகள் பற்றியும் குறை சொல்லிக்கொண்டிருபர்கள், சிலர்   எதை பற்றியும் கவலை படாமல் அங்கும் இங்குமாய் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் அந்த நேரம் யாரவது ஒருவருக்கு அலைபேசியில் அழைத்து தன் பொழுது போவதற்காக அடுத்தவர் பொழுதை கலவாடிக்கொண்டிருபார்கள்.ஒரு சிலர் மட்டுமே அந்த காத்திருத்தலை பயனுள்ளதாக்க புத்தகம் படிப்பார்கள். இப்படி காத்திருக்கும் ஒரு செயலுக்கு பல வகையான மனிதர்களின் செயல்வடிவங்களை பார்க்கலாம்.
சிலர் காத்திருத்தல் என்பதில் உடன்பாடு இல்லாமல் சோர்ந்து போய் காத்திருப்பதே தவறு அது நடக்காது என்ற எதிர்மறையான சிந்தையோடு தனது பயணத்தை முடித்துக்கொள்கிறார்கள். காத்திருத்தல்  மீது ஒரு வெறுப்பு வந்து விடுகிறது, காத்திருப்பது நடக்காதோ என்கின்ற கவலை வந்துவிடுகிறது. அந்த கவலை இறுதியில் அந்த காத்திருத்தலை அர்த்தமற்றதாக்கி  விடுகிறது. அதன்பின் காத்திருந்து முயட்சி செய்து வென்றி பெறுதல் என்கின்ற  கனவு அறுந்து விடுகிறது. எடுத்ததும் கிடைக்க வேண்டும் என்கின்ற வேகம், காத்திருபதட்கு தயாராக இல்லாமை என்கின்ற தவறான முடிவால் சிலர் தவறான  முடிவுகளை எடுத்துவிட்டு பிறகு அதற்காக காலம் முழுவதும் வருத்தப்படுகின்றனர்.
சிலரது காத்திருப்பு அரசிடமும், அரசு அதிகாரிகளிடமும் உள்ளபோது காத்திருத்தல் ஒரு கட்டாயமாக நமக்கு தினிக்கப்படுகிறது. அந்த நபர் தனது இயலாமைக்காக கோபப்படவோ, காத்திருப்பதை கைவிடவோ முடியாது. ஒருவரின் தேவையின் முக்கியத்துவம்தான் காத்திருத்தல் என்கின்ற கால அளவை நிர்னயிக்கிறது. அதற்காக   அந்த காத்திருத்தல் அவசியமாகிறது, தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

     
                            சிலரது காத்திருப்பு தனிமை என்னும் சோகத்தில் இருந்து மரணம் என்னும் முடிவை நோக்கியதாக உள்ளது. அந்த காத்திருத்தல் சோகத்தையே தரக்கூடியது காரணம் வாழ்கையை வாழும் ஆசை ஒருபக்கம் இருந்தாலும் 
தனிமை    என்னும் ஒருவித அழுத்தம் , வயது முதிர்ந்து விட்ட நிலையில் உடல் வலிவற்று விரக்தியோடு வாழ்வதை 
காட்டிலும் மரணம்  சிறந்ததாக காத்திருப்பது ஒரு வகையில் சிலருக்கு அமைந்து விடுகிறது.
சிலர் எந்த முயற்சியும் எடுக்காமலேயே எதற்கோ  காத்திருக்கிறேன் என்று தன்னையும் ஏமாற்றிக்கொண்டு பிறரையும் ஏமாற்றுவதும்  உண்டு. அது   சிறந்ததல்ல நம்முடைய முயற்சி இல்லாமல்  எதுவும் நம்மை அடைய காத்திருப்பதில்லை. காத்திருக்கும் சிந்தை மட்டும் நமக்கு நாம் விரும்பியது பெற உதவாது. ஆகவே நல்ல செயலுக்கான சிறந்த முயற்சியோடு கொஞ்சம் வெற்றிக்காக காத்திருப்பது  சுகமே!  என்பது புரியட்டும் இக்கணமே!


வியாழன், செப்டம்பர் 01, 2011

பள்ளிக்கூடம்...

"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே!...
இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே ஏன்? ஏன்? நண்பனே!..." என்ற கண்ணதாசனின் இன்ப வரிகள் பள்ளி சென்ற நாட்களை சற்று பின்னோக்கி செல்ல வைத்தது.  பள்ளிநாட்கள் யாராலும் மறக்கமுடியாத அவரவர்  மனதில் ஆழமாய்  பதிந்துவிட்ட ஒரு நினைவுச் சின்னம்.  அன்றிருந்த மகிழ்ச்சி, நாளை பற்றிய சிந்தனையற்ற கண்ணாமூச்சி கனவுகள், பொறாமையற்ற, கவலையற்ற அந்த பசுமை நினைவுகள் பலகாலம் நம்முடைய   பழங்காலத்தை பேசும் அந்த நினைவுகளை  நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட ஒவ்வரு வினாடியும் நம்மை விட்டு மிக இயல்பாய் ஒரு பட்டாம்பூச்சி பறப்பது போன்று நமது
கண்ணுக்கு தெரியாமலேய மறைந்து போய் விட்டது . ஆண், பெண் என்ற பேதமில்லாமல் விளையாடி, சண்டைபோட்டு பரிட்சைக்கு  பயந்து என இவற்றை நினைத்து பார்க்க சந்தோசமாகவும் அதே நேரம் நாம் செய்த தவறுகளை
நினைத்தால் சிரிக்கவும் தோன்றும்போது மனசு லேசாக வானத்தை வட்டமிடுகின்ற ஒரு உள்ளுணர்வு.


விடுமுறைக்காக ஏங்கிய காலம், முழு ஆண்டு  பரிட்சை முடிந்ததும் நண்பர்கள் சட்டையில் மையிட்டு விளையாடியது, அதற்கு சண்டைபோட்டு அடுத்த வகுப்பில் சமாதனமாகியது. இதை நினைக்கையில் கனவு வாழ்க்கையாக தோன்றும்  அந்த கால நினைவுகள் உண்மையில் அந்த நினைவு வரும்போதெல்லாம் நெஞ்சம் சில விசயங்களை மறப்பதில்லை. ஒரு அறைக்குள் எத்தனை பட்டாம்பூச்சிகள் எங்கோ அவரவர்  வாழ்கையை தேடி 
ஓடுகையில்  ஒரு நிமிடம் அவர்கள் படித்த பள்ளியை பற்றியோ, நண்பர்களை பற்றியோ, பாடம் எடுத்த வகுப்பாசிரியர்கள் பற்றி நினைக்கும்போது மனதிற்கு ஒரு இயல்பான சந்தோசம் வரும். 

பள்ளிக்கூடம் நமக்கு வெறும் பாடத்தை மட்டும்  கற்றுத்தரவில்லை பக்குவத்தை,பகுத்தறிவை, நட்பை, நாகரிகத்தை நமக்கு கற்றுத்தருகிறது. ஒரு சிறந்த கல்வி அறியாமை இருளை விரட்டும் ஒளியாக இருக்கும்போது அது நமக்கு சரியான பாதையை காட்டுகிறது. பள்ளியில் நாம் என்ன கற்கிறோமோ அதுவே நம்முடைய வாழ்கையின் இறுதிவரை வருகிறது. கல்வி என்பது வெறும் மனப்மாடம்  செய்து ஒப்பித்தல் அல்ல அறியாமை என்னும் சடலத்தில் இருந்து அறிவு என்கின்ற மறுபிறவி எடுப்பது. ஒரு தீக்குச்சி உறசப்படவேண்டும், ஒரு வைரம் தீட்டப்படவேண்டும், ஒரு   தங்கம் மெருகேற்றப்படவேண்டும் அதுபோல் கல்வி நம்மை நயப்படுத்தப்படவேண்டும். அப்படிப்பட்ட கல்வி நம்மை தலை நிமிர்ந்து வாழவைக்கும். அத்தகைய  கல்வியை,நண்பர்களை, வகுப்பாசிரியர்களை, பள்ளிக்கூடத்தை நினைக்கும் போது  ஒரு கவிதை  படித்த உணர்வு நமக்குள் ஏற்படுத்துகிறது .