உதவிகள் பலவுண்டு - அதில்...
மனித உயிர்களை காப்பது
அதில் ஒன்று!
******
மனித உயிகளை காப்பது...
மனிதர்க்கு செய்யும் தொண்டு - அதில்
புண்ணியம் பலவுண்டு!
வாழ்க்கை சதுக்கத்திலே...
மரணம் ஒரு தொடர்கதை
அதற்கு தற்காலீக முடிவுரை
எழுதிடவே முதலுதவி
செய்திடுவோம்!
******
எவர் வேண்டுமானாலும் - ஒரு
உயிர் எடுக்கமுடியும்
ஆனால் - ஒரு
உயிரைக் காக்க ஒரு சிலரால்
மட்டுமே முடியும்!
******
உலகில்...
உண்ணதமானது
ஒருவரது உயிர்
ஒரு சிறிய உதவி - அந்த
உயிரைக்
காக்கும் பயிர்!
காலத்தால்...
செய்த உதவி
சிறிதெனினும்
வானத்தை போல்
உயர்ந்து நிற்க்கும்!
******
உருவம் கண்டு...
உதவாதே
உதிரம் தடுக்க
மறவாதே!
******
உதவும் கரங்கள்...
உன்னோடு
உதவத் தெரிந்தால்
உடனே உதவிடு!
******
முதல் உதவி...
என்பது
மனித உயிரை
காப்பாற்றும்
முக்கியமான
பகுதி!
******
அதை...
புரிந்து சரிவர
செயல்பட்டால்
பலரது சாவைத்
தடுக்கலாம்!
- பா. மோகன் குமார்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக