செவ்வாய், ஜனவரி 06, 2015

குரு வணக்கம்...




குரு நம்மை நம் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு கொண்டுசெல்பவர். குருவிற்கு  என்றுஒரு மரியாதை எப்பவுமே உண்டு. குரு தன் நிலை தாழ்த்தபோதிலும் தனது சீடர்கள் நிலை உயர்வை கண்டு ரசிப்பவராக இருப்பரே உண்மையாக மதிக்க தக்க குருவாகும்.

                   " குரு பிரம்மா
                     குரு விஷ்ணு
                     குரு தேவோ -மகேஸ்வரகா
                     குரு சாக்ஸா
                     பரபிரம்மா தஸ்மைஸ்ரீ
                     குருவே நமக".

நம்மை தீய வழிகளிலிருந்து நல் வழிக்கு இட்டு செல்வதே குருவின் கடமையாகும்.



குருவை வணங்குவது கலைக்கும், கலைஞர்க்கும் உயர்வை தரும். குரு வணக்கமே பாரத கலையின் முதல் வணக்கம். ஆகவேதான் தாய், தந்தை,குரு பிறகு தெய்வம் என்றார்கள் தெய்வத்திற்கு முன்பு வணங்கவேண்டியது தாய், தந்தை, குரு ஆகும். தனக்கு தெரிந்த கலையை ஒழிவு மறைவின்றி தனது சீடருக்கு வழங்கும் ஒரு உயரிய நோக்கமே குருவாகும். ஒருவன் தன் நிலையில் இருந்து மேலான நிலையை அடைய குருவின் தயவின்றி முடியாது.



 எப்போது ஒரு சீடன் குருவிடம் பாடம் கற்க தயாராகிரானோ அப்போதே அந்த சீடனுக்கு பாடம் நடத்த ஒரு குருவும் தயாராகிவிடுவர். குருவிடம் யார் தன்னை முழுமையாக சரணடைகிரார்களோ அவர்கள் எல்ல கல்வியையும் அந்த குருவிடமிருந்து கற்கிறார்கள். ஒரு குரு தன்னைவிட சீடன் திறமையை இருப்பதை பார்த்து ஆனந்தம் கொள்வாரே தவிர பொறாமை கண் கொண்டு பார்க்கமாட்டார்.



குருவை வணங்கு உயர்வை பெரு. குரு பக்தி என்றுமே நம்மை கைவிடாது. குரு நம்முடைய அறியாமை இருளை நீக்கி நமக்குள்ள அறிவின் ஒளியை நமக்கு தருகிறார். நமக்கு கட்டுப்படுத்துபவரெல்லாம் எல்லாம் குருவல்ல நமக்கு கற்றுத்தருபவர்தான் உண்மையான குரு. நீ வாழ்வில் முழுமை அடைய உடனடியாக குருவை தேடி அடை என்று கூருவதும் அதன் அடிப்படைதான். குரு யாராகவும் இருக்கலாம் அவரால் நமக்கு நல்ல கல்வியை தரக்கூடியவராய் இருக்கவேண்டும்.




                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக