வெள்ளி, மார்ச் 02, 2012

இரவில் வாங்கினோம் சுதந்திரத்தை இன்னும் விடியவே இல்லை...

                     
                 "இரவில் வாங்கினோம் சுதந்திரத்தை இன்னும் விடியவே இல்லை" என்னும் வரிகளுக்கேட்ப இன்னும் இருளில்தான் இருக்கிறோம் மின்வெட்டு காரணமாக. இளைய சமுதாயம் வரண்ட வாழ்கையை மின் விநியோகமற்ற நிலையில் நாம் காண முடிகிறது. ஒரு சமுதாயம் முன்னேற கல்வி அவசியம் ஆனால் நமது கல்வியோ மாணவனை மந்த நிலைக்கு கொண்டுசெல்கிறது. இப்போதும் நம் கல்வி முறை மனனம் செய்த மாணவனுக்கே உரியது என்ற கோட்பாடுகள் அடிப்படையில் இப்போது அவர்கள் வாழ்க்கை மட்டுமல்ல கண் கோளாறு ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துவிட்டது இந்த மின்வெட்டு. பணமுள்ளவன் வீட்டில்   UPS பொருத்திக்கொள்ளலாம். மற்றவர்கள் நிலை என்ன?. அந்த வீட்டில் உள்ள மாணவன் படிக்க வேண்டாமா?. கல்வி வழங்குவதில்தான் ஏற்றத்தாழ்வு என்றால் பரீட்சைக்கு படிப்பதிலும்  ஏற்றத்தாழ்வு வந்துவிட்டது என்றால் அது  அவர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும்  என்பதே உண்மை.

 இந்த உலகத்தை படைத்தபோது எல்லாம் பொதுவாகத்தான் இருந்தது ஆனால் இப்போது பணம் உள்ளவனுக்கு தனி வாழ்க்கை பணமற்றவனுக்கு  தனி வாழ்க்கை என்றாகிவிட்ட நிலையில் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நிலை கடுமையாக பாதிப்பது நடுத்தரவர்க்க மாணவர்களே. இருள் வீட்டில்  மட்டும் இல்லை அவர்கள் வாழ்க்கையிலும் இருக்கிறது இப்போது. தேர்வு நாள் அன்று இப்படி குறைவான வெளிச்சத்தில் படித்தால் மாணவர்கள் எப்படி நன்றாக தேர்வு எழுதமுடியும்? . ஏற்கனவே குற்றங்களும், குற்றவாளிகளும்  பெருகிவரும் நிலையில் இப்போது இன்னும் அதிகமாக ஒரு வாய்ப்பு அதிகரித்துள்ளது இந்த மின் வீட்டு காரணமகாக.


பள்ளி நாட்கள் எப்போதுமே சந்தோஷமிக்க நாட்கள் ஆனால் இப்போது பள்ளி வாழ்க்கை சுமையாக மாறிவிட்டது. இப்படி ஒரு இருள்படிந்த கல்வி மாணவர்களுக்கு ஆரோக்கியமானது அல்ல இப்படி கல்வி கற்பது அவர்களுக்கு மன அழுத்தத்தையே தரும். 

கோவையில்  மட்டும்   கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் தொழில் வர்த்தகங்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது எந்த மின்வெட்டால், தினமும்  ஐம்பது கோடிக்கு  மேல்   நஷ்டமாகிறது. தொழில் முடங்கி சாப்பிடவும் பணம் இல்லாமல் பல வெளியூர்  வாசிகள் தவித்து வருகின்றனர். எட்டு மணிநேரம் மின் வெட்டு என்பது மக்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வரு தொழிலாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகமயமானது  தொடர்ந்து எல்லா நாடுகளுமே வளர்ச்சி விகிதத்தை நோக்கி விரைவாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நாம் அடிப்படை தேவைகளுக்கு கையேந்தி நிக்கும் நிலைமை நம்முடைய வளர்ச்சியை தடை செய்வதாக உள்ளது. இது நீடித்தால் பல குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது, மாணவர்கள் மடிப்பு மற்றும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்புள்ளது. உலக அளவில்  நமது தொழில் நஷ்டமடைய வாய்ப்புள்ளது என்பதை அரசு அறிந்து  சீக்கிரம் ஒரு நல்ல  நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நாட்டையும், மக்களையும், மாணவர்களையும்  காப்பாற்ற முடியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக