புதன், மார்ச் 28, 2012

நட்பு...

               
              "நட்பு" இந்த மூன்றேழுது மந்திரசொல் இல்லாவிட்டால் அந்த மனிதன் ஒரு மனநோய் உள்ளவனாகிவிடுவான். நட்பு ஒரு மனிதனை அவன் அறியாமலேயே பல மாற்றங்களை அவனுக்குள் நிகழ்த்திவிடுகிறது.
 காதலிக்காமல் கூட   ஒருவன் இருந்துவிடலாம் ஆனால் நட்பில்லாமல் இருக்கமுடியாது, இருக்கவும் கூடாது. நாம் யாரை
நம்புகிரோமோ,இல்லையோ நண்பனை கண்டிப்பாக நம்புவோம். நல்ல நட்ப்பை நாம் உயிரைக் குடுத்தாவது பெறவேண்டும்.ஆண்,பெண், நிறபேதம், உயர்வு,தாழ்வு என்று எதுவும் பார்துவருவதல்ல நட்பு என்பது. நட்பு என்பது மனம் சம்பந்தப்பட்ட விசயமே தவிர பணம் சம்பந்தப்பட்டதாக ஒருபோதும் இருக்கக் கூடாது. ஒரு நல்ல நண்பன் நம்மிடம் இருந்தால் ஒரு நல்ல வாழ்க்கை அமைவதற்கு சமமாகும். நல்ல நட்பு என்பது எதையும் எதிர்பார்த்து வருவதல்ல அது இயல்பாக வருவது. 


    காலம் எத்தனைதான் கடந்தாலும் நமக்குள் குதுகலத்தை ஏற்படுத்துவது
 நம்முடைய நட்பைவிட வேறெதுவுமில்லை. நமக்கு ஏற்படும் எல்லா சந்தோசங்களையும், துக்கங்களையும் சொல்லும்போது அதை ஏதோ முதல் முறை கேட்பது போல் ஆர்வமாய் கேட்பது நண்பனை தவிர வேறு யாராக இருக்க முடியும். நட்பு சிரிக்க வைக்கும், தவறு செய்யும்போது சிந்திக்க வைக்கும். நண்பன்கூட இருக்கும்போது எத்தகைய கவலையும் நெருங்காது
காக்கும் கவசமாக இருப்பது நட்பே ஆகும்.

எந்த பிரச்சனைக்கும் முன்னால் வந்து நம்மை காப்பது நண்பா் மட்டுமே. நல்ல நட்பு வாழ்க்கை முழுவதும் தொடருமானால் அந்த நட்பினால் நாம் நமது வாழ்கையில் ஒருபடி முன்னேறியிருப்போம் என்பதே உண்மை. நல்ல நட்பு  பல தீய விசயங்களிலிருந்து  நம்மை காக்கும் ஒரு கவசம். ஒரு பெண்ணை காதலித்தாலும், காதலில் தோல்வி என்றாலும் முதலில் நாம் பகிர்ந்துகொள்வது நம்முடைய நண்பர்களிடம்தான்.
நல்ல நட்பு  என்பது நம் வாழ்கையின்  சிறந்த விருது. நல்ல நட்பு நமது வாழ்கையை சுவையூட்டவந்த  வந்த  விருந்து. நமது கவலையை போக்க வந்த மருந்து. ஆகையால் நண்பர்களே! நல்ல நட்புக்கு தலைவணங்குவோம்.  

1 கருத்து: