
Ana Marquez-Greene, aged six, died in hospital after being shot at Sandy Hook Elementary School in Newtown, Connecticut. Picture: Twitter Source: Supplied
இப்போது தெரிகிறதா உலகம் எங்கு போய்க்கொண்டு இருக்கிறது என்பதை .நாம் எவ்வளவு துயரமான வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை. ஒரு இருபத்திநான்கு வயது நிரம்பிய "ஆடம் லான்சா" என்னும் மன நோயாளியின் வெறி செயலுக்கு அமெரிக்காவில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் அவனது வெறிபிடித்த தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் இப்போதைய தலைமுறையின்
தவறான முடிவுகளின் அஸ்திவாரம் என்பதை மட்டும் உணர்த்தவில்லை அவர்கள செல்லும்
பாதை சரிவர கவனிக்கப்படவில்லை என்பதையும் உணர்த்துகிறது. இறப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரும் எப்படிவேண்டுமானாலும் ஆனால் இப்படி வரும் இறப்பு யாரால் ஏற்றுக்கொள்ள முடியும்.
A woman waits to hear about her sister, a teacher, following a shooting at the Sandy Hook Elementary School. Picture: AP
இந்த இளைய சமுதாயம் கவர்ச்சிக்கும், சொகுசான வாழ்க்கைக்கும் கொடுக்கும் முக்கியதுவம் அந்த வாழ்க்கையின் அடிப்படை தெரியாமல் இருப்பதே பிரச்சனையின் முக்கிய காரணம். மீடியா ஒருபுறம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது, நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் வேண்டும் என்பதே தெரியாத தலைமுறை மறுபுறம். அதை தாண்டி தோல்விகளை ஒப்புக்கொள்ளாத மனப்போக்கு இவைதான் இப்போது இளைய சமுதாயத்தை படுகுழிக்கு எடுத்து செல்கிறது. ஒரு சிறு அவமானதிட்குகூட உயிரை விடும் இந்த இளையசமூகம் அதோடு நில்லாமல் மற்ற உயிரையும் கொன்றுகுவிப்பது என்ன நியாயம் ?.இன்று இந்த இளைய சமுதாயம் கண்டிப்பாக திருத்தப்படவேண்டும். இல்லை என்றால் ஒவ்வருவரும் தீவிரவாதியாய் மாறி பலரை தீர்த்துக்கட்ட தயங்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.
In this photo provided by the Newtown Bee, Connecticut State Police lead children from the Sandy Hook Elementary School after a reported shooting. Picture: AP/Newtown Bee/Shannon Hicks
துப்பாக்கி கலாசாரம் உள்ள நாடு எப்போதுமே பயத்தொடுதான் வாழவேண்டி இருக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். இதை புரிந்து கொண்டாவது அடுத்த தலைமுறை அமைதியை மட்டும் விரும்பட்டும். இறந்த அந்த அமெரிக்க குழந்தைகளின் ஆத்மா சாந்தியடையட்டும். இனி இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருக்கட்டும்.


மாற்றான் 








































