"கோ" படம் பார்க்கும் முன்பும் பார்த்த பின்பும் புரியாத புதிராய் இருப்பது கோ படத்தின் டைட்டில்தான். இந்த படத்தை தைரியமாக எடுத்த திரு. KV ஆனந்த் அவர்களுக்கு பாராட்டுகள். ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு டுவிஸ்ட் வைத்து படம் ஆரம்பம் முதலே விருவிருப்போடு படம் எடுத்துள்ளார்.
. "கோ" என்னை பொறுத்தவரை கோடையில் மழை வந்ததை போலத்தான் மக்கள் ரசித்தனர். படத்தில் கதாநாயகன் ஜீவவிட்கு கதாநாயகி கார்த்திகா அறிமுகபடுத்தும் போது ஒரு வசனம் வரும் இவர்தான் இலங்கையில் நடப்பதை எழுதும் ரிப்போர்ட்டர் என்று அறிமுகபடுத்தும் போது இலங்கையில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட "இசை பிரியா" நியாபகம் வருகிறது. இன்றைய அரசியலையும் நேற்றைய அரசியலையும் ( நடந்த விபரீத விசயங்களை) நியாபகம் படுத்தியது.
பிரகாஷ் ராஜ் முதல்அமைச்சராக நடித்தது முன்பு அவர் நடித்த "இருவர்" படத்தை நியாபகபடுத்தியது.
ஜீவா ஒரு பத்திரிகை போடோக்ராபர்ராய் படம் முழுக்க கேமரா கையுமாய் வந்து படத்தை கிளிக்கி கொண்டே இருக்கிறார். ஒரு காட்சியில் பத்திரிகை நிருபர்கள் இருவிதமாக காட்ட முயற்சித்துள்ளார் இயக்குனர். ஒன்று எதை பற்றியும்
கவலை படாது கிசு கிசு எழுதுவது. கண்ட கேள்விகளை கேட்பது என்று,மற்றொன்று
உயிரை பணயம் வைத்து உண்மையை மக்களிடம் சேர்ப்பது.
இவர்தான் "கோ" படத்தின் இரண்டவது கதாநாயகி. ஜீவாவை துரத்தி துரத்தி காதலிபதாய் ஆரம்பத்தில் காட்டினாலும். துணிச்சலான யாருக்கும் பயபடாத ஒரு பெண்ணாய் (இசை ப்ரியாவை) நியாபகபடுத்துகிறார்.ஆனால் இவர் பேசுவதாக வரும் ஒன்று,இரண்டு வசனங்களை தவிர்த்திருக்கலாம்.
குறிப்பாக ஒரு சிறுவன் இவரது பின்னால் அலைவது போல் காட்டுவது நகைச்சுவைக்கு என்றாலும் குடும்பத்துடன்
படம் பார்கவருகிரவர்களுக்கு அந்த சிறுவன் அலைவதைபோல் உள்ள காட்சியை தவிர்த்திருக்கலாம்.மற்றபடி தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கடைசியாக
அப்பாவித்தனமாய் இறக்கும் காட்சியில் நம் மனதில் பதிகிறார்.
ஜீவாவும் கார்த்திகாவும் காதலிப்பது தெரிந்ததும் விட்டுகொடுக்கும் காட்சி நட்புக்கான அடையாளமாய் காட்சியளிகிறார் .
கார்த்திகா பிளஸ் பாயிண்ட் "கண்கள்", மைனஸ் "நடிப்பு".
பாடல்கள் பொறுத்த வரை ஹாரிஸ் ஜெயராஜ் என்பதால் கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்தேன்
படத்திற்கான வேகம் பாட்டில் இல்லை. பாடல்கள் நன்றாக இருந்தாலும் ஹாரிஸ் கொஞ்சம்
சிறப்பாக செய்திருக்கலாம். kv ஆனந்த் அவர்கள் எடுத்த படம் "அயன்" அந்த படத்தை அவரே கிண்டல் செய்வது போல் ஒரு வசனம் வரும் அப்போது அவரை மனதுக்குள் பாராட்டமல் அடுத்த காட்சிக்கு போகமுடியவில்லை. இந்த படத்தில் யார் உண்மையான வில்லன் என்பது தான் முடிச்சு. இதை வசந்த் என்கிற கதாபத்திரம் சரியாக செய்துள்ளது.
வில்லன் கதாபத்திரத்தில் இவருக்கு சரியாக பொருந்துகிறது. உதாரணம்: தன் நண்பனாகிய ஜீவவிட்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது என்றதும்
நக்செலாக நடித்த போசீடம் "இரு நம்ப கதையை அப்பறம் பேசுவோம் மொதல்ல நான் அவன்கிட்ட அடிவாங்கிட்டு வரேன்". என்று சாதாரணமாக சொல்லும்போது சைலன்ட் வில்லன் என்ற பட்ட பெயரே கொடுக்கலாம்.
மொத்ததில் மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். எல்லோரும் ஒட்டு போடவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது படம். இந்த படத்தில் ஜீவவிட்கு நடிப்பில் நல்ல முதிர்ச்சி. கார்த்திகா தமிழில் முதல் படம் என்பதால் ஓகே. இரண்டவது கதாநாயகியும், வில்லன் நடிகரும் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளனர். கோடை விடுமுறையில் நல்ல படத்தை தந்த kv ஆனந்த் அவர்களுக்கு பட குழுவினர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.