வெள்ளி, ஏப்ரல் 29, 2011

"49 O" - நாகரிகமான மறுதலிப்பு

                                   அரசியல் என்னும்  அமுத ஊற்று  இன்று ஊழல், இலவசம் என்னும்  சாக்கடையாக மாறி இப்போது  பல வியாதிகளை மக்களுக்கு  பரப்பும் கிருமிகலகிவிட்டது.ஓட்டு போடுவது உரிமை என்றார்கள் மறுக்கவில்லை  ஜனநாயக கடமை என்றார்கள் மறுக்கவில்லை. நல்லவர்களாய் பார்த்து ஓட்டு போடுங்கள் என்னும்போதுதான் சற்று தடுமாற்றம் ஏற்பட்டது. கண்டிப்பாக காமராஜரையோ,காந்தியையோ,அப்துல் கலாமையோ,அன்னா ஹசரேவையோ  தேர்ந்தெடுக்க 
முடியும் என்ற நம்பிக்கை போனபின் நாம் யாரை தேர்ந்தெடுப்பது? இந்த அரசியல்வாதிகள் தைரியமாக யாருக்கும் பயப்படாமல் ஊழலை தனது சட்டையாக அணிந்துகொண்ட பிறகு நாம்   "49 O " போடுவது தப்பில்லை என்று தோன்றுகிறது.  

                                 ஆனால் "49 O " போட தைரியம் வேண்டும். அந்த தைரியம் நாம் உண்மையாக  ஜனநாயகத்தை காக்க, யாரிடமும் ஓட்டை  விற்கவில்லை என்பதுதான். இதைப்பற்றிய ஒரு அழகான பாட்டு நண்பர்கள் வடிவமைத்து இருகிறார்கள். இதையும் கொஞ்சம் ரசியுங்களேன்

பாட்டு பிடித்த "O" போடுங்க. மறக்காம எல்ல தேர்தலிலும் ஓட்டு போடுங்க.
நல்லவர்களை தேர்ந்தெடுங்க. உங்களுக்கு யார்க்கும் ஓட்டு போடவிருபமில்லைனா மட்டும் "49 O" போடுங்க.   




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக