மக்களுக்கு இப்போது டிராபிக் சிக்னலில் நிறம் அறியா தன்மை (Color Blindness) வந்துவிட்டது போலும். ஒரு சிலர் ரெட் சிக்னலை மதிபதில்லை. யாரும் ஒரு நிமிடம் கூட
காத்திருக்க தயாராக இல்லை போலும். உயிரை விட வேகமாக கண்முடித்தனமாக வாகன ஓட்டவே விரும்புகின்றனர்.
சாலையோ சாவுக்கு மணியடிக்க காத்து கொண்டிருப்பதை போல வாயை பிளந்து கொண்டு சிரிகிறது.
விழுந்து எழும் மனிதர்க்கு தான் தெரியும் எவ்வளவு வலிக்குமென்று.
இரு தினங்களுக்கு முன்பு நான் டிராபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு( Red signal) குறிப்பு: தமிழ் அர்த்தம் நன்றாகதான் இருகிறது தமிழர் மனம் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காகதான் சப்-டைட்டில் கொடுத்தேன். ரெட்சிக்னலில் நின்றுகொண்டிருந்தேன். வலது பக்கம் வாகனங்கள் வர தாமதம் ஆனது,
உடனே எனக்கு பின்னல் நின்ற வாகனம் விசில் அடிக்க ஆரம்பித்து விட்டது வழிவிட கூறி. ஒரு சிக்னலில் சிவப்பு வரபோவதை அறிந்து 80 km வேகம் எடுதார்கள் அவர்கள் உயிர் மீது கவலை படாவிட்டால் பரவா இல்லை ஆனால் மற்றவர்கள் உயிரும் அல்லவ
இதில் அடகுவைக்க படுகிறது இதை எல்லோரும் உணறுவது எப்போது?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக