"மேற நாம் ஜோகர்" ராஜ் கபூர் நடிப்பில் ஒரு அழகான படம். ஒரு ஜோகர் வாழ்வில் மற்றவர்களை மகிழ்விக்கலாமே தவிர அவர்களது
வாழ்க்கை துயரம் நிறைந்தது என்பதை
நாம் "சார்லி சாப்லின்" அவரது வாழ்க்கையில் பார்க்க முடியும். அதேபோல் ஒரு ஜோகர் வேடத்தை ஏற்று நடித்துள்ளார் ராஜ் கபூர் அவர்கள். அவரது வாழ்கையில் மூன்று பெண்கள் ஒவ்வரு காலகட்டத்திலும் வருகிறார்கள் எப்படி அவரைவிட்டு பிரிகிறார்கள் என்பதும் இறுதியில் அவர் ஜோகராகவே வாழ்கையை தொடர்வது என்ற தனது காதல் தோல்வியை படம் முழுக்க சோகத்தை மறைத்துக்கொண்டு ஜோகராகவே வாழ்த்திருக்கிறார் ராஜ் கபூர் இந்த படத்தில்.
பள்ளி பருவத்தில் தனது தந்தை பற்றி அறிய அவனது தாயிடம் கேட்டு தெரிந்துகொள்கிறான் அவனது அப்பா ஒரு ஜோக்கர் என்பதை அறிந்து அன்றிலிருந்து அவனும் ஒரு ஜோக்கராக வேண்டும் என்பதில் ஆசைகொள்கிறான். முதல் காதல் அவனது ஆசிரியை மீது ஏற்படுகிறது
தனது பிழைப்பை தேடி தர்மேந்திரா நடத்தும் சர்கஸ் ஒன்றிற்கு வரும் ராஜ் கபூர் தனது கோமாளிதனதால் அந்த சர்கசிலேயே ஜோக்கராக மக்களை மகிழ்விக்கிறார்.
அந்த சர்கஸில் வெளிநாட்டு பெண் ஒருவர் மீது காதல் கொள்ளும்போது அந்த காதல் நிலைக்காது என்பதை அறிந்து வருந்துவதும்.
தனது மகன் ஜோக்கராக இருப்பதை அறிந்த ராஜ் கபூர் தாய் அந்த சர்கசிலேயே உயிரை விடும்போது கண் எதிரே தாயின் உடலை வைத்துக்கொண்டு தனது சோகத்தை காட்டிக்கொள்ளாமல் ஜோக்கராக சென்று மக்களை சந்தோசப்படுத்த பாடுவதும் ஆடுவதுமான நடிப்பு நடிப்பின் உச்சத்தை தொடுகிறது. தாயின் பிரிவை தாங்க முடியாமல் தன்னிடம் உள்ள ஜோகர் பொம்மையை கடலில் வீசி எறியும்போது, ஒரு நாய் அதை கவ்விக்கொண்டு வந்த ராஜ் கபூரிடம் கொடுக்கும்போது அவர் விரும்பாவிட்டாலும் அந்த ஜோக்கர் என்கின்ற தனது அடையாளத்தை மறைக்க முடியாது என்பதை காட்சியில் காட்டி மனதை மயக்கிறது எனலாம்.
ஒரு ஆதரவற்ற ஆண் வேஷம் தரித்த பெண்ணாக வரும் பத்மினியை ஆதரிக்கும்போது ராஜ் கபூரிட்கு பத்மினி பெண் என்பது தெரியாது. ஒரு காட்சியில் அது தெரிந்ததும் கோபப்படும் ராஜ் கபூர் அவரை சமாதனபடுதும் ஒரு பாட்டினை பாடுகிறார் பத்மினி, ராஜ் கபூர் சமாதானம் அடைந்ததும் இருவரும் ஒரு நாடக கம்பெனியில் வேலை செய்கிறார்கள்.பத்மினி அழகை பார்த்து அவரை ஒரு கச்சாரிக்கு அலைக்கபடுகிறார். அந்த அழைப்பை விரும்பாவிட்டாலும் பத்மினிக்காக அந்த கச்சாரியை நடத்துகிறார் ராஜ் கபூர். அந்த கச்சேரிக்கு ஒரு மிக பெரிய நடிகர் வருகிறார்.
பத்மினியின் அழகையும், நடனத்தையும் பார்த்து அந்த நடிகர் பத்மினியை நடிகையாக்க முடிவெடுக்கிறார். இதை சற்றும் எதிர்பார்காத பத்மினி நடிக்க ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதை ராஜ் கபூர் விரும்பவில்லை. பத்மினி பெரிய நடிகையானதும் அந்த நடிகரே மணந்துகொள்கிறார். மீண்டும் ஒரு காதல் தோல்வி என்ற நிலையில் தனது பழைய நிலைமையான ஜோகர் வேடத்தை ஏற்றுக்கொள்கிறார் ராஜ் கபூர்.
காலம் கடந்த நிலையில் மக்களை மகிழ்விக்கும் ஒரு ஜோகராகவே வாழ்த்து ஒரு நாள் தான் காதலித்த மூன்று பெண்களையும் தனது சர்கஸ் நிகழ்ச்சிக்கு தனது ஜோகர் பொம்மை மூலமாக அழைப்பு விடுகிறார். அந்த மூன்று பெண்களும் ராஜ் கபூர் பற்றிய நினைவுகளோடு அந்த சர்கஸ் நிகழ்ச்சிக்கு வருகின்றனர். அப்போது தன்னிடம் உள்ள இதயத்தை காணாமல் போனதாக நடித்து எல்லோரது மனதிலும் நடிப்பால் இதயத்தை நிறப்புகிறார். ஒரு ஜோகர் தனக்குள் எத்தனை கவலை இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு மக்களை மகிழ்விபதே கடமை என்பதை காட்டி தனது பெயர் ஜோகர் என்பதை மக்கள் மனதில் விதைப்பதோடு படம் நல்லபடியாக முடிகிறது.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக