புதன், மார்ச் 14, 2012

" THE ARTIST"

 

" தி ஆர்டிஸ்ட்" படம் ஆஸ்கர் அவார்டுகளை குவித்தது பற்றி அறிந்து அந்த படத்தை பார்த்தபோது அந்த படம் உண்மையிலேயே ஆஸ்கர் பெற தகுதியான படம் என்பது புரிந்தது. வசனங்கள் பேசி நடிப்பதைவிட உடல் மொழியே வசனமாக்கும் பேசும் படம் என்பது சார்லி சாப்பலின் அவர்களுக்கு மட்டுமே உரியது என்பதை  மாற்றிவிட்டது இந்த படம். ஒவ்வரு காட்சியமைப்பும் அதற்கு சான்று எனலாம். ஒரு முழு திரைப்படத்தையும் வெறும் காட்சி வாயிலாக மட்டுமே மக்களை கவர்வது என்பது மிகப்பெரிய விஷயம். அதற்கு இந்த படம் ஒரு நல்ல உதாரணம்.


ஒரு நடிகனின் ஏற்ற, இறக்கங்கள் பற்றி அழகாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட நடிப்பின்  உச்சியில் இருக்கும் எல்லார்க்கும் இந்த படம் பொருந்தும். புகழோ, பணமோ என்றுமே நிலையானது அல்ல என்பதே படத்தில் சொல்லப்படும் கருத்து. அதன்படி படத்தின் முதல் காட்சியில் படம் ஓடிக்கொண்டிருக்கும். திரைக்கு பின்னல்  ஹீரோ நிற்கிறார். இந்த காட்சி சொல்லப்படும் கருத்து படத்தில் கதாநாயகனாக நடிக்கும் கதாநாயகன் வேறு, நிஜமான கதாநாயகன் வேறு என்பதே ஆகும்.
 

படம் முடிந்ததும் திரைக்கு முன்னால் தோன்றும் கதாநாயகன் தன்னை மட்டுமே படத்தின் வெற்றிக்கு காரணமாக காட்டிக்கொள்வது. அழகான அந்த கதாநாயகனை மக்கள்  ஆரவாரிக்கின்றனர்.

மக்கள் அந்த கதாநாயகனை பார்த்து ரசிக்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு பெண் அவரை  இடித்து விடுகிறார் எல்லோரும் அதிர்ச்சியாக பார்க்கும்போது கதாநாயகன் அந்த பெண்ணை கேலி செய்கிறார். உடனே அந்த பெண் அவரை  முத்தமிடுகிறார். இவ்வாறாக போகும் படத்தில் முத்தமிட்ட பெண் யார்? என்று செய்தி வருகிறது.



மறுநாள் அந்த கதாநாயகனது மனைவி அந்த செய்தியை படித்துவிட்டு கோபமாக  அமர்ந்திருக்கும்போது கதாநாயகன் சாப்பிட வருகிறார். இந்த காட்சியில் படத்தில் கதாநாயகன் கதாநாயகியை உருகி உருகி காதல் செய்வதுபோல் நிஜவாழ்க்கையிலும் அவர்களது மனைவியையும்
 காதலிக்க முடியாது என்பதை காட்சிபடுத்திய விதம் அழகானவை. படத்தில் காமிக்கப்படும் நாயானது மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவது ரசிக்கவைக்கிறது.

ஒரு நடிகை எப்படி உருவாகிறார் என்பதை அடுத்த காட்சியில் கதாநாயகனை அந்த பெண் கதானயகியாகியாக ஆகும்போது உள்ள காட்சி மிக சிறப்பானதாக அமைந்தது. ஒரு நடிகன் எப்படி உச்சத்தை அடைந்தான் பிறகு வீழ்ச்சி அவனை எவ்வாறு வீழ்த்தியது பிறகு மீண்டும் அந்த கதாநாயகன் தான் விட்ட இடத்தை பிடித்தானா ? என்பதை காட்சி படுத்திய விதம்  ரசிக்கும்படியாக அமைந்தது.

முதல் பகுதியில் கதாநாயகனின் முயற்சியால் அறிமுகமாகும் கதாநாயகி. அந்த நன்றிக்கடனுக்கும் அந்த கதாநாயகன் மேல் கொண்ட காதலுக்கும் சேர்த்து அவனுக்கு ஒரு வாய்ப்பை வாங்கித்தந்து கதாநாயகன் வாழ்க்கை மட்டுமல்ல உயிரையும் காப்பாதுகிறாள். படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் என்பதில் சந்தேகம் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக