சனி, மார்ச் 24, 2012

ராஜபக்சே அரசே இனியாவது தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய முயற்சி செய்...



இலங்கை தமிழ் மக்களை மண்ணோடு மக்க செய்த ராஜபக்சே நீ ஒன்றும் ஆயிரம் வருடம் வாழ்த்துவிடப்போவதில்லை அப்படி நீ வாழ்வாயேல் அது உனக்கு மரணத்தைவிட வலி மிகுந்ததாய் இருக்கும். நீ தமிழ் இனத்திற்கு செய்த துரோகம் கண்டிப்பாய் உன்னையும் உன்னை சேர்ந்தவர்களையும் அழிக்கும். இலங்கை மீதான போர் குற்றத்திற்கு இந்தியா, அமேரிக்கா உட்பட 24  நாடுகள் கையப்பமிட்டுள்ளன. ராஜபக்சே இந்தியா ஒருபோதும் உன்னுடைய அக்கிரமதிட்கு துணை நிற்காது சீனா உன்னுடன் இருக்கும் தைரியத்தில்தானே இந்தியாவை குறைத்து மதிப்பிடுகிறாய். நீ கண் மூடிக்கொண்டதால் உலகம் இருண்டுவிடப்போவதில்லை. நீ உன் கையால் சூரியனை மறைத்துவிட்டு சூரியணே இல்லை என்று சொன்னால் அது உண்மையாகிவிடாது. அதே போலதான் இலங்கை மீது தவறு இல்லை என்று கூறும் உங்கள் வாக்கும், நாக்கும் அழுகிப்போகும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். ராஜபக்சே! உனக்கு மன்னிப்பே கிடையாது நீ சொல்லவேண்டிய பதில்கள் நிறையவே இருக்கிறது.  ராஜபக்சே! நீயும் ஹிட்லரும் ஒன்றுதான் மக்களை காரணமில்லாமல் அழிக்கும் ராக்ஸசன் நீ. நீ ஒரு இரண்டாம் ஹிட்லர் உன்னால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு நீ பதில் சொல்லியே தீரவேண்டும்.

உனக்கு இறக்கமென்பதே  கிடையாதா? நீ என்ன சாத்தான் பெற்ற பிள்ளையா? உனக்கு கருணை கொஞ்சமும் கிடையாதா? நீ பிறக்கும்போது உனது இதயத்தை புதைத்துவிட்டு பிறந்தாயா? ஒரு பாவமும் அறியாத மக்களை, குழந்தைகளை நிருவானப்படுத்தி  கொன்றாயே  உனக்குமட்டும் ஆடை எதற்கு? 

 இந்த மரணத்திற்கு உன்னிடம் என்ன பதில் இருக்க முடியும் ராஜபக்சே.  நீ செய்த இந்த கொலைவெறிக்கு உனக்கு பூ போட்டு ஆரத்தியா எடுப்பார்கள். உன்னுடைய படுக்கை முட்படுக்கை ஆகட்டும், நீ அருந்தும் தண்ணீர் சாக்கடையாய் மாறட்டும், நீ உண்ணும் உணவு விஷமாகட்டும். இதுவே தமிழ் மக்களின் சாபம். நீ செய்திருக்கிறாய் அவ்வளவு பாவம்.

ராஜபக்சே உன்னுடைய முடிவின் ஆரம்பம் இது. மனசாட்சி உள்ளவர்கள் உனக்கு எதிராக சாட்சியளிப்பர்கள். மீண்டும் ஒரு தமிழர் ஆட்சி இலங்கையில் மலரும் அந்த நாள் ராஜபக்சே உன்னுடைய  வீழ்ச்சி நாள் என்பதை மறந்துவிடாதே. 

தமிழ் மக்களை துன்பப்படுத்துகிறாய் உன்னுடைய பாவத்தை கொஞ்சமாவது குறைக்க எண்ணினால் உடனே அவர்கள் வாழ வழிவகை செய், இல்லையேல் பாவக்கணக்கு கூடிக்கொண்டே போகும். ராஜபக்சே அரசே! இனியாவது தமிழ் மக்களுக்கு  நல்லது செய்ய முயற்சி செய். உன்னிடம் கெஞ்சுவதை தவிர என்னால் ஈடு  செய்ய ஒன்றுமில்லை இப்போது.



    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக