வியாழன், மார்ச் 08, 2012

பெண்ணின் பெருமை...


இன்று (08-03-2012) உலக மகளிர் தினம். அதற்காக எல்லா பெண்களுக்கும் மனமார்ந்த பெண்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உலகை ஆளும் இனமாக பெண்கள்தான் முதன் முதலில்  இருந்தனர். காட்டு வாழ்கையில் பசிக்கு உணவு தேடுவதற்கும் கொடிய மிருகத்திடம் இருந்து பாதுகாப்பதற்கும் உடல் வலிமை தேவைப்பட்டது   அந்த  நேரத்தில் ஹெற்றோஜென் அதிகாமான   வலிமைமிக்க ஆண்கள் வலிமை குறைந்த பெண்களை ஆள அப்போது ஆரம்பித்தது பெண் அடிமைத்தனம். ஒரு பெண் தனக்கு கட்டுப்பட்டு  நடக்க வேண்டும் என்று ஒரு ஆணின் தீராத ஆசைதான் பெண் அடிமைத்தனத்தின் உச்சகட்டம். அவளுக்கான கல்வி மறுக்கப்பட்டு வெறும் கலவிக்கென்று மட்டும் பயன்படுத்தப்படுபவள் ஆனாள். அக்காலத்தில் பெண்ணிற்கு உரிய அணைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டது. ஹெற்றோஜென்  அதிகமுள்ள ஆண் பெண்ணிற்கான அறிவுசார்ந்த விசயங்களை தடுத்து பெண் என்பவள் ஆணின் அடிமை என்பதை பெண்ணின் மனதில் ஆழமாக பதியவைத்து விட்டனர். "கணவனே கண் கண்ட தெய்வம்" என்றெல்லாம் அவள் மனதில் அடிமைத்தனத்தை விதைத்தனர். ஒரு ஆண் என்ன சொன்னாலும் கேட்டு அதன்படி நடப்பதே ஒரு நல்ல பெண்ணின் அடையாளம் என்பதை வலியுறுத்து "சதி" என்னும் சதிச்செயலை செய்து கணவன் இறந்தால் மனைவியும் அதே சிதையில் இறக்கவேண்டும் அவள்தான் உண்மையான பெண் என்றெல்லாம் இருந்ததை "ராஜ ராம் மோகன் ராய்" அவர்களின் தீவிர எதிர்ப்பினால் அந்த நிலைமாறியது.


        ஒவ்வரு கட்டமாக ஒவ்வரு கண்டமாக மாறித்தான் பல மாற்றங்களை ஏற்றித்தான் பெண்கள் இந்த நிலையை அடைந்தனர். பெண்களுக்கு சொத்து மறுக்கப்பட்டு, கல்வி மறுக்கப்பட்டு, குழந்தை திருமணம் நடத்தப்பட்டு, சதி என்னும் கொடிய சதிச்செயல் அரங்கேற்றப்பட்டு, பெண் சிசுக்கொலை செய்யப்பட்டு, பாலியல் தொழிலில் தள்ளப்பட்டு, பிள்ளை பெரும் இயந்திரமாக இருத்தப்பட்டு இப்போதுதான் பெண்கள் வெளிச்சம் பெறப்பட்டிருக்கிரார்கள். 


இன்றும் 33 சதவிகிதம் இடஒதுக்கிடு பெறமுடியாமல் தவிக்கும் நிலை இருந்தாலும் பெண்கள் இல்லாத  துறை இன்று 
இல்லை என்னும் அளவிற்கு வளர்த்து உள்ளனர். ஒரு நல்ல குடும்பத்தை நிர்வாகிக்கும் ஒரு பெண்ணால் ஒரு நாட்டையும் நிர்வாகிக்கும் தலைவராக 
மாறிவிட்டனர்.


                 உலக அளவில் சிறந்த திரைப்படம் மட்டுமல்ல ஆஸ்கர்  அவார்ட்  பெற்ற " THE IRON LADY" படம் ஒரு பெண் என்பவள் நினைத்தால் வீட்டை  மட்டுமல்ல  பிரிட்டன் நாட்டை ஆளவும் முடியும்  என்பதை நிருபித்த மார்கரட் தட்சர் அவர்களது வாழ்க்கை வரலாறை அற்புதமாக படமாக்கி உள்ளனர். ஒரு வலிமைமிக்க பெண்மணியாக பிரிட்டனை பதிமூன்று வருடம் ஆட்சி செய்தவர்.


மார்கரெட் தட்சேர் ஆட்சி செய்த காலத்தில் இந்திரா காந்தி அவர்கள் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்தார். 


வீட்டையாளும் பெண்ணாக இருந்தாலும் நாட்டையாளும் பெண்ணாக 
இருந்தாளும் அவர்களால் வீடிட்கும், நாடிட்கும் பெருமை என்ற வகையில் அத்தகைய அணைத்து 
பெண்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக