வெள்ளி, மார்ச் 23, 2012

முன்ஜென்ம நியாபகம்...



                           நாம் இவ்வுலகில் பிறக்கிறோம் இங்கு வாழவும் ஒரு சந்தர்பம் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் வாழும் நாட்களில் நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வரு விசயங்களையும் நமக்கு நடக்கும்போது மட்டுமே தெரியும்படியாக ஒவ்வரு விநாடியும் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது. உலகம் மிக பிரம்மாண்டமான ஒரு உருண்டை பந்து அதில் நாம் மிக மிக சிறிய உயிர். இந்த உயிரானது உடலைவிட்டு பிரிந்து அடுத்த பிறவியை எடுக்கிறது. இதைத்தான் உடல் ஒரு சட்டை ஆத்மா என்பது யாராலும் அழிக்க முடியாத      
நித்யசொரூபமானது என்று பகவத் கீதையில் சொல்லப்பட்டு உள்ளது .நமக்கு அடுத்த நொடி மறைக்கப்பட்டும்கூட தவறுகள் குறைவதில்லை. ஆனால் அடுத்து நடக்கப்போவது அனைத்தும் முன்பே தெரிந்துவிட்டலோ அது பல மோசமானா செயலையே நமக்கு கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்து முறைப்படி பார்க்கும் போது உடல் என்பது ஒவ்வரு காலகட்டத்திலும் நிலை மாறி பின் மீண்டும் பிறப்பெடுக்கிறது இப்படியாக பிறவி என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கிடைக்கவேண்டியது கிடைத்தே தீரும், எடுக்கவேண்டிய பிறவியை எடுத்தே தீருவோம். அப்படியாக எடுக்கப்படும் பிரவியானது நமது முற்பிறவியின் பாவ, புண்ணியங்களை அடக்கியதாக இருக்கும். உயிர் ஒரு உடலை அடைவது என்பது அவரவர் "கர்மா" என்று பொருள்படுகிறது. நமக்கு முற்பிறவி என்பது நாம் அறியாதா ஒன்று என்றாலும் ஒரு சிலருக்கு முற்பிறவியின் நியாபகங்கள் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அப்படியான ஒரு பெண்தான் 1987 ஆம் வருடம் பிறந்த பூர்ணிமா தனது மூன்றாவது வயதில் தனக்கு முற்பிறவியில்  ஒரு விபத்து நடந்ததாகவும் அந்த விபத்து ஒரு பஸ் தன்னுடைய மார்பின் மீது ஏறிவிட்டதாகவும் கூரியிருக்கிறாள். அவள் கூரிய  அனைத்தும் சரியாக இருந்தது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் முற்பிறவியில் விபத்து நடந்த மார்பு பகுதியில் உள்ள தழும்பு பூர்ணிமா உடம்பில் பிறப்பில் இருந்தே இருந்திருக்கிறது. முற்பிறவியில் ஒரு ஆணாக பிறந்திருந்தார் அப்போது விபத்து நடந்ததாக சொல்லப்படும் ஆண்டு ஏப்ரல்  1985 பூர்ணிமா பிறந்தது இலங்கையில் 1987. முற்பிறவியில் தனது உறவினர்களை சரியாக அடையாளம் சொல்லி எல்லோரையும் ஆச்சரியப்படவைதார் பூர்ணிமா.

ஷர்மிளா தேவி பிறந்தது 1929  ஆம் ஆண்டு, மூன்று வயதுவரை எல்ல குழந்தைகளை போல் இருந்த சர்மிளா தேவி தில்லியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். அதற்கு பிறகு நான்காவது வயதில் தனது முற்பிறவி பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார் முற்பிறவியில்  தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் தனக்கு கணவனும் ஒரு ஆண் குழந்தையும் இருபதாகவும் தனது ஊர் தில்லியில் இருந்து 45  கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரா என்ற ஊர் பெயரை சொல்லி தான் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்ததாகவும் கூரி   விலாசதையிம் கொடுத்துள்ளார். அந்த விலாசதிட்கு ஷர்மில தேவியின் அப்பா கடிதம் எழுதினார் அந்த கடிதத்திற்கு பதில் வந்தது அதில் அவர் குறிப்பிட்டுள்ள அனைத்தும் உண்மை என்று வந்தது. பிறகு முற்பிறவியில் உள்ள அந்த கணவனும் ஷர்மில தேவியைவிட சற்று வயது அதிகமுள்ள அவரது முற்பிறவி மகனும் டில்லிக்கு வந்து சர்மிளா தேவியை பார்த்தனர். சர்மிளா தேவி தாய்மை உணர்வோடு தன முற்பிறவி மகனை பார்த்து அழுதுள்ளார். 


முன் ஜென்ம நியாபகம் பற்றி சில படங்கள் கூட  பார்க்க சுவாரசியமாக இருக்கும் ஆனால் அவை உண்மையாக நடந்தால் எப்படி இருக்கும்?.பலருக்கு மறைக்கப்பட்ட ரகசியம் சிலருக்கு அம்பலமாகிவிடுவது சில நேரங்களில் நிம்மதியை தொலைக்கும்படியாகிவிடுகிறது.சில நேரங்களில் அதுவும் ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. 
    
"எனக்குள் ஒருவன்" படம்  கூட முன்பிறவியில் தன்னை கொன்றவர்களை பழிவாங்கும் படமாக எடுக்கப்பட்ட படம். உண்மையில் இப்படி ஒரு முன் ஜென்மத்து நினைவு வந்தால் ஒருவருக்கு எப்படி இருக்கும் என்பது கற்பனையாக சொல்லிவிட முடியாது. அது வரமா? சாபமா? என்பது அவரவர்களது  வாழ்கையை பொறுத்த விசயம். 

முற்பிறவி பற்றி கடைசியாக வந்து சக்கைபோடு போட்ட   படம் "ஓம் சாந்தி ஓம்". இவ்வாறாக ஒரு முற்பிறவி நியாபகம்  வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. உங்களால் அது முடிந்தால் அந்த அனுபவம் பற்றி சொல்லும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக