திங்கள், ஏப்ரல் 30, 2012

"MAN VS WILD - BEAR GRYLLS " - நிஜவாழ்க்கையில் ஹீரோ....

உலகத்தில் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்களா? என்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது டிச்கோவேரி சேனலில் " MAN VS WILD " நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் BEAR GRYLLS அவர்களை பார்க்கும்போது. இவர் ஒரு அசாதாரண மனிதர் உலகில் மனிதன் எங்கெல்லாம் தனியாக மாட்டிக்கொள்கிரானோ அங்கெல்லாம் பேர் க்ரில்ஸ் அவர்கள் எப்படி உயிர் பிழைத்திருப்பது என்கின்ற முறையினை நமக்கு கற்றுதருகின்றார். மனிதன் செல்லமுடியாத பகுதிகள்கூட  பேர் க்ரில்ஸ் அவர்களின் சாகசம் நம்மை வியக்கவைகிறது. டிச்கோவேரி சேனலில் நான் விரும்பிப்பார்ப்பது  மட்டுமல்லாமல் பிரமிக்கக்கூடிய நிகழ்ச்சி இது என்றும் சொல்லும் அளவுக்கு பல சாகசங்களை அவர் நிகழ்த்திக்காட்டுகிறார்.


மனிதர்கள் நாகரிகம் அறியா காலத்தில் இருந்து எப்படி உணவுக்காகவும், குடிநீருக்காகவும், வாழ்க்கை நடத்துவதட்காகவும் கஷ்டப்படிருப்பர்கள் என்பதை பேர் க்ரில்ஸ் அவர்கள் படும் கஷ்டத்தில் இருந்து நமக்கு புரிகிறது. இங்குதான் நமக்கு வகைவகையான உணவும், ஆடம்பரம் எல்லாம். பணக்காரன், ஏழை, படித்தவன், படிக்காதவன், நாகரிகம் அறிந்தவன், நாகரிகமற்றவன் எல்லாம் நாம் நாட்டில் வாழும் வரைதான். காட்டுவாழ்க்கை என்பது முற்றிலும் மாறுபட்டது. அங்கு நமது உயிரை பாதுகாப்பது மட்டுமே முக்கிய பிரச்சனையாகும். நமக்கு விலங்குகள் இரையாகின்றனவா? அல்லது விலங்குகளுக்கு நாம் இரையாகின்றோமா? என்கின்ற கேள்விதான் முதன்மையாக நமக்கு நிற்பது. உணவு உயிர் வாழ்வதற்காக என்பது இல்லாமல் சுவைக்காக உண்பது என்ற நிலைமையில் நாம் வாழுகிறோம். ஆனால் காட்டு வாழ்க்கை அப்படியல்ல எது கிடைக்கிறதோ அதை உண்டு உயிரை காப்பற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம். அதை தான் பேர் க்ரில்ஸ் அவர்கள் நமக்கு வழிகாட்டியாக செயல்படுகிறார்.

உலகில் உள்ள எல்ல மனிதர்களும் செய்ய யோசிக்கும் வேலையைகூட யோசிக்காமல் செய்கிறார் பேர் க்ரில்ஸ் அவர்கள். உணவு எது கிடைத்தாலும் அதை சளைக்காமல் உண்ணும் பேர் க்ரில்ஸ் கிடைப்பதை எல்லாம் அப்படியே பச்சையாக (வேகவைக்காமல்) உண்ணுகிறார். சில நேரம் அவர் சாப்பிடும்போது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்  என்பதுபற்றிய   எந்தவித கவலையும்  இல்லாமல் உயிர் வாழ தேவையானது என்ற அறிவுரையோடு மனிதன் உண்ணும் அட்டகாசம் உண்மையில் என்ன சொல்வது என்று தெரியாமல் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

பேர் க்ரில்ஸ் உயிர்வாழ தேவையான அனைத்தையும் செய்பவர். அவர் ஒருநாள் கூட வாழமுடியாத இடத்தில் கூட ஒரு வாரம் சென்று அந்த அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அவர் சாப்பிடும் உணவு என்னவெனில் வண்டுகள்,புழுக்கள், பச்சை மாமிசம், கிழங்கு, என்று எதையும் விட்டுவைப்பதில்லை. வெயிலில் நீர்சத்து குறையும் நேரத்தில் கூட தனது சிறுநீரையே நீராக பருகும் ஒரு வித்யாசமான மனிதர். பேர் க்ரில்ஸ்சிடம் எனக்கு பிடித்தது, தான் என்ன செய்ய நினைக்கிறாரோ அதை பயப்படாமல் செய்வது. பலமுறை  எலும்பு முறிந்து, பாம்பு கடித்து, என்று எண்ணிலடங்கா துயரத்தை சந்தித்தாலும் தன்னம்பிக்கை குறையாத மனிதர் பேர் க்ரில்ஸ். அவர் கொடுக்கும் ஒவ்வரு அறிவுரையும் எங்கோ ஒரு மனிதர் இப்படி காட்டில் சிக்கி உயிருக்கு போராட நேர்ந்தாலும் அவரது உயிரை காப்பாற்ற பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

பேர் க்ரில்ஸ் அவர்கள் செய்யும் சாகசங்கள் கிட்டதட்ட ஹாலிவுட் படங்களை மிஞ்சிவிடும். படங்களில் காட்டுவது நிஜவாழ்க்கைக்கு ஒத்துவராது ஆனால் பேர் க்ரில்ஸ் அவர்களின் சாகசம் நமக்கு பாடம் கற்பிப்பது போல் உள்ளது. அது நமது நிஜவாழ்க்கையில் எங்காவது எசக்கு பிசக்காக மாட்டிக்கொண்டால் காட்டாயம் உதவும் என்று சொல்லமுடியும்.

நாம் பார்க்கும் படங்களில் வரும் ஹீரோக்களின் சாகசங்களை பார்த்து பாராட்டுகின்றோம். அது போலியான செட்டிங் என்று தெரிந்தும் அந்த ஹீரோவை பாரட்டும் நாம் நிஜவாழ்க்கையில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு பாடம் கற்பிக்கும் பேர் க்ரில்ஸ் போன்ற மனிதர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது சரியாக இருக்காது. பேர் க்ரில்ஸ் நிஜவாழ்க்கையில் உண்மையான ஹீரோ. அவரது அசாதாரணமான திறமைகள் கண்டிப்பாக பாரடப்படவேண்டியவைகள். நான் பேர் க்ரில்ஸ்சின் ரசிகன் என்று சொல்வதில் பெருமை அடைகின்றேன். பேர் க்ரில்ஸ்சின் இந்த சாகசம் மக்களுக்கு ஏற்படுத்தும் விழிப்புணர்வு நீண்ட பயணமாக அமைய வாழ்த்துகிறேன். எனக்கு பிடித்த சாகச ஹீரோ பேர் க்ரில்ஸ் என்று கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.


வியாழன், ஏப்ரல் 26, 2012

மாயன் கூற்று உண்மையாகுமா?...


உலகத்தின் முடிவு என்று மாயன்களின் கணிப்பு 21-12-2012  அன்று உண்மையாகுமா? யார் இந்த மாயன் எதற்காக உலகத்தின் முடிவு நெருங்கிவிட்டதாக நமக்கு பயமுறுத்துகிறார்கள். மாயன்களின் காலம் 250 TO 900 AD என்று கூறப்படுகிறது. அவர்கள் வானசாஸ்திரத்தை ஆராய்ந்திருக்கிறார்கள். பூமி சூரியனை சுற்றும் காலம், மற்ற கிரகநிலையை ஆராய்திருக்கிரார்கள்.

Tzolk'in calendar: named days and associated glyphs
Seq.
Num. 1
Day
Name 2
Glyph
example 3
16th C.
Yucatec 4
reconstructed
Classic Maya 5
Seq.
Num. 1
Day
Name 2
Glyph
example 3
16th C.
Yucatec 4
reconstructed
Classic Maya 5
01Imix'MAYA-g-log-cal-D01-Imix.pngImixImix (?) / Ha' (?)11ChuwenMAYA-g-log-cal-D11-Chuwen.pngChuen(unknown)
02Ik'MAYA-g-log-cal-D02-Ik.pngIkIk'12Eb'MAYA-g-log-cal-D12-Eb.pngEb(unknown)
03Ak'b'alMAYA-g-log-cal-D03-Akbal.pngAkbalAk'b'al (?)13B'enMAYA-g-log-cal-D13-Ben.pngBenC'klab
04K'anMAYA-g-log-cal-D04-Kan.pngKanK'an (?)14IxMAYA-g-log-cal-D14-Ix.pngIxHix (?)
05ChikchanMAYA-g-log-cal-D05-Chikchan.pngChicchan(unknown)15MenMAYA-g-log-cal-D15-Men.pngMen(unknown)
06KimiMAYA-g-log-cal-D06-Kimi.pngCimiCham (?)16K'ib'MAYA-g-log-cal-D16-Kib.pngCib(unknown)
07Manik'MAYA-g-log-cal-D07-Manik.pngManikManich' (?)17Kab'anMAYA-g-log-cal-D17-Kaban.pngCabanChab' (?)
08LamatMAYA-g-log-cal-D08-Lamat.pngLamatEk' (?)18Etz'nab'MAYA-g-log-cal-D18-Etznab.pngEtznab(unknown)
09MulukMAYA-g-log-cal-D09-Muluk.pngMuluc(unknown)19KawakMAYA-g-log-cal-D19-Kawak.pngCauac(unknown)
10OkMAYA-g-log-cal-D10-Ok.pngOc(unknown)20AjawMAYA-g-log-cal-D20-Ajaw.pngAhauAjaw

மாயன் காலேண்டர் சொல்லவருவது என்ன?
உலகின்  மொத்தமனித மாசுகளால் மயான பூமியாய்
 மாறிக்கொண்டிருக்கிறது.
வெப்பம் அதிகமாகிறது.
கடல் மட்டம் உயருகிறது.
காற்று சூறாவளியாக மக்களை வாட்டுகிறது,
சுனாமி,பூகம்பம் என்று பிரச்சனைகள் மக்களை
அன்றாடம் பயமுறுத்துகிறது.
அப்படியிருந்தும் மக்கள்
யாரும் திருந்துவதாக தெரியவில்லை.
இப்போது மிகவும் மோசமான
 சூழ்நிலையில்தான் நாம் வாழ்த்துகொண்டிருக்கிறோம்.
அப்படியானால் மாயன் சொல்வது போல் உலகத்தின் முடிவு  நெருங்கிவிட்டதா?


மாயன் காலேண்டர் ஏன்   21-12-2012யில்
முடிவடைய வேண்டும்?
 அதற்கு என்ன அறிகுறியென்று
ஆராய்ந்து பார்க்கும்போது
மாயன் சொல்வது போல் பூமியை
தாக்கும் ஏதோ ஒன்று
வான்வெளியில் இருந்து வந்து
கொண்டிருக்கிருக்கலாம்.
 அப்படியில்லை என்றால் சூரியனின் வெப்பதனல்
நேரடியாக நம்மை தாக்கப்போகும் அபாயம் இருக்கலாம்.
அது  பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து
உருவாக்கிக்கொண்டிருக்கிருக்கலாம்.
அது சுனாமியாகவோ , பூகம்பமாகவோ
விஸ்வரூபம் எடுக்கலாம்  என்றெல்லாம்
 பயமுறுத்தினாலும் உண்மையில் அன்று என்ன நடக்கும்
என்று யாருக்கும் தெரியாது.

மாயன் என்பவர்கள் பழங்குடியின மக்கள்.
அவர்கள் தங்கள் குழந்தைகளை பலியிட்டனர்.
அதோடு இல்லாமல் அவர்களும் தங்கள் இரத்ததால்
தாங்களே  இறைவனுக்கு அபிசேகம் செய்து அதை
 நெருப்பிலிட்டனர். மாயன்கள்  எதற்காக தங்கள் குழந்தைகளை தாங்களே பலிகொடுக்க வேண்டும்?
எதற்காக அவர்களை அவர்கலே  வருத்திக்கொள்ளவேண்டும்?
   என்று யோசித்தால் அவர்கள் தங்கள் குழந்தைகளை
 பலிகொடுப்பத்தின்
 மூலம் இந்த உலகத்தை காப்பாற்ற முடியும்
என்பது அவர்களின் ஆழமான நம்பிக்கை. அவர்கள் தங்களின்
 உயிர் பலிதான் இந்த உலகை காப்பாற்றப்போவதாக
உண்மையாக நம்பினார்கள். அவர்களின் கணிப்புப்படி
108 சந்திரனை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கினால் சரியாக
 108 ஆவது சந்திரன் வைக்கும்போது சூரியனை அடைந்துவிடலாம் என்பதை சரியாக  கணித்தவர்கள். அவர்களின் கணிப்பு
சரியாக இருக்கும் என்று பலராலும்  நம்பப்படுகிறது.

அவர்கள் உலகம் அழியப்போகிறது  என்று சொல்லவில்லை ஏதோ
ஒரு பெரிய மாற்றம் பூமிக்கு  நிகழப்போகிறது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அது நமக்கு முன்னால் வாழ்ந்த
டினாசர் கதியை  நியாபகப்படுத்துகிறது. பலகோடி
 வருடங்களுக்கு முன்பு  டினாசர் இனம் ஒரு மிகப்பெரிய
 எறிகல் ஒன்றின் தாக்கத்தால் கூண்டோடு அழிந்தது.
அதற்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு பிறகுதான்
 மனித இனம் தோன்றியது. உலகின் கடைசியாக
 தோன்றிய இனம் மனித இனம். அதே போல்
 கடைசியாக அழியப்போகும் இனமும் மனித இனம்தான்.
உலகில் ஒவ்வரு உயிரினமும் எப்படி தொன்றியனவோ
அப்படியே அழியவும் செய்யும். அப்படியான 
ஒரு அழிவு இயற்கையாக வருவதே நல்லது. ஒரு அணுகுண்டில் 
உடல் சிதறி சாவதைவிட. பூமியில் பிறந்து வாழும் நாம்
 அதே பூமி பிளந்து சாவது எவ்வளவோ மேலானது
என்றே தோன்றுகிறது. எப்படியும் அழிவு வரப்போகிறது
அது இயற்கையாக இல்லாவிட்டாலும் மூன்றாம்
 உலகயுத்தம் தொடங்கிய மறுநாளே உலகம் கதிர்வீச்சால் அழிந்துவிடும். வரப்போகும் சாவை பார்த்து பயம்கொள்ளாதிரு
 மனமே என்றுதான் மனம்  தினம் இறைவனை வேண்டுகிறது.  சொல்வது மாயனோ இந்த மோகனோ யாராக இருந்தாலும்  
என்றைக்காவது ஒரு நாள் நாம் சாவை சந்திக்கத்தான் போகிறோம்
அதற்காக இன்று வருத்தப்பட அவசியமில்லை.
சாவு வரும்வரை வாழ்வு நிச்சயம். நாம் வாழும்போது நமக்கு
என்றோ ஒருநாள் சாவு நிச்சயம், இதை புரிந்துகொண்டால் எல்லா நாளும் நமக்கு இனியநாள்தான். 


ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

"மகளிர் மட்டும்" - பெண்ணின் பெருமையை உணர்த்தும் படம்...


 நாம் நமது வாழ்கையில் நிறைய படங்களை பார்க்கிறோம் நிறைய மனிதர்களை சந்திக்கிறோம். ஆனால் ஒரு சில படமோ, மனிதர்களோ நமக்கு என்றைக்கும் மறப்பதில்லை. நாம் எத்தனை பெரிய மனிதர்களானாலும் அவற்றின் தாக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும். எனக்கு பத்து வயது இருக்கும்போது குடும்பத்துடன் "மகளிர் மட்டும்" படத்தை கோவையில் சாந்தி திரையரங்கில்  சென்ற பார்த்த  நியாபகம். ஒரு முறை மதுரை சென்றபோது ஒரு வீடியோ கடையில் மகளிர் மட்டும் படம் இருப்பதை பார்த்ததும் எனக்கு என் சிறுவயதில் திரையரங்கில் பார்த்த நியாபகம் வந்தது, உடனே அந்த படத்தை வாங்கி வீட்டில் வைத்திருந்தேன். பல நாள் அந்த படத்தை பார்கவில்லை வேறு ஒரு படம் பார்க்க எடுத்தபோது மகளிர்  மட்டும் படம் என் பார்வையில்பட்டது மீண்டும் எனக்கு  என் பழைய சிறுவயது நியாபகங்கள்.இன்று பெண்கள் மீது ஒரு மரியாதை இருக்கும் என்றால் அந்த படம் தந்த தாக்கமாக இருக்கலாம்.படத்தை பார்க்கும் தாக்கம் பிறந்தது படம் எவ்வளவு சுவாரசியமானது என்பதை படம் பார்த்தவர்களுக்கு  நான் சொல்லத்தேவையில்லை. இருந்தாலும் சொல்லாமல் இருக்க என்னால் முடியாது. படிக்காமல் இருக்க உங்களால் முடியாது என்பதால் சொல்கிறேன். 
 குடும்பசூழ்நிலைக்காக வேலைக்கு போகும் பெண்கள் படும் அவதியை, சித்ரவதையை, கேவலமான ஆண்களின் பார்வையை சந்திக்கும் பல லட்சம் பெண்களில் மூன்று பேராக நடித்திருப்பது ரேவதி, ரோகினி மற்றும் ஊர்வசி. மூவருமே நடிப்பை வெளுத்து வாங்கியிருக்கிறார்கள் இந்த படத்தில். இந்த படத்தை முதல் முறை பார்பவர்கள் கண்டிப்பாக விழுந்து விழுந்து சிரிக்கும் வசனத்தை எழுதியிருப்பது என் பெயர் கொண்ட நடிகர் கிரேசி மோகன் அவர்கள். குடும்ப சூழ்நிலைக்காக வேலைக்கு வரும் பெண்களை காமத்தால் அடையத்துடிக்கும் கார்மெண்ட்ஸ் கம்பெனி மேலாளராக நடித்திருப்பது நாசர் அவர்கள். 
நாசர் செய்யும் சில்மிசங்களை பொறுக்கவும் முடியாமல் வேலையை விடவும் முடியாமல் அவதிப்படும் பெண்கள். அப்படிப்பட்ட மேலதிகாரியை கடிவாளம் போட்டு அடக்கும் படமாக மகளிர் மட்டும் எடுக்கப்பட்டுள்ளது. அங்கங்கே சினிமாதனம் இருந்தாலும் உலகில் எங்கோ ஒரு மூலையில் இப்படி கொடூர  மனம்  படைத்த ஆண்களை சமாளித்து பல பெண்கள் வேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது எவ்வளவோ மாறிவிட்டது என்றாலும் நிறைய இடங்களில் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. பெண்ணை பெண்ணாக பார்க்காமல் போகப்பொருளாக பார்க்கும் வக்கரபுத்தி படைத்த ஆண்கள் நேற்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள் நாளையும் இருப்பார்கள். அவர்களுக்கு இந்தப்படம் ஒரு பாடம்.

இந்த படத்தில் ரேவதி அவர்கள் அவ்வளவு அழகு. படம் முழுவதும் அவரது நடிப்பு அவரைப்போல் அவ்வளவு அழகாக இருந்தது. ஒரு பிணத்தை கடத்துவது, காரை திருடுவது, என்று ஏகத்துக்கு கலாட்டா செய்திருக்கிறார். ஊர்வசி பயத்தில் உளறிக்கொட்டுவது, ரோகிணியின் சென்னை பாசை படம் முழுவதும் நம்மை ஆக்ரமித்துவிடும்.

நாகேஷ் அவர்கள் பிணம்கூட இவ்வளவு நன்றாக நடிக்குமா? என்பது போன்ற ஒரு அற்புதமாக  நடித்திருப்பார். இந்த காட்சியை முதல் முதலில் பார்க்கும்போது நான்  எவ்வளவு  ரசித்திருப்பேன் என்பது என்னால் இப்போது  உணரமுடிகிறது. ஒரு வசனமே இல்லாமல்  உடலசைவற்ற உடல்  அசைவைக்கொண்டு  நல்ல நடிகர் என்ற கிரீடத்தை ஒரு காட்சியிலேயே அசத்தியிருப்பார் நாகேஷ் அவர்கள். 
நாசரை கடத்தி கம்பனி நிருவாகத்தை கட்சிதமாய் கையாண்டு கம்பனியை மாற்றிக்கட்டும் ரேவதியின் நடிப்பு கம்பனியை மட்டுமல்ல படத்தையும் வெற்றிக்கு உயர்த்தியிருக்கிறது. ஒரு பெண்ணின் ஆளுமையை, நிர்வாக திறமையை, புதிய புதிய யோசனைகளை கொண்டுவந்து மூன்றே நாளில் கம்பனியை மாற்றிக்காட்டுவது  சினிமாத்தனமாக இருந்தாலும்  அதில் உள்ள ஆளுமையை, பெண்ணின் பெருமையை வெகுவாக உயர்த்திவிடுகிறது. 


 படத்தின் கடைசியில் கம்பனியின் முதலாளியாக வரும்  கமல் படத்தின் திருப்புமுனையாக வருகிறார். நாசரை அந்தமானுக்கு அனுப்பிவிட்டு நிருவாகத்தை ரேவதியிடம் ஒப்படைப்பதோடு ரேவதி தனக்கு கணவானாக வருபவரை கற்பனையாக கணிப்பொறியில்   வடிவமைத்த உருவம் கமலாக வருவது ரசிக்கவைக்கிறது. படம் பெண்களை பற்றியது என்றாலும் இரண்டுவகையான ஆண்களை அதில் காட்டப்படிருக்கிறது பெண்களை காமப்பொருளாக பார்க்கும் அல்ப  ஆணாக நாசர் நடித்திருப்பார் , மற்றும் பெண்ணின் திறமையை மதித்து பெண்களிடம் பொறுப்பை ஒப்படைக்கும் ஆல்பா  ஆணாக கமல் நடித்திருப்பார். இந்த படத்தின் மூலம் ஆண்கள் தனக்குள்  கேட்கவேண்டிய கேள்வி இதுதான் நாம் அல்ப ஆணா? ஆல்பா ஆணா? என்பதுதான்.
  



  

சனி, ஏப்ரல் 21, 2012

சில நேரங்களில்... சில முகபாவனைகள்...


மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரங்களைவிட மேலானவனாக இருக்கின்றான். மனிதர்களின் சில வித்யாசமான முகபாவனைகள் என்ற ஒரு தலைப்பை எழுத ஆசைப்பட்டேன். மனித முகத்தின் சில வித்யாசமான கோணலை பாரத்தால் நமக்கு சிரிக்கத்தோன்றும். மனிதவர்கத்தின் முக்கிய மொழி உடல்மொழியாக கருதப்படுகிறது. அந்த உடல் மொழியை கொண்டுதான் பிறக்கும் குழந்தை தனது பசியை, தூக்கத்தை, வருத்தத்தை, சந்தோசத்தை அழுகையாகவும், சிரிப்பாகவும் தாய்க்கோ, மற்றவர்களுக்கோ உணர்த்துகிறது. அத்தகைய மொழி நாம் வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது. அத்தகைய உடல் மொழி பற்றிய ஆராய்ச்சி இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. நமக்கு ஏற்படும் ஒவ்வரு சின்னச்சின்ன அசைவுகளும் நமது ஆழ்மனதை அப்படியே அப்பட்டமாய் காட்டும் வலிமை உடையது இந்த உடல்மொழி என்பதில் சந்தேகமில்லை.
சிரிக்கும் போது நமது நரம்பு மண்டலம் எவ்வளவு வேலை செய்யுமோ அதைவிட அதிகமாக கோபப்படும்போது நமது முகம் விகாரமாக மாறிவிடுகின்றது. இதைதான் நாம் அரைப்பைத்தியம் என்கிறோம். உடம்பின் ஒவ்வரு அசைவும் முகபாவத்தோடு சம்பந்தப்பட்டது. ஒவ்வரு மனிதனுக்குளும் ஒரு குழந்தையின் சிரிப்பும் ஒரு கொலைகாரனின் ஆக்ரோஷமும் அடங்கியிருக்கும். நாம் யாரை அதிகமாய் வெளிப்படுத்துகிறோம் என்பதில்தான் நமது குணம் பிறருக்கு தெரியவரும்.
நமது முகபாவனைகளும் , நாம் என்ன பேசுகிறோம் என்பதில்தான் நமது மரியாதை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வரு மனிதனும் தான் என்ன விதமான விசயங்களை உள்வாங்கியிருக்கிறோம் என்பதில்தான் அவனுடைய ஆற்றலும், பேச்சுக்களும் இருக்கும். அப்படிப்பட்ட விஷயங்கள் நம்மை யார் என்பதையும், எப்படி நடந்துகொள்வோம்  என்பதை அப்பட்டமாய் காட்டிக்கொடுக்கும்.

நாம் என்ன நினைக்கிறோம் என்பதை காடும் கண்ணாடி  நமது  முகபாவம் அதிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது.
ஒவ்வரவறது ஆசையும் தன்னை பிறர் ரசிக்கவேண்டும் என்பதே. ஒருவரை கவர செய்யும் சேஷ்டைகள் சிலநேரம் நம்முடைய இயல்பை கெடுத்துவிடலாம். இயல்பாக நம்மை அறியாமல் வரும் முகபாவனைகள்  பிறருக்கு சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தரும். ஒருவரை மகிழ்விப்பது என்பது  கஷ்டமான காரியம். அதை சரியாக செய்ய நாம் முதலில் சரியாக இருக்கவேண்டும்.

ஒவ்வருவருக்குள்ளும் ஒரு கோமாளித்தனம் இருந்துகொண்டுதான் இருக்கும் அது இல்லாவிட்டால் வாழ்க்கை சுவாரசியமற்றுப்போகும். வாழ்கையின் ஆனந்தம்  சிலநேரம் நாம் செய்யும் கோமாளிதனம்தான்.

ஒவ்வருவரும் தன்னை எல்லோரும் கவனிக்கவேண்டும் என்ற ஆசை மனதில் இருக்கும் அவை சிலநேரம் முகபாவநியாக வெளிப்படும். அதோடு நம்முடைய கோபம், பசி, காதல், நட்பு,பகை, ஆசை, சிரிப்பு, சந்தோசம் எல்லா உணர்சிகளையும் காட்டிக்கொடுப்பது முகம்தான். ஆகையால் நமது முகத்தை முடிந்தவரை சாந்தமாக வைத்துக்கொண்டால் நாம் பார்க்க அழகாக இருப்போம் என்பதில் சந்தேகமில்லை.

வியாழன், ஏப்ரல் 19, 2012

WAR HORSE

       

" WAR HORSE" என்னும் ஆங்கிலப்படம் ஆஸ்கார் அவார்ட் பெற தகுதி பெறாமல் போனது கொஞ்சம் வருத்தமளிக்கிறது. இந்த படம் ஒரு சிறந்த படம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த படம் ஒரு குதிரையை மையமாக வைத்து எடுக்கப்பட படம் என்பது  படத்தின் தலைப்பே நமக்கு சொல்லிவிடுகிறது. ஒரு குதிரை மனிதனுக்கு எவ்வாறு  அடிமையானது? என்று யோசித்தால் மனிதன் எந்த எந்த விலங்குகள் சாதுவோ அந்த விலங்குகளை அடிமையாகினான். எது அடங்கவில்லையோ அந்த விலங்கை கொன்று மனிதன் மிருகமாகினான். அப்படி மனித இனத்துக்கு அடிமையான விலங்குதான் இந்த குதிரை இனம்.    ஒரு குதிரைக்கு இருக்கும் சக்தியானது மனிதனுக்கு கண்டிப்பாக இல்லை. ஆனால் மனிதனுக்கு இருக்கும் கேவலமான புத்தி குதிரைக்கு இல்லை அதனால்தான் உடல்வலிமை மிக்க  குதிரை அந்த குதிரையைவிட வலிமை குன்றிய மனிதனுக்கு சேவை செய்கிறது. அந்த சேவையை உயர்ந்ததாக கருதாது அந்த குதிரை நடக்க முடியவில்லை என்றவுடன் அதை கொல்லும் கொடூரம் மனிதனிடம்தான் உள்ளது. 
    ஒரு சின்ன குதிரையை பார்த்து அதனை நட்பாக்கிகொள்ள ஆசைபடுகிறான் நாயகன். நாயகனின் அப்பா அந்த குதிரையை அதிக விலை கொடுத்து  ஏலத்தில் எடுக்கிறார். அதை பொறுக்காத நாயகனின் தாய் கடிந்து கொள்கிறார்.நாயகன்  தான் ஆசைப்பட குதிரை தன் முன்னே நிற்பதை நினைத்து பெருமை கொள்கிறான். குதிரையை தனக்கு நட்பாக்கிக்கொண்டு அதற்கு பயிற்சியளிக்கிறான் நாயகன்.
   குதிரையை நாயகனின் தந்தை காசிற்காக ராணுவத்திற்கு குதிரையை  விற்றுவிடுகிறார். அதை சற்றும் விரும்பாத நாயகன் அந்த குதிரையை தன்னிடம் தந்துவிடும்படி அந்த ராணுவ அதிகாரியிடம் கேட்கிறான். ஆனால் அந்த குதிரை  அவனுக்கு கொடுக்கப்படவில்லை.
அந்த குதிரை ஒவ்வருவராக கைமாறுகிறது. யாரிடம் சென்றாலும் அந்த குதிரை தனது விசுவாசத்தை  சரியாக காட்டி வேலை  செய்கிறது. அதனாலேயே அந்தக்குதிரையின் மதிப்பு கூடுகிறது. அந்த குதிரை ஒரு சின்ன பெண்ணிடம் அடைக்கலமாகிறது. அந்த பெண் அதை தனக்கு ஒரு நல்ல நண்பனாக நினைக்கிறாள். ஆனால் அதற்குள் ராணுவம் அந்த குதிரையை மீட்டுவிடுகிறது.
  போர்களத்தில் அந்த குதிரை சண்டையிடும்போது அங்கு நடக்கும் கொலைவெறி தாக்குதல் சகிக்க முடியாமலும் தனக்கு துணையாக இருந்த மற்றொரு  குதிரை மரணமடைந்ததை பொறுக்க முடியாமலும் போர்களத்தில் தலைதெறிக்க ஓடுகிறது. நாயகன் அந்த குதிரையை அடைய ராணுவத்தில் சேர்ந்து சண்டையிடுகிறான். அப்போது குதிரை வேகமாக ஓடி கம்பி வேலிக்குள் சிக்கிவிடுகிறது. அதை மீட்க இரு படையினரும் சண்டையை நிறுத்திவிட்டு அதற்கு முதல் உதவி செய்கிறார்கள்.
குதிரை யாருக்கு சொந்தம் என்ற கேள்விக்கு ஒரு டாஸ் போட்டு முடிவு செய்கிறார்கள். குதிரை நாயகன் இருக்கும் ராணுவ கூடரத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அப்போது நாயகன் கண்களில் அடிபட்டு கண்களில் கட்டுபோட்டிருக்கும்போது அந்த குதிரை பயன்படாது என்று கூரி அதை கொல்ல நினைக்கும்போது நாயகனின் ஓசை கேட்டு திரும்பிப்பார்கிறது. குதிரை தன்னுடையது என்று அதன் அடையாளத்தை பார்க்காமலேயே சொல்கிறான் நாயகன். அதை உறுதி செய்து அந்த குதிரையை கொல்லாமல் விடுகின்றனர் ராணுவத்தினர்.மீண்டும் அந்த குதிரை அவனை அடைந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் முடிவு. ஒரு குதிரையை அழகாக நடிக்கவைததட்கு பாராட்டுக்கள். படம் பார்க்காதவர்கள் கண்டிப்பாய் பார்த்து ரசிக்கும்படி உள்ளது என்ற உத்தரவாதத்தோடு முடிக்கிறேன்.