செவ்வாய், மே 22, 2012

தேவைகளின் கோட்பாடு....



இப்போது காண்பிக்கப்பட்டுள்ள ப்ரமேடின் பெயர், தேவைகளின் கோட்பாடு "HIERARCHY OF NEEDS THEORY" என்பதாகும் . அப்படியென்றால் என்ன என்று கேட்கத்தோன்றுவதட்கு முன்பாகவே விளக்கி விடுகிறேன். இதை ஒரு கோட்பாடாக வகுத்தவர் "ABRAHAM MASLOW" என்பவர் ஆவர். இந்த கோட்பாட்டின் அடிப்படையில் பார்த்தால் இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வரு மனிதனும் எதை நோக்கி தனது வாழ்க்கை பயணத்தை மேட்கொள்கிரார்கள் என்பது தெளிவாக தெரிந்துவிடும்.ஏதோ வந்தோம் வாழ்தோம் என்றில்லாமல் மனித நாகரிகத்தின் அடிப்படை  என்ன? என்பது ஒவ்வரு மனிதனும் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம். ஆதிகாலத்தில் மனிதன் ஆறாம் அறிவு புலப்படாத காலத்தில் எல்லவற்றையும் கண்டு பயந்தான். மின்னலை கண்டு பயந்தான், இருளைக்கண்டு பயந்தான், ஒளியை கண்டு பயந்தான், இப்படி இயற்கை அனைத்தையும் கண்டு பயந்தான். அப்போது அவனுக்கு தன் பயத்தை போக்கிக்கொள்ள ஒரு துணை தேவைப்பட்டது. தனக்கென ஒரு கூட்டத்தை அமைத்துக்கொண்டான். அப்படி ஆரம்பித்த கூட்டம் அதற்கு ஒரு தலைவன் அந்த தலைவன் பிடிக்காமல் அந்த தலைவனை வீழ்த்த ஒருவன் அவனுக்கு உதவிசெய்ய ஆட்கள் இப்படியாக உருவானதுதான் இப்போது அரசியல் என்ற பெயர்ளில் உலகம் முழுவதும் ஆளப்பட்டு வருவதற்கான முன்னோடி.



தேவைகளின் கோட்பாடு  என்பது மனித பரிணாம வளர்ச்சிக்கு பெரிதும் காரணமான ஒன்று. தேவைகளின் கோட்பாடு ஐந்து வகையான தேவையாக பிரிக்கப்படுகின்றது. முதலாவது தேவை ஒரு மனிதனுக்கு அடிப்படை விஷயங்கள் உணவு, உறைவிடம், உடை மற்றும் உடல் உறவு இவைகளே மனிதனின் அத்தியாவசிய தேவைகளாக முதலில் வகுக்கப்படுகின்றது. அவனது அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியானபின்பு அவனது அடுத்த தேவையான பாதுகாப்பு என்கின்ற தேவை முக்கியத்துவம் பெறுகின்றது. தனது பாதுகாப்பை பலப்படுதிக்கொள்ள குளிர் காலத்தில் குளிரை தாங்கிக்கொள்ள உடுப்பு, வெயில் காலத்திற்கு ஏற்ற உடுப்பு, மிருகங்களிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள ஆயுதம் என்று தனது பாதுகாப்பிட்கு தேவையான அணைத்து விசயங்களிலும் தன்னை ஈடுபடுதிக்கொண்டான். இவ்வாறாக தனது பாதுக்கப்பை பூர்த்தி செய்த பிறகு அவனுக்கென்று ஒரு கூட்டம் தேவைப்படுகின்றது. அந்த தேவைதான் மதமாக, ஜாதியாக உருமாறியது. தனக்கென ஒரு கூட்டம் அதற்கு ஒரு தலைவன் மற்ற கூட்டத்துடன் ஏற்படும் பொறாமை அதனால் ஏற்பட்ட சண்டை என்று இப்போதுவரை சண்டைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.அவனது மூன்றாவது தேவையான சமுதாய தேவை பூர்த்தியான பிறகு அவனது தேவை தன்முனைப்பாக மாறுகிறது. ஒரு கூட்டம் என்றால் அதற்கு தானே தலைவனாக இருக்கவேண்டும் என்ற ஆசை அதற்காக எடுக்கப்படும் முயற்சி, இவைதான்  தன்னை யாரென்று நிரூபிக்க பயன்படும் தேவையாகிறது. கடைசியாக தனது தேவை எல்லாவற்றையும் பூர்த்திசெய்தாகிவிட்டது என்கின்ற பக்குவமே கடைசி தேவையாகிறது. தனது தேவை பூர்த்தியாகிவிட்டதாக யார் உண்மையில் நம்புகிறார்களோ அவர்களது இறுதி தேவையே போதும் என்ற மனதின் தேவையாகும். இவைதான் தேவைகளுக்கான கோட்பாடுகள் ஆகும்.  

இதுவரை உயிருடன் இருக்கும் மனிதர்களில் தனது தேவைகள் பூர்த்தியாகிவிட்டதாக கூறும் மனிதர்கள் இருப்பதாக வரலாறுகளே இல்லை. எல்லார்க்கும் தேவைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். அந்த தேவைதான் மனிதர்களின் இயக்கம் தனது தேவைகள் பூர்தியாகிவிட்டதாக யார் நினைக்கிறார்களோ அவர்கள் இவ்வுலகில் வாழத்தகுதியற்றவர் ஆகிறார்கள். தேவைகள்தான் மனிதனின் இயக்கம். ஆசைகளும், தேவைகளும் இல்லாவிட்டால் உலகம் இயங்க தகுதியற்றதாகிவிடும். மனிதர்களின் தேவைகள் கோட்பாடும் இதேதான் வழியுருத்துகின்றன. எப்போதும் தேவைகள் மனிதனுக்கு இருந்துகொண்டேதான் இருக்கும் அது காலத்தின் கட்டாயம். மரணம் எதிர்பார்த்து காத்திருப்பதுகூட ஒருவித தேவைதான். இதுதான் தேவைகளின் கோட்பாடாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக