இந்த பூமியில் நாம் அன்றாடம் நடத்தும் வாழ்க்கை முறையில் எண்ணற்ற விபத்துக்கள், வியாதிக்களால் எங்கோ ஒரு உயிர் போய்க்கொண்டுதான் இருக்கிறது. ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனைகளால் அவர்களுக்கு முதல் உதவி தேவைப்படுகின்றது. அப்படி தேவைப்படும்போது நாம் அவர்களுக்கு செய்யும் அந்த உதவி அவர்களது உயிரை காப்பாற்ற உதவும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயத்தில் நாம் ஒருவரை காப்பாற்றும் நோக்கத்தோடு தவறுதலாக எதையாவது செய்துவிட்டால் அது அவர்களது உயிருக்கே ஆபத்து உண்டாக்கலாம் ஆகையால் ஒருவரை காப்பாற்ற நாம் எடுக்கும் முயற்சி சரியானவையாக இருக்கவேண்டும் என்பதுதான் இப்போது நாம் பார்க்கப்போவது.
நாம் தினமும் சந்திக்கும் மனிதரோ நமக்கு அறிமுகமில்லாத மனிதரோ அவர் நமக்கு பிடித்தவரோ, பிடிக்காதவரோ யாராக இருந்தாலும் அவரது உயிருக்கு ஆபத்து என்றால் உடனே உதவி செய்வதுதான் மனிதாபிமானம். ஒருவர் திடீர் என்று மயங்கி விழுந்துவிட்டார் என்றால் அவரை நாம் மல்லாக படுக்கவைக்க வேண்டும். பிறகு அவருக்கு காற்று செல்லும்படியாக தலையை உயர்த்திப்பிடிக்க வேண்டும். ஒரு கையால் தாடையை பிடித்து அவரது வாயை திறக்கவேண்டும் பிறகு மற்றொரு கையால் அவரது மூக்கை பிடித்துக்கொண்டு அவருக்கு நமது சுவாசத்தை வாய்வழியாக ( வாயோடு வாய்வைத்து) காற்றை செலுத்த வேண்டும். அவருக்கு நாம் ஒரு நிமிடத்திற்கு 12 முதல் 16 முறை காற்றை உட்செலுத்தவேண்டும். அவரது தலையை மடிமீது தூக்கிவைதுக்கொள்ள கூடாது. மற்றும் மயங்கி விழுந்தவர் தன் சுயநினைவு அடையும்வரை அவருக்கு வலுக்கட்டாயமாக தண்ணீரை வாய்க்குள் செலுத்தக்கூடாது.
நாம் தினமும் சந்திக்கும் மனிதரோ நமக்கு அறிமுகமில்லாத மனிதரோ அவர் நமக்கு பிடித்தவரோ, பிடிக்காதவரோ யாராக இருந்தாலும் அவரது உயிருக்கு ஆபத்து என்றால் உடனே உதவி செய்வதுதான் மனிதாபிமானம். ஒருவர் திடீர் என்று மயங்கி விழுந்துவிட்டார் என்றால் அவரை நாம் மல்லாக படுக்கவைக்க வேண்டும். பிறகு அவருக்கு காற்று செல்லும்படியாக தலையை உயர்த்திப்பிடிக்க வேண்டும். ஒரு கையால் தாடையை பிடித்து அவரது வாயை திறக்கவேண்டும் பிறகு மற்றொரு கையால் அவரது மூக்கை பிடித்துக்கொண்டு அவருக்கு நமது சுவாசத்தை வாய்வழியாக ( வாயோடு வாய்வைத்து) காற்றை செலுத்த வேண்டும். அவருக்கு நாம் ஒரு நிமிடத்திற்கு 12 முதல் 16 முறை காற்றை உட்செலுத்தவேண்டும். அவரது தலையை மடிமீது தூக்கிவைதுக்கொள்ள கூடாது. மற்றும் மயங்கி விழுந்தவர் தன் சுயநினைவு அடையும்வரை அவருக்கு வலுக்கட்டாயமாக தண்ணீரை வாய்க்குள் செலுத்தக்கூடாது.
தண்ணீரில் ஒருவர் மாட்டிக்கொண்டால் அவரை நாம் காப்பாற்றுவது எப்படி என்பதை பாப்போம். ஒருவர் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மாட்டிக்கொண்டால் நமக்கு நீச்சல் தெரிந்திருந்தால் அவரை சென்று காப்பாற்றலாம். நமக்கு நீச்சல் தெரியாவிட்டால் நாம் அவருக்கு உதவ மிதவைகளை உதவிக்கு தரவேண்டும். ஏதாவது மரக்கட்டை, கயிர் ஆகியவற்றை வீசி அவரை பிடித்துக்கொள்ள செய்யவேண்டும். ஒருவர் நீரில் மூழ்கும்போது அவரது தலைமுடியை பிடித்து இழுத்துவர வேண்டும். அவருக்கு தலைமுடியில்லை என்றால் அவரது காதையோ அல்லது அவரது கால் கட்டை விரலையோ பிடித்து வரவேண்டும். பிறகு அவரை குப்புற படுக்கவைத்து அவரது வயிற்றின் நமது மீது இருகைகளாலும் மேல் நோக்கி தூக்கும்போது அவரது நுரையீரல் பகுதியில் உள்ள தண்ணீர் வெளியேறும் பிறகு அவருக்கு நாம் செயற்கை சுவாசம் தரவேண்டும்.
ஒருவருக்கு தீக்காயம் ஏற்ப்பட்டால் என்ன செய்யவேண்டும் என்பதை பார்போம். ஒருவருக்கு தீ காயம் ஏற்பட்டால் அவர்கள் மீட்டு தண்ணீரை ஊற்றவேண்டும். வேறு எதுவும் தீ காயத்தின் மீது தடவக்கூடாது. ஒருவருக்கு தீ காயம் ஏற்பட்டால் வாழை இலை மற்றும் பிளாஸ்டிக் அல்லாத படுக்கையில் படுக்கவைக்க வேண்டும். தண்ணீர் இல்லாத பட்சத்தில் ஒரு கெட்டியான போர்வை போர்த்தி காற்று உள்ளே போகமல் தடுக்கவேண்டும். இவ்வாறாக ஒருவருக்கு நாம் செய்யும் முதல் உதவி அவரது உயிரை காப்பற்றலாம்.ஆகையினால் மனிதாபிமானமுள்ள எல்லோரும் இதை தெரிந்துகொள்வது நல்லது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக