காலம் என்கின்ற சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கிறது.காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை அதன் கடமையை சரியாக செய்கிறது. காலம் எப்போதுமே மனிதனுக்கு ஒரு மிகச்சிறந்த குரு. காலம் மனிதனை மாற்றுகிறது, சூழ்நிலையை மாற்றுகிறது, எதுவும் நிரந்தரமல்ல என்கின்ற நிலையை உண்டாக்குகிறது. காலம் தான் ஆசான், காலம்தான் கடவுள். இந்த கால சக்கரம் நான்கு யுகங்களாக பிரிக்கப்படுகிறது சத்ய யுகம்,த்ரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம். ஒவ்வரு யுகத்திலும் ஒரு யுகபுருஷன் தோன்றி உலகை காப்பதாக இந்து மதம் "விஸ்ணுவை" யுகபுருசனாக குறிப்பிடப்பட்டுள்ளது, கிறிஸ்துவ மதம் "இயேசுவை" யுகபுருசனாக குறிப்பிடப்பட்டுள்ளது, இஸ்லாமிய மதம் "நபிகள் நாயகத்தை" யுகபுருசனாக குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் புத்த மதம் " புத்தரை" யுகபுருசனாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சத்ய யுகம் இதுதான் முதல் யுகம். இந்த சத்ய யுகத்தில் தீயவை அதிகம் பார்க்கமுடியாது. இந்த யுகம் முழுவதும் சத்யம் நிறைந்த அமைதி நிறைந்த யுகம். இந்த யுகத்தில் தேவர்கள் என்று சொல்லப்படும் நல்லவர்கள் மற்றும் அசுரர்கள் என்று சொல்லப்படும் தீய மனம்படைத்த கொடியவர்கள் தனித்தனியாக வாழ்ந்தனர். தேவர்கள் மற்றும் அசுரர்கள் பலம் சம அளவில் இருந்தது. தேவர்கள் மற்றும் அசுரர்கள் இடையே அப்பப்போ சண்டை வரும். ஆனால் இரு அணியினரும் சமபலம் என்பதால் இருஅணியும் தத்தமது பலத்தை உயர்தியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அப்போது கடலுக்குள் அமுதம் இருப்பதை அறிந்து.அந்த அமுதத்தை அருந்தினால் அமரராக வாழும் பலத்தை அந்த அமுதம் கொடுக்கும் என்று தேவர்கள் விஸ்ணு பகவானை வேண்டினர். அந்த அமுதம் பாற்கடலை கடைந்தால் மட்டுமே கிடைக்கும் என்பதால் அதை கடைய தேவர்கள் மட்டும் சேர்ந்து கடைந்தால் போதாது என்பதால் விஸ்ணு பகவான் அசுரர்களை துணைக்கு அழைத்துக்கொள்ளும்படி யோசனை கூறினார். பார்க்கடலை கடைவதன் மூலம் வரும் அமுதத்தை தேவர்கள் மற்றும் அசுரர்கள் பங்கிட்டுக்கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. தேவர்களும் அசுரர்களும் ஐந்து தலைகொண்ட பாம்பினை கயிறாக கொண்டு பாற்கடலை ஒருபுறம் தேவர்களும் மறுபுறம் அசுரர்களும் கடைய ஆரம்பித்தனர். அப்போது வெளிப்பட்ட நஞ்சு அமுதத்தில் கலந்துவிடாமல் சிவன் அந்த விசத்தை தானே பருகினார். அந்த விஷம் அவரது உடலில் கலந்துவிடாமல் பார்வதிதேவி சிவனது கழுத்தை பிடித்து விசத்தை நிறுத்தினார். அதிலிருந்து சிவனுக்கு "திருநீலகண்டர்" என்ற பெயர் வந்தது. மீண்டும் இரு அணியினரும் பாற்கடலை கடையவே அமுதம் வந்தது அதை அவசரப்பட்டு அசுரர்கள் கொஞ்சம் பருகிவிட்டார்கள் அதனால் அவர்களது பலம் உயர்ந்து தேவர்களுக்கு கொடுக்கவேண்டிய அமுதத்தை பிடுங்கிக்கொண்டார்கள். அதன்பிறகு தேவர்களை விரட்டியடிக்கபட்டார்கள். தேவர்கள் சென்று விஸ்ணு பகவானிடம் முறையிட்டார்கள் உடனே விஸ்ணு "மோகினி" அவதாரம் எடுத்து அசுரர்களை மயங்கவைத்து அமுதத்தை மீட்டுத்தந்தார். அதில் இருந்து தேவர்கள் பலம் அமுதத்தால் உயர்ந்து அசுரர்கள் பலம் குறைந்தது அதுவே சத்ய யுகமாக ஜொலித்த காலம்.
இந்த யுகத்தில் பூமியை காப்பதற்காக இறைவன் மச்சம்,கூர்மம்,வராகம், நரசிம்மம் என்கின்ற அவதாரம் எடுத்தார். அந்த யுகம் முடிவுக்கு வந்த பிறகு ஆரம்பித்த யுகம்தான் த்ரேதா யுகம்.
அடுத்த யுகம் த்ரேதா யுகத்தில் இந்த யுகத்தில் தேவர்களுக்குள் அசுரதனமும், அசுரர்களுக்குள் நல்லவர்களுமாக இருந்தனர். இந்த யுகத்தில் வாமன அவதாரம் எடுத்து மூன்றடி மண் வேண்டி முதல் அடியில் பூமியை அளந்து இரண்தாம் அடியில் வானத்தை அளந்து மூன்றாம் அடியை அசுரர்களின் அரசன் மீது வைத்து. அந்த அசுரர் குளத்தில் பிறந்தாலும் கொடுப்பதில் சிறந்தவர் என்பதை நிருபித்த அதே வேளையில் தாயை கொன்ற மகனாக பரசுராமனும், மாற்றார் மனைவியை அபகரித்த இந்திரனும், மனைவியின் மீது சந்தேகம் கொண்டு சிதையில் சீதையை இறங்கவைத்த ராமனும் தனக்குள் உள்ள அசுரதனத்தை நிரூபித்தார்கள். இந்த யுகம் முடிவிற்கு வந்தது ரமாவதாரதிட்கு பிறகு. அடுத்த யுகம் த்வாபர யுகம்.
கிருஷ்ணர் அவதரித்த யுகம்தான் த்வாபர யுகம், இந்த யுகத்தில் நல்லவர்கள் மற்றும் தீயவர்கள் ஒரே இடத்தில் வாழ்தனர். நல்லவர்களும்,தீயவர்களும் நெருங்கிய உறவினர்களாக வஞ்சம், பகை, சூது என்று அளவில்லா துயரினை அடைந்தனர். மகாபாரதத்தின் காலம் இந்த யுகத்தில்தான் ஆரம்பிக்கிறது. இந்த யுகத்தில் நல்லவர்கள் சிலநேரம் தீயவர்கலானார்கள், தீயவர்கள் சிலநேரம் நல்லவர்கலானார்கள். ஆனால் கர்ணன் போல் நல்லவனாகவும் இருக்கமுடியாமல் தீயவைகளை விட்டு வரவும் முடியாமல் பல துயரங்களை அனுபவித்ததும் இந்த யுகத்தில்தான். தர்மன் மனைவியை பணயம் வைத்து சூதாடியது, துரியோதனன் கண்முன்னே அவனது மனைவியின் இடையில் உள்ள முத்துமாலையை கர்ணன் தவறுதலாக சிதரடித்தபோது " மணிகளை எடுக்கவோ கோர்கவோ" என்று கேட்ட பண்பு த்வாபர யுகத்தின் அமைப்பு. கிருஷ்ணனின் கீதா உபதேசம், குருசேத்திர போர் கௌரவர்கள் படை கூண்டோடு அழிந்து பாண்டவர்கள் ஆட்சியில் அமர்ந்து பிறகு ஆட்சியை தங்களது தலைமுறையினருக்கு கொடுத்துவிட்டு பாண்டவர்கள் ஐவரும் காட்டிக்கு சென்றதோடு த்வாபர யுகம் முடிவிற்கு வந்தது. அடுத்த யுகம் கலியுகம்.
இதுதான் கலியுகத்தின் இன்றைய நிலைமை.கலியுகம் இந்த யுகத்தில் தீயவைகள் அதிகமாகவும் நல்லவைகள் மிகக்குரைவாகவும் இருக்கும். இந்த யுகம் செல்லச்செல்ல தீயவை மட்டுமே மிஞ்சி நிற்கும் அந்த தீயவைகளால் உலகம் அழியும். உலகத்தின் அழிவே கலியுகத்தின் முடிவாகும். இந்த கலியுகத்தில் ஒரு மனிதனுக்குள் நல்லவையும் ,தீயவையும் இரண்டற கலந்திருக்கும். இந்த கலியுகத்தில் காமம், குரோதம், லோகம், மோகம்,மதம் ,மாச்சரியம் என்கின்ற ஆறு தீய குனங்களினாலும் மனிதன் சிக்குண்டு. மாற்றான் மனைவியை அபகரித்தல், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடுத்தல், பிற உயிர்களை துன்புறுத்துதல், வன்மம், ஓரின சேர்க்கை என்று எவ்வளவு கேவலமாக வாழமுடியுமோ அவ்வளவு கேவலமாக வாழ்த்து மனிதன் மடிவான். இந்த யுகத்தில் அவதரிப்பதாக கூறப்படும் " கல்கி " அவதாரம் உலகத்தின் அழிவை குறிப்பதாகும்.





கல்கி யார் அவர் வந்துவிட்டாரா?
பதிலளிநீக்கு