சனி, மே 12, 2012

திருநங்கையரை சகமனிதர்களாக பாவிப்போம்...

கடவுள்களில் ஆண் பாதியாகவும் பெண் பாதியாகவும் உள்ள அர்த்தனாரிஸ்வறரை நாம் கடுவுளாக ஏற்றுக்கொண்டோம் ஆனால் அதுவே ஒரு ஆணின் உடம்பில் பெண் தன்மையும் ஒரு பெண்ணின் உடம்பில் ஆணின்தன்மையும் கொண்ட சகமனிதர்களை மட்டும் ஒரு புளுவைவீட கேவலமாக பார்க்கிறது இந்த சமுதாயம். ஒரு தாயின் வயிற்றில் கரு உருவாகும்போது ஒரு வாரத்திற்கு அந்த கரு ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத நிலையில்தான் இருக்கும்.பிறகு தன் நிலை உணர்ந்து அந்த கரு ஒரு ஆண் என்றோ அல்லது ஒரு  பெண் என்றோ அறிவிக்கிறது. இந்த அறிவிப்பின் காலதாமதம்தான் திருநங்கை என்கின்ற உருவத்தை எடுக்கிறது. ஒரு அறிவிப்பு காலதாமதமான காரணத்தினால் அந்த கரு குழந்தையாய் அவதரித்த பிறகு அதன் தோற்றம் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பிக்கும்போது அந்த குழந்தைக்கு ஏற்படும் துயரம் சொல்ல ஒண்ணா துயரம். கடவுளிடம் அவர்கள் கேட்கும் கேள்வி "நான் என்ன தவறு செய்தேன் ஏன் எனக்கு மட்டும் இப்படியொரு பிறப்பு" என்பது. கடவுள் மனிதனை படைக்கும்போது அவர் அனைவரையும் சமமாகத்தான் படைக்க நினைத்தார். அப்படி படைத்தால் இறுதிவரை படைப்பு தொழில் தன்னிடமே இருந்துவிடும் என்பதற்காக தான் படைத்தவைகளில் ஒரு பாதியை ஆணாகவும் ஒரு பாதியை பெண்ணாகவும் படைத்தவர் ஏனோ ஆண், பெண் என்கின்ற இருவேறு உணர்வுகளை, உடலமைப்பை ஒரு உடலுக்குள் படைத்துவிட்டார். இது படைத்தவன் குற்றம் அதற்கு கிடைக்கும் எல்லா கேலி, கிண்டல்களுக்கும் இவர்கள் ஆளாகின்றார்கள்.
திருநங்கைகள் வெறும் பாலியள்தொளிலாளியாகவும், பிச்சை எடுப்பவர்கலாகவும் இருக்கும் அவலநிலை நீடிக்கிறது. உடல்தான் வேறு வேறு எல்லோருக்கும் உணர்வு ஒன்றுதான். அவர்கள் ரத்தமும் சிவப்புதான். எங்கு சென்றாலும் மக்கள் ஏளனமாக பார்ப்பதும், பரிகசிப்பதும் நாம் அவர்களை வீட மேலானவர்கள் என்கின்ற கொடூர புத்தியே தவிர அவர்கள் பாவப்பிறவிகள் அல்ல. ஒரு மனிதனின் வக்கிரம் வெறும் பிறப்புருப்போடு முடிந்துவிடுகிறது, அதைத்தாண்டிய மனிதநேயம் என்பது செத்துவிட்ட சமுதாயத்தில் வாழ்வது மிக மோசமான விளைவையே கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
திருநங்கையர் கேலி செய்வதற்கும் கிண்டல் செய்வதற்கும் உலகளாவிய பொதுசொத்தாக மாற்றப்படதே இந்த அவலத்திற்கு காரணம். திரைப்படங்கள் அவர்களை கேளிசெய்வதட்கு, காமெடி காட்சிகளை உருவாக்கவும் திருநங்கையரை பயன்படுத்துவது இன்னும் நீடிக்கிறது. அதையும் தாண்டி அவர்களை பெருமைபடுதிய படம் " காஞ்சனா". வாழ்க்கை முழுவதும் புறக்கணிப்பு என்பது யாராலும் சகித்துக்கொள்ள முடியாத ஒரு விஷயம். இன்று அவர்களும் தங்களுக்கு போடப்பட்ட வளையத்தை தாண்டி சாதிக்க வருகிறார்கள், சாதித்தும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தூதுக்குடியை சேர்ந்த பாரதிராஜா என்கின்ற "பாரதி". முதல் திருநங்கை பாதிரியாராக சாதித்து இருக்கிறார்.

அவர்களுக்கு உடம்பு வேறுவிதமாக இருக்கலாம் அனால் உணர்சிகள் ஒன்றுதான். வெற்றியென்பது உருவத்தில் இல்லை உழைப்பில் இருக்கிறது. யார் உழைத்தாலும் உயரலாம் அது உண்மையானதாக, புனிதமானதாக இருக்கவேண்டும். அழகு என்பதோ, கவர்ச்சி என்பதோ கடைசிவரை நம்மோடு இருப்பதில்லை. உலகில் நாம் இருக்கும் வரை அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். முடிந்தவரை அடுத்தவரை காயப்படுத்துவதை விட்டுவிட்டு காயம்பட்டவர்களுக்கு மருந்தளிப்போம். திருநங்கையரை சகமனிதர்களாக பாவிப்போம். அவர்கள் மனதாலும், உடம்பாலும் காயம் பட்டவர்கள் அவர்களுக்கு உரிய அங்கிகாரமளித்து நடப்போம். அவர்களும் வாழட்டும், அவர்களும் வெற்றிபெறட்டும்,அவர்களும் வாழ்வில் எல்ல வளமும் பெறட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக