புதன், மே 09, 2012

வழக்கு எண்: 18/9 படம் வாழ்க்கை பாடம்...

பாலாஜி  சக்திவேல் அவர்கள்  இயக்கிய  படம்   "வழக்கு எண்: 18/9" .இந்த படம் வழக்கமான படம் இல்லை என்பது படத்தின் தலைப்பு உணர்த்தியது. தமிழில் இப்படியொரு படம் ஆச்சரியம்தான். இந்தப்படம் ஒவ்வருவருடைய மனசாட்சியை கேள்விகேட்பதாக அமைந்திருக்கிறது. உண்மை கசக்கும் என்பார்கள் இந்த படம் பொய்யான பிரஜைகளின் மனதை கசக்கும் என்கின்ற நம்பிக்கைதான் படத்தின் வெற்றி. வாழ்க்கை ஒவ்வருவருக்கும் ஒவ்வருவிதமாக அமைகிறது. அதன்படி யார் எதை அனுபவிக்கவேண்டுமோ அதை கட்டாயம் அனுபவிப்பர். இந்த படம் ஒவ்வர தனிமனிதனின் உணர்வுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் படம். பணம் என்கின்ற ஒற்றை சாட்டையை கையில் கொண்டுள்ளவர்கள் மனிதாபிமானம், அன்பு, உண்மை, தர்மம் என்கின்ற எல்லாவற்றையும் வண்டியாக்கி அதிகாரம், ஆணவம் என்கின்ற கயிற்றைக்கொண்டு அப்பாவி மக்களின் கழுத்தை இருக்கி பணம் என்கின்ற சாட்டையால் அடித்து அதில் ராஜாவாக பவனிவருகிறார்கள். அத்தகைய பணக்கார ராஜவேசதாரிகளுக்கு நியாயம் என்கின்ற இன்னொரு சாட்டையால் அடிப்பதே இந்த படம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
படத்தின் நாயகன் ஏழை சிறுவனாக தனது தந்தை பட்ட கடனை அடைக்க வடஇந்தியா சென்று ஒரு முறுக்கு கம்பெனியில் வேலை செய்கிறான். ஒரு சிறுவன் வேலைக்கு அழைத்து செல்லப்படுகிறான் என்றதும் அது பட்டாசு கம்பெனியோ, செங்கல் சூலையோ காட்டாமல் முறுக்கு கம்பனியை காட்டும்போது இரண்டு விஷயங்கள் நமக்கு தெளிவாகிறது நாயகன் அடுத்து செய்யப்போகும் வேலை ஏதோ ஒரு உணவு விடுதி என்பது. மற்றொன்று கம்பனின் முதலாளி நாயகனின் பெற்றோர் இறந்ததை மறைக்கும்போது அதை மூன்று மாததிற்கு பிறகு அறிந்த அந்த முதலாளி மீது சுடும்எண்ணையை கொட்ட போகும்போது படத்தின் முக்கிய அம்சம் அந்த காட்சி தெளிவாக்கப்படுகிறது. நாயகன் நல்லவன் அதனால் அந்த சுடும்எண்ணையில் இருந்து அந்த முதலாளி தப்பினார்.நாயகன் அந்த இடத்தில் இருந்து அழுதுகொண்டே ஓடிப்போகும்போது நமது மனமும் பின்னாலையே ஓட துடிக்கிறது அவனுக்கு ஆறுதல் சொல்ல (படத்தை உண்மையாக ரசித்தவர்கள் ஆறுதல் சொல்ல நினைத்திருப்பார்கள் என்பது என் எண்ணம்). இல்லைஎன்றாலும் "ச்ச" என்று பச்சதாபமாவது பட்டிருப்பார்கள் என்று நம்புகின்றேன்.

படத்தின் நாயகி பாவாடை , சட்டை அணிந்த தேவதை என்று சொல்ல தோன்றியது. அந்த அழகு முகம் படத்தின் பிற்பகுதியில் அலங்கோலமாக ஆகப்போகிறது என்பதை மனம் ஏற்றுக்கொள்ள ரொம்பவே சிரமப்பட்டது படத்தின் கடைசி காட்சியில். நாயகி வரும் காட்சியில் ஏதோ இனம் புரியாத சோகம் படம் முழுக்க முகத்தில் காட்டப்பட்டிருந்தது. இந்த படம் பார்க்கும்போதுதான் புரிந்தது ஒரு மனிதன் தன்னைபோல சகமனிதர்களை பார்ப்பதில்லை அதற்கு சான்றுதான் இரண்டு உலக யுத்தங்களும் பலக்கோடி மனிதர்களின் மரணங்களும்.

உண்மையான காதல் வெறும் அழகை மட்டும் பார்த்து வருவதில்லை உணர்வுகள் புரிந்துகொள்ளப்பட்டால் அந்த துணை தாண்டி வேறு இணை ஏதுமில்லை. சொல்லபடாத வார்த்தைக்கு மதிப்புண்டு காதலில். வெறும் நினைப்பிலேயே வாழ்கையை இனிப்பாய் வாழ்ந்துவிட முடியும். காதல் ஒவ்வரு மனிதனுக்கு உள்ளும் ஒரு தனி உலகத்தை உருவாக்கிவிடுகின்றது. அத்தகைய காதல்தான் நாயகனை செய்யாத குற்றத்திற்கு குற்றத்தை  ஒப்புக்கொள்ள வைத்தது. காதல் தியாகமும் செய்யும், கொலையும் செய்யும் என்பதால்தான் நாயகி நாயகனை காப்பாற்ற அத்தகைய செயலை காதல் செய்யவைத்தது.  

வெள்ளை தோளையும், விலையுயர்ந்த செல்போனையும், பணக்கார பையன்களையும் பார்த்து மயங்கி கடைசியில் வாழ்கையை தொலைக்கும் சராசரி குடும்பத்து பெண்களுக்கு இந்த படம் ஒரு பாடம்.

படத்தின் இறுதிக்காட்சி மிக உருக்கமானது. பொய் சொல்லி பணம் பார்க்கும் அந்த காவல் துறை அதிகாரியின் முடிவு கொஞ்சம் மனசாட்சி உள்ளவர்கள் கொஞ்சமாவது இப்படத்தை பார்த்து திருந்தினால் நல்லது. இப்படத்தை கொடுத்த லிங்குசாமி அவர்களுக்கும், பாலாஜி சக்திவேல் அவர்களுக்கும், படத்தில் நடித்த நடிகர், நடிகையர்களுக்கும் மற்றும் படக்குளுவினர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக