ஞாயிறு, மே 13, 2012

LAKSHYA - கார்கில் போரை நினைவூட்டும் படம்...


"LAKSHYA" என்கின்ற இந்த ஹிந்தி படம் நீண்ட நாட்களாக நான் பார்க்க நினைத்த படம் இன்றுதான் பார்க்கமுடிந்தது. பார்த்ததும் சுடச்சுட இந்தப்படத்தை பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது. முதலில் இந்தப்படம் கார்கில் மையமாக வைத்து எடுத்தபடம் என்று எனக்கு தெரியாது ,இந்த விஷயம் முன்பே தெரிந்திருந்தால் இவ்வளவு காலதாமதமாக பார்த்திருக்கமாட்டேன். சிறுவயதில் எனக்கு ராணுவத்தில் சேர ஆசை இருந்தது. இந்த படத்தில் வரும் "THUMBE KIGANAA KIYU HOO" என்கின்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அந்த பாடலுக்காகவே இந்த படத்தை பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் அந்த பாடலை தாண்டிய படத்தின் தொகுப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. ரித்திக் ரோஷன் வெறும் சாக்லேட் ஹீரோவாக மட்டுமே பார்த்து ரசித்த கண்கள் இந்த படத்தில் மதிப்பிற்குரிய ராணுவ வீரனாக மனதில் பதிந்துவிட்டார்.  
ஹிரித்திக் ரோஷேன் ஒரு பணக்கார வீட்டு பிள்ளையாக கல்லூரி படிப்பை முடித்து. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவரது நண்பரின் பேச்சை கேட்டு ஒரு இலக்கு இல்லாமல் ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கிறார். வீட்டின் எதிர்ப்பை மீறி ராணுவ பயிற்சிக்கு செல்கிறார். ராணுவ பயிற்சி
எப்படி இருக்கும் என்று தெரியாமல் விளையாட்டுதனமாய் செயல்பட்டு பலரது முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டு தண்டனையும் பெறுகிறார். இரவு யாருக்கும் தெரியாமல் ராணுவ பயிற்சி முகாமை விட்டு வீடிற்கு தப்பி வந்துவிடுகிறார்.

பெரிய அளவில் மேக்கப் இல்லாமல் இயல்பான பெண்ணாக ப்ரீத்தி ஜிந்த நடித்துள்ளார். கல்லூரி தோழனான ஹிரித்திக்கை காதலிக்கும் ப்ரீத்தி ஜிந்த, ஹிரித்திக் தன் வாழ்கையைபற்றி சிந்திக்காமல் இருப்பதால் தன் காதலை சொல்லாமல் மனதிற்குள் வைத்துக்கொள்கிறார் ப்ரீத்தி ஜிந்த. ஹிரித்திக் ராணுவ முகாமில் இருந்து திரும்பி வந்ததை கேட்டு கோபப்படுவதோடு ஹிரிதிக்கை அவமானப்படுத்தும் வகையில் பேசிவிடுகிறார். தான் விரும்பும் பெண் தன்னை அவமானப்படுத்துவது எந்த ஆணாளும் தாங்கிக்கொள்ள முடியாது. அந்த அவமானத்தோடு அவன் பெற்றோர் அவன்மீது வைத்திருக்கும் கருத்தும் ஹிரித்திக்கை அவமானப்படுத்துவதுபோல் இருந்துவிடவே மீண்டும் ராணுவ முகாமிற்கு திரும்பி செல்கிறார் ஹிரித்திக். 
ஒருவனது அவமானங்கள்தான் அவனை கடினமாக உழைக்க வைக்கிறது. ஒருவனது அவமானங்கள்தான் கடுமையாய் முன்னேறவேண்டும் என்கின்ற வெறியை தூண்டுகிறது. ஒருவனது அவமானம்தான் வாழ்கையில் மிகப்பெரிய வெற்றியாக உருமாற்றுகிறது. ஒரு சின்ன அவமானம்கூட இல்லாமல் யாரும் உயர்ந்துவிட முடியாது. தான் காதலித்த பெண் தன்னை அவமானப்படுத்திவிட்டாள் என்கின்ற கோபம் ஹரித்திகை கடுமையான ராணுவ பயிற்ச்சியில் ஈடுபடுத்தியது. ப்ரீத்தி ஜிந்த ஒரு தொலைக்காட்சி ரிபோடராக வேலை கிடைத்து தனது துறையில் முத்திரை பதிக்கிறார்.
கார்கில் போர் பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் இடையே நடந்தபோது பல ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். கார்கில் போரில் வெற்றிபெற்றதை நாடுமுழுவதும் பார்த்து கொண்டாடினர். இங்கே நாம் சிரித்துக்கொண்டிருக்க அங்கே ராணுவ வீரர்கள் குடும்பம் அழுதுகொண்டிருந்தது. மரணம் வரும் என்று தெரிந்தே நாடிட்காக போராடும் எண்ணற்ற ராணுவ வீரர்களுக்கு மரியாதை தரும் வகையில் இந்தப்படம் அமைந்திருக்கிறது. ஹரித்திக் ரோஷன் இந்த படத்தில் அற்புதமாக ஒரு ராணுவ வீரராகவே வாழ்த்திருக்கிறார்.
கார்கில் போர் இறுதிகட்டத்தில் எவ்வளவு கொடூரமாக இருந்திருக்கும் என்பதை இந்த படத்தின் மூலம் உணர முடிந்தது. நாடிட்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கும் குடும்பத்தை விட்டு குளிரிலும், மழையிலும், மலையிலும் போராடும் ராணுவ வீரர்களுக்கு, இந்த படத்தில் அற்புதமாக நடித்த ஹிரித்திக் ரோஷன்,ப்ரீதி ஜிந்த, அமிதா பச்சன் மற்றும் அணைத்து படக் குழுவினர்களுக்கும் ஒரு சல்யுட். ஜெய்ஹிந்த்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக