வெள்ளி, ஜனவரி 02, 2015

அதிசயம்...







 அதிசயங்கள் என்று நாம் சில வரையறை வைத்திருக்கிறோம் ஆனால் அவைமட்டுமா அதிசயம் மனிதனாய் நாம் பிறந்ததுகூட ஒரு அதிசியம்தான். என் முகம் போன்று வேறொரு முகம் இதுவரை என் கண்களில் அகப்படவில்லை. இரட்டையர் என்று பிறந்தாளும் அவர்களுக்குள் விதியாசம் சிறியதேனும் இருக்கத்தான் செய்யும். பிறந்தவர் ஒரே முகமுடையவராக இருக்கலாம் ஆனால் ஒரே கை ரேகை யாருக்குமே அமையவில்லை இது எவ்வளவு பெரிய ஆச்சரியம். உலகம் ஒரு அதிசியம் என்றால் ஒரு துளி விந்தில் இருந்து உதையமான ஒரு கோடி செல்களில் இருந்து ஒரு செல் கருமுட்டையை முட்டி முட்டி தன்னை முழுமைபடுத்திக்கொண்டு உருவாகும் ஒரு உயிர் ஒரு அதிசயம் என்றால் அந்த உயிர் ஜனித்து உயிர் வாழ்த்து ஒரு அர்த்தமற்ற வாழ்கையை வாழ்த்து ஒரு அர்த்தமற்ற மரணத்தை சந்தித்து போகும் பலரும் , வாழ்கையின் தாத்பரியங்களை உணராமல்  பிரபஞ்சத்தில் தான்மட்டுமே வாழ தகுதியானவன் என்ற இறுமாப்போடு பிறகு காணமல் போகும் கானல் நீராய் பலரும், ஏன் பிறந்தோம் என்று உணராமல் தன்னையும் தாழ்த்திக்கொண்டு பிறரையும் இம்சித்து வாழ்கையை நரகமாக்கிக்கொண்ட பலரும், தன் தேவைகள் வெறும் இச்சை சார்ந்த செயல்கள் செய்து தானும் நிம்மதியற்று பலரது நிம்மதியை கெடுத்து பிறகு மாயமாகும் பலரும், தன்னை உணர்த்து தன் சுற்றத்தையும் உணர்த்து வாழ்க்கை வாழ்வதை தவிர வேறொன்றுமில்லை என்பது உணர்த்து வாழும் சிலரும்கூட ஒரு அதிசயன்தான்.







நேற்று என்பது கடந்துபோன அதிசயம். இன்று இப்போது என்பது நம்மிடம் இருக்கக்கூடிய அதிசயம் நாளையென்பது நம்பப்படுகின்ற அதிசயம். அதிசயங்கள் பற்றி  சொல்ல எவ்வளவோ இருக்கிறது. காலத்தை விட அதிசயதிட்கான ஒரு உதாரணம் வேறு எதுவும்  இல்லை. காலை கண் விழிப்பது முதல் இரவு கண்ணுறக்கம்கொல்வது வரை அனைத்தும் ஓர் அதிசையம்தான்.


கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை எத்தனை அதிசயம் நாம் அன்றாடம் காண்கிறோம். மரணம்கூட ஒரு அதிசயம்தான். புதியவைகள் வரும்போது பழையவைகள் விடைபெற்றுதானே ஆகவேண்டும் அதுவும் ஓர் அதிசையம்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக