திங்கள், ஜனவரி 05, 2015

தேனீரும் ஜென் கதையும்...




 வாழ்க்கை என்பது ஒரு தேநீர் சுவைப்பது போன்றது என்கிறது ஜென் கதை. ஜென் கதைகள் எப்போதுமே வாழ்கையின் உள்ளர்த்தத்தை அதன் போக்கில் சொல்வதுதான். ஜென் கதைகள் சிறியவையாக இருப்பினும் அதன் ஆழம் ஒரு பெரிய அத்தியாயத்தை போன்றது. ஒரு தேனீர் அருந்தும்பொதுகூட விழிப்புணர்வோடு ஈடுபாடுடன் செய்யவேண்டும் அதை முழுமையாக உணர்த்துவதே இக்கதையின் நோக்கமாகும். இக்கணமே வாழ் என்பதே இதன் தாத்பரியம். ஒரு தேனீர் நிறமானது கண்ணிற்கு இதமாக இருக்கவேண்டும். பிரவுன் கலரில் கண்கள் முதலில் அந்த நிறத்தை பருகவேண்டும். பிறகு அதன் நறுமணம் நமது மூக்கின் நாசி துவாரம் வழியாக   சென்று  நமக்கு  புத்துணர்வு அளிப்பதாக இருக்கவேண்டும். பிறகு அதன் சுவையானது நாவிற்கு இனிமையை தருவதாக மனதிற்கு ஒரு பரவசத்தை ஏற்படுத்தி நம்மை வேகமாக இயங்க செய்யவேண்டும். ஆகா ஒரு தேனீர் எவ்வாறு அருந்தவேண்டும் என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் எப்படி வாழ்கையை ஒவ்வரு கனமும் ரசித்து வாழவேண்டும் என்கின்ற தத்துவமும் அதனுள் அடங்கி இருக்கிறது



ஜென்  கதைகள் எப்போதுமே ஒரு ஆழ்த்த துளையிடுதளை நம் மனதிற்குள் புகுதிக்கொண்டே இருக்கும். ஒரு குருவிடம் சிஷ்யன் ஒரு கேள்வி கேட்கிறான் குருவே நீங்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வதாய்  உணர்கிறேன். உங்களிடம் கேட்கும் அனைத்துமே நான் முன்பே கேட்ட தத்துவமாக, பாடமாக இருக்கிறது என்று கூரிக்கொண்டெ தேனீர் கோப்பையில் உள்ள தேனீரை ஒரு சிறிய கிண்ணதிட்குள்  ஊற்றியபடியே கேட்டார். அதற்கு குரு இன்னும் கொஞ்சம் தேனீரை ஊற்றும்படி கட்டளையிட்டார். கொஞ்சம் தேனீர் ஊற்றிய பிறகு தேனீர் கிண்ணம் நிரம்பிவிட்டது. குரு இன்னும் ஊற்ற சொன்னார் அதற்கு அந்த சீடன் குருவே கிண்ணம் நிரம்பிவிட்டது திரும்பவும் ஊற்றினால் தேனீர் வீணாகிவிடும் என்றார். அதற்கு குரு உன் மனமானது எதுவுமற்ற  கிண்ணம் போல் எதுவுமற்று  இருந்தால் மட்டுமே நான் கூருவதை முழுமையாக ஏற்க முடியும். உன் மனம் நிரம்பி இருந்தால் புதிய விஷயம்கூட புக இடமிருக்காது.ஆகையால் உன் மனதை எப்போது காலி தேனீர் கோப்பையாக வைத்துக்கொள்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக