சிரிப்பு உணர்வின் அடையாளம் மட்டுமல்ல உள்ளத்தின் அடையாளம்.சிரிக்க மறந்த மனிதன் பலர் அழுகைக்கு காரணமாகிறான். சிரிப்பு மனிதர்க்கு மட்டுமே அழகு சேர்க்கும் மாய மந்திரம். சிரிப்பு ஒரு மகிழ்ச்சியின் அடையாளம். சிரிப்பு தன்னை மறந்த தியானம். சிரிப்பு மனதை சிறகடித்து பறக்கவைக்கும் ஒரு பகைவனையும் நண்பனாக்கும் ஒரு தந்திரம். சிரிப்புக்கு மயங்காத மனங்கள் உண்டா. சிரிக்க மறந்தவன் வாழ்கையின் சுகத்தை இழக்கிறான். சிரிக்க தெரிந்தவன் மனதின் அழுக்கை துடைக்கிறான்.சிரிப்பு பற்றி எனக்கு தோன்றிய சில வரிக்க கவிதைகள் இதோ உங்கள் மனதிற்க்கு.
சிரிப்பு...
உணர்வின் பிறப்பு
மனச்சுமையின்
மறைப்பு!
நீ சிரித்தால்...
உலகம் உன்னை
உணர்த்து பார்க்கும்
சிரிக்க மறந்தால் அதே
உலகம் உன்னை
உலர்த்திப்பார்க்கும்!
சிரிக்க...
வயது வேண்டாம்
மனது வேண்டும்!
சிரிக்க...
சந்தர்ப்பம் வேண்டாம்
ஒரு
சம்பாசனை போதும்!
நீ...
சிரிக்க நினைத்தால்
உலகம் உன்னைப்பார்த்து
சிரிக்கும் முன்பே சிரித்துவிடு!
நீ சிரிக்க நினைத்தால்...
அதை இப்போதேனும்
தள்ளிப்போடாமல் சிரித்துவிடு
இல்லையேல்
காலனும் உன்னைப்பார்த்து
சிரித்துவிடுவான்!
நாளை...
நாள்காட்டியிடம் விட்டுவிட்டு
இன்று இப்போது சிரிக்கப்பழகு!
கவலைகள்...
உன்னை
கட்டிப்போட காத்திருக்கும்
கடமை உன்னை
முட்டி முட்டி உன்
சிரிப்பை தள்ளிப்போட
இடம் பார்த்து நிற்கும்!
துன்பம் வரும்...
வேளையில்
சிரிக்கச் சொன்னார் வள்ளுவர்
அப்படியிருக்க
துன்பம் வரும் முன்பே
சிரிப்பை சிறையில்
வைக்க வேண்டம் என்றே
சிரிக்க சொல்கிறேன்!
சிரி...
அதனால் துயர்
போகும் என்பதை
அறி!
- பா. மோகன் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக