சனி, ஜூன் 29, 2013

இயற்கை பேரழிவும் மனிதர்களின் பங்கும்...


மலைகளையும், காடுகளையும் அழித்த பெறுமை மனிதர்களாகிய நம்மைதான் சாரும். இன்று "இமாலைய சுனாமி" என்று வாய் கூசாமல் சொல்லி இயற்கையின் மேல் பழிசொல்லிவிட்டு ரிசிகேசில் மனித இனம் செய்யும் அடாவடித்தனம் இயற்கை மனிதர்களுக்கு சொன்ன பாடம் பொய்யாய் போனதற்கான அடையாளம் . இருக்கும் மனிதன் இறந்த மனிதனின் சடலத்தை பார்த்து இது போல் ஒரு நாள் இல்லாமல் போவோம் என்கின்ற ஒரு பாடம் ஏன் இல்லாமல் போனது இப்போது. இயற்கை சீற்றம் மனிதர்களை கொன்று மனிதர்களுக்கு புத்தி புகட்டியும் மனிதயினம் மாறுபட்டு நிற்பது பணத்தினால் ஆனா உலகம் என்பதன் எடுத்துக்காட்டு. மாண்டோர் உடமைகள் களவாடுவதும், பசித்தோருக்கு உயிரை கையில் பிடித்துக்கொண்டு பசியோடு அலைவோர்க்கு உணவின் விலை  250 ரூபாய் என உயர்த்திக் கூறுவதும், பெண்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவது, குழந்தைகளை கடத்துவது என்று என்னென்ன கேவலங்கள் இயற்கை கொஞ்சும் ரிசிகேசில்.
இறை அருள் தேடி சென்றவர்கள் இயற்கையுன் மிரட்டலுக்கு இரையானது போக காட்டுமிராண்டி மனிதர்களின் பணத்தாசைக்கு பலியானது கண்டு இறைவனே மனிதயினத்தை கண்டு ஒதுங்கிவிட்டான் போலும். குளத்திலும், குட்டைகளிலும் வாரி சுருட்டி பெரிய பெரிய மாடி கட்டிடம் கட்டி இப்போது மடிந்து போனது இயற்கையை அழிப்பதனால் ஏற்ப்படும் அழிவிற்கான அடையாளம்.  மரங்களை வெட்டி சாய்ப்பதும், இயற்கையை அழிப்பதுமாக நாம் செய்ததுதான்   நமக்கு வினையாக முடிந்தது இப்போது. அழிவது,ஆள்வதும் இயற்கையாக இருக்கட்டும். அவற்றை பாதுகாப்பதும், பராமரிப்பதும் நாம் கடமையாக ஏற்று செய்வோம். அப்படி செய்வதே நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டு செல்லும் மிகப்பெரிய சொத்தாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக