வெள்ளி, செப்டம்பர் 12, 2014

மகாபாரதம்

 


           மகாபாரதம் சிறு வயது முதலே தூர்தர்சனில் வெளியிடப்பட்ட போது பார்த்து ரசித்து அதை CD  வடிவில் பெற்று மீண்டும் ஒரு முறை பார்த்து இது போல் மீண்டும் யாராலும் மகாபாரத்தை எடுக்கமுடியாது, நடிக்கமுடியாது என்று நினைத்ததுண்டு. ஆனால் அதை பொய்யாக்கும் விதத்தில் தமிழில் விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. மகாபாரத்தின் உண்மை கரு மாறாமல் தற்கால தொழில்நுட்ப வடிவில் அழகான நடிப்பில் என்னை மெய் சிலிர்கவைத்தது என்றால் அது மிகையல்ல. என்றுமே எனக்கு பிடித்தது  இந்த மகாபாரதம் தான். யார் நடிப்பை பாராட்டுவது என்றே புரியாத வகையில் யாவரும் போட்டி போட்டு நடிப்பது மயில் தோகை கொண்டு  மனதை வருடிக்கொடுக்கிறது.

  
உலகில் இதுவரை எத்தனையோ கதைகள் சொல்லப்பட்டாலும் அது மகாபாரதம் போல் உண்மையை பொட்டில் அடித்தது போல் கூரியதில்லை.உலகில் எந்த ஒரு உபதேசமும் கீதையை போல் உணர்தியதில்லை. காலத்தின் போக்கை, மனிதனின் ஆணவத்தை அதற்கான வீழ்ச்சியை, அன்பின் தத்துவத்தை, ஞானத்தின் தோற்றத்தை யாரும் பரமாத்மாவை போல் உணர்த்தியதும் இல்லை. அப்படி உணர்த்தியிருந்தால் அது பரமாத்மாவை தவிர யாருமில்லை. ஒருவனுக்கு பிறப்பு நிச்சயம் அதுபோல் இறப்பு  நிச்சயம் அதை அடையும் வரை மனிதன் பெரும் இன்ப துன்பங்கள் அனைத்தும்  நிச்சயம். இப்படி நிச்சயிக்கப்பட்ட விசையத்தை நாம் நிச்சயமாக உணர்த்தும் இல்லை,உணர முயர்ச்சிப்பதும் இல்லை.

ஒருவரது பாவ புண்ணியங்கள் அவனது செயல் வடிவிலானது அதை "கர்மம்" என்று அழைக்கப்படுகிறது. எந்த செயல் செய்தாலும் அது இறைவனை அடைவதாக அமையுமானால் அதுவே மோட்சத்தின்  திறவுகோல்  ஆகும். உண்மை யாதெனில் யாரும் அந்த உண்மையை உணர்வதில்லை. ஆணவம் கொண்டு அழிவை தேடும் ஆன்மா இறுதில் மறுபடியும் பிறக்கிறது. பிறப்பும் இறப்புமாக தொடர்கதையாக தொடரும் பிறப்பு இறைவனின் திருவடியை பற்றுதலால் மோட்ச்சம் பெரும் என்பதே உண்மையாகும்.
ஒருவம் பாவம் அதிகம் புரிய மீண்டும் பிறந்து அந்த பாவத்தின் பலனை அனுபவிக்கிறான்.அவ்வாறே புண்ணியம் செய்தவனும் அதற்கான நன்மையை பெற மீண்டும் பிறக்கிறான். ஆகா பலனில் பயனில்ல என்று உணர்தவனால் மட்டுமே பிறப்பறுக்கிறான்.
பலர் கர்ணனை போல் உண்மை அறிந்தும் தவறான சேர்க்கையால்அவரவர் தன்மையினை காயப்பபடுத்தி  விடுகிறார்கள். காலத்தின் கை எப்போது ஓங்கியே  இருக்கும் அதை மனிதன் மாற்ற நினைத்தால் மனிதன் மடிந்து போவானே தவிர காலம் ஒருபோது தோல்வியுறாது. அநியாயம் என்கிற ஒன்று நியாயத்தினை ஆக்கிரமிக்கும் பொது நியாயம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதே மகாபாரதம் உணர்த்தும் கருத்து.

நல்லவன் அழிந்தாலும்அவனது நியாயத்தால் அழிவற்ற கீர்த்தியினை பெறுகிறான். ஆனால் அநியாயதல் வாழ்பவன் வீல்தவனாகவே கருதப்படுகிறான்.

எது நியாயம்? எது அநியாயம்?  என்பது யாவரும் அறிவார் அதை வழிமுறை படுத்தும் விதம்தான் வாழ்கையின் அடிப்படை ஆதாரம். செயல் ஒன்றே மனிதனை வேற்றுமை படுத்துகிறது. மற்றபடி பிறப்போ அவனது வளர்ப்போ இரண்டாம் பச்சம்தான்.
 வெற்றி என்பது புஜங்கள் ஒன்று சேர்வதால் அல்ல மனங்கள் ஒன்று  சேர்வதாகும். கால சக்கரம் பல கடந்தாலும் உண்மை ஒன்றுதான் தர்மம் வெல்லும் மகாபாரதம் உணர்த்துவதும் அதுவே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக