இந்த பொங்கல் திருநாள்...
உழவர்களுக்கு மட்டும்
சொந்தமான நாளல்ல
உழைப்பவர்களுக்கு
சொந்தமான நாள்!
சூரியன்...
மனமுவந்து கொடுத்த
வெளிச்சம்
மழை மண் நுகர்ந்து
கொடுத்த ஆற்றல்
விதைகள் மனமகிழ்ந்து
கொடுத்த வளர்ச்சி!
இயற்கையின் கொடைக்கு...
நமது அப்பழுக்கற்ற
நன்றிக்கடன் செலுத்துவதற்கே
இந்த
பொங்கல் திருநாள்!
இந்த திருநாளில்...
சிரித்து மகிழ்ந்திட
இனிப்பு வழங்கிட
எல்ல வளமும்
பெற்று இன்புற்று
வாழ பொங்கல்
நல்வாழ்த்துக்கள்!
இது ஒரு பொங்கல் கவிதை...
இன்பம் பொங்கும் கவிதை!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக