செவ்வாய், டிசம்பர் 13, 2011

பாரதவிலாஸ் படமும்... மக்கள் கற்கவேண்டிய பாடமும்...


"பாரதவிலாஸ்" என்ற திரைபடத்தை நான் சிறுவனாக இருந்தபோது பலமுறை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த படம். ஒற்றுமையான  இந்தியநாடு எப்படி இருக்கவேண்டும்
என்ற கனவோடு இந்தப்படம் எடுக்கப்படிருக்கிறது . இந்த படத்தில் ஒவ்வரு மாநிலத்தை சேர்ந்த ஒவ்வரு குடும்பமும் எப்படி கூட்டு குடித்தனம் நடத்துகிறது 
என்பதுதான் இந்த படத்தின் கதை. எல்லா மக்களும் சமம். எல்லா மக்களும் சேர்ந்த இந்திய மக்களின் ஒற்றுமையே   இந்திய நாடிட்கு பெருமை என்பதை உணர்த்தியது இப்படம்.


இந்த படத்தில் வரும்  "இந்தியநாடு என்வீடு இந்தியன் என்பது என் பேரு" என்ற  பாடல் மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார்கள். அந்த பாட்டில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் மட்டுமல்ல எல்லா  மாநிலத்தவரும் தங்கள் 
மாநிலம்,மொழி,இனம், கலாச்சாரத்தின்   பெருமைகளைப்  பற்றி பாடுவதாக அமைக்கப்பட்டிருந்தது. மற்ற மாநிலத்தவர் ஒற்றுமையாக  ஒரே வீட்டில் 
இருந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர்த்துவதே   இப்படம்.


 இந்த உலகம் அமைதியாக இருக்கவேண்டுமானால் எல்லா நாடுகளும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். ஒரு நாடு அமைதியாக இருக்கவேண்டுமானால் பல மாநிலங்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். மாநிலம் அமைதியாக இருக்கவேண்டுமானால் பல நகரங்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். நகரம் அமைதியாக இருக்கவேண்டுமானால் பல வீடுகள் அமைதியாக இருக்கவேண்டும். வீடுகள் அமைதியாக இருக்கவேண்டுமானால் பலமனிதர்கள் ஒற்றுமையாக  இருக்கவேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் எங்குமே அமைதி இருக்காது.  
   



முல்லை பெரியார் ஆணை விவகாரம். எதையும் விட்டுக்கொடுத்து அடுத்தவர்களுக்கு பகிர்ந்தளித்து வாழ்தால்தான் வாழ்க்கை அமைதி பிறக்கும். எதை நாம் கொண்டுபோகப்போகிறோம் 
என்று இத்தனை சண்டை. இயற்கை என்பது பொதுவானது யாருடைய வானத்தையும் யாராலும் திருடிவிடமுடியாது.
யாருடைய காற்றையும் யாரும்  தடுக்க முடியாது. அப்படியிருக்க ஏன் குடிக்கும் 
தண்ணிருக்கு மாட்டும் இத்தனை பிரச்சனை செய்கிறார்கள். எத்தனை ஆணை கட்டினாலும் நாம் வாழப்போவது சொற்ப நாட்களே அதற்கா இத்தனை 
சண்டைகள்?  "பாரதவிலாஸ்" படத்தை போன்று எல்லா மாநிலத்து மக்களும் ஒற்றுமையாக இருந்துவிட்டால் இந்தியா-2020 யில் கண்டிப்பாக வல்லரசு ஆகிவிடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக