மகாகவி சுப்ரமணிய பாரதியின் 130ஆவது பிறந்த நாள் நேற்று (11-12-2011) . இன்று(12-12-2011) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 62 ஆவது பிறந்தநாள். எனக்கு பாரதியையும் பிடிக்கும் ரஜினிகாந்த்தையும் பிடிக்கும் ஆனால்
ரஜினிகாந்த் அவர்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் என் பாரதிக்கு கொடுக்கவில்லை என்ற உண்மையை
இன்று தினமணியில் வந்த செய்தி என்னை அரைந்ததுபோல் எனக்கு உணர்த்தியது. பாரதியை நான் மறந்து விட்டேன் என்ற
குற்ற உணர்வு குத்தியது அப்போது, அதற்காக பாரதியிடம் மண்ணிப்பு கேட்கிறேன். " மகாகவியே உன்னை மறந்த
என்னுடைய தவறை மண்ணிப்பாயா?". பாரதியை இந்த தலைமுறையே மறந்துவிட்டால் பின் அடுத்த தலைமுறைக்கு அவரது புகழை யார் கொண்டு சேர்ப்பது என்ற அச்சம், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று பாடிய பாரதியை போல் சுலபத்தில்
எடுத்துக்கொண்டு போகமுடியவில்லை இப்போது. பாரதியின் புகழ் என்றும் அழியாத ஒரு காலநிலை கடந்தவர் பாரதி என்பதே உண்மை.
எட்டையபுரத்து சிங்கம் பாரதியின் எழுச்சிமிகு கவிதை நம்மை மயக்கும், நம்மைவிட்டு போகாது
அப்படியே நிலைக்கும். மகாகவியின் ஆற்றல் சக்திமிகு நவகவிதை. பாரதி தன்னை பெரிய கவிஞன் என்று சொல்லும்போது அதை யாரும் நம்பவில்லை.
பாரதி தன்னை தானே புகழ்த்துகொள்வதாக பேசினார்கள். ஆனால் பாரதி சொன்ன வார்த்தைகளே உண்மையாகியது. அவரது சொல்லின் தன்மை
புதியது. சுவை புதிது, பொருள் புதிது அவரது கவிதைநயம் புதிது இந்த உலகில் கவிராஜன் இல்லை என்ற குறை தன்னால் கழிந்தது என்கின்ற உண்மையை பாரதி பாடியதுபோல் இனி யாராலும் பாட முடியும்.
விதியையும் எமனையும் சவால்விடும் பக்குவம் அவரிடம் மட்டுமே இருந்தது. பாரதி ஒரு தீர்க்கதரிசி அவரால் மட்டுமே சுதந்திரம் பெரும் முன்பே ஆடிப்பாடி ஆனந்த சுதந்திரம்
அடைந்துவிட்டோம் என்று முரசுகொட்ட முடியும். பெண் விடுதலைப்பற்றி அவரைத்தவிர யாரும் குரலெழுப்பவில்லை அப்போது.
பாரதி சிலவருடமே வாழ்தாலும் பலவருட சாதனையை புரிந்தவர். அந்த மகாகவிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நின்புகழ் பலகாலம் நிலைக்கட்டும்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக