வியாழன், பிப்ரவரி 02, 2012

தனிமையின் தவிப்பு... பாகம்- 5

ஜான் தனது மனைவி மேரியையும், மகன் மார்கஸ் மற்றும் மகள் மார்தாவையும் முந்தையநாள் விட்டுச்சென்ற விடுதியில் சென்று பார்கிறார். அப்போது அவர்களோடு ஜினோ என்ற நாயும் அவர்களோடு இருக்கிறது. ஜான் வருவதை பார்த்து ஜினோ சந்தோஷத்தில் சப்தம் எழுப்பியது. ஜான், ஜினோவை தடவிக்கொடுத்தபடியே தனது மனைவி மேரியை சந்திக்கிறார். அப்போது மேரி  கவலையோடு ஜான் முகத்தை பார்க்கிறாள். தனது அப்பா வந்த சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறாள் மகள் மார்த்தா. மகன் மார்கசுக்கு தனது அப்பா  ஜான் மீது கோபம் தங்களை விடுதியில் தங்கவைத்தது அவனுக்கு புரியவும்யில்லை, பிடிக்கவும்யில்லை.

 ஹலோ மேரி, என்று தனது மனைவியின் கைகளை பற்றிக்கொண்டு ஜான் சொன்னதும் மேரி ஜானை அணைத்தபடி அழுதாள்.

                      

மேரி ப்ளீஸ் நான்தான் வந்துட்டேன்ல கண்களை துடைத்துக்கொள், சரி  கிளம்புங்க போகலாம் என்று ஜான் சொன்னதும்  மேரி மற்றும் மார்த்தா எங்கே? என்பதை போல் பார்த்தார்கள். மார்கஸ் மட்டும் அமைதியாகவே இருந்தான் அவனுக்கு அப்பா மீதுள்ள கோபம் இன்னும் குறையவில்லை. ஜான்  இந்தியாவை சேர்ந்தவர். வேலைக்காக அமெரிக்கா வந்தவர். மேரி ஜன்ஜினோ லண்டனை சேர்ந்தவர். மேரியின் குடும்பம் சமீபத்தில்தான்  அமெரிக்காவில் குடியேறியவர்கள். ஜானும், மேரி ஜன்ஜினோவும் சர்ச்சில் தான் முதல் முதலில் சந்தித்தனர். இருவருக்குள்ளும் காதல் பிறந்தது. வீட்டில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வேலைக்கு சென்று கடுமையாக உழைத்தனர். அவர்களுக்குக்கு முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது மார்கஸ் என்று பெயர் வைத்தனர், பிறகு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது அதற்கு மார்த்தா என்று பெயர் வைத்தனர். வாழ்க்கை நன்றாக போய் கொண்டிருக்கும்போது  ஜான் தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து டிபர்ட்மண்டல் ஸ்டோர் ஒன்றை ஆரம்பித்தார் ஆரம்பத்தில் நன்றாக வியாபரமானது பிறகு அவரது ஸ்டோர் பக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட வால்மார்ட் நிறுவனத்தின் பெரிய கிளையினால்   அவரது வியாபாரம் அடிவாங்கியது. கடன் அதிகமாகி ஜான் இருந்த வீடு ஏலத்தில் விடும் அளவுக்கு போனது. ஜான் தனது நண்பர்கள் என்று நினைத்த யாரும் உதவி செய்யவில்லை. வீட்டைவிட்டு வெளியேறும் நிலைமையில்தான் தனது குடும்பத்தை ஒரு விடுதியில் தங்கவைத்துவிட்டு தனது நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்தித்து உதவிபெற தனது காரை எடுத்துக்கொண்டு சென்றார் ஜான். ஆனால் அந்த நண்பர் அப்போது அங்கு இல்லை. இனி என்ன செய்யபோகிறோம் என்ற கவலையில் தனது காரை செலுத்தியதால் ஜான் ரிப்சியின் வீட்டில் விபத்தை ஏட்படுத்திவிட்டார். பிறகு ரிப்சி வீட்டில் நடந்தவைகளை  மேரிக்கு சொன்னபோது மேரியால் நம்பமுடியவில்லை. மேரி ஜன்ஜினோ ஒரு சந்தேகதொடவே அங்கிருந்து புறப்பட்டாள்.        


                                                                                  ( தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக