ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

தனிமையின் தவிப்பு... (பாகம்- 7)


ஜான் தனது காரை சரி செய்ய எடுத்துச் செல்கிறார். அப்போது தனக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஒரு கவலை மனதை வாட்டிக்கொண்டே இருந்தது.அவர் மீண்டும் தனது தொழிலை தொடர யாராவது பண உதவி செய்ய வேண்டும். இப்போதைக்கு ரிப்சியிடம் உதவி பெறலாம் ஆனால் ரிப்சியிடம் உதவி கேட்க சங்கடமாய் இருந்தது. ஏர்கனவே ரிப்சியால்தான் தனது குடும்பம் எந்தவித குறையுமில்லாமல் இருக்கிறது. அவரிடம் போய் எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்று எப்படி கேட்பது என்ற கவலை அதோடு மேரிக்கு ரிப்சியின் வீட்டில் தங்கி இருப்பது பிடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது ஜானுட்கு. இத்தனையும் மனதில் கொண்டு காரை சரி செய்ய எடுத்துச்சென்றார்.

மார்த்தாவும், மார்கசும் ரிப்சியிடம் ஒட்டிக்கொண்டார்கள். ரிப்சி ஒரு நடிகை என்பதால் உடலை கட்டுக்கொபாய் வைத்திருந்தார். அவரது  அழகும் இளமை காலத்தில் இருந்தது போல அப்படியே இருந்தது. அதோடு குழந்தைகளும் ரிப்சியோடு  சேர்ந்து கொண்டது மேரியால் தாங்க முடியவில்லை. தனது பொறாமையை மறைக்க மேரியால்  முடியவில்லை, அதே சமயத்தில் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை காலி செய்யவும் முடியாத சூழ்நிலையில் மேரி இருந்தார். ரிப்சிக்கு  மேரியை பார்த்து பொறாமை ஏற்பட்டது ஒரு அழகான குடும்பம், அருமையான குழந்தைகள், அன்பான கணவன் இவை எதுவும் கொடுத்துவைக்காத வாழ்க்கை என்ற மனக்கசப்பு ரிப்சிக்கு.

மேரி இரவு உறங்க வெகு  நேரமானதால் காலை எழுந்திருக்க நேரமாகிவிட்டது. எழுத்தும்
மார்த்தா! மார்த்தா! என்று தனது பெண்ணை அழைத்தபடியே படிக்கட்டில் இருந்து இறங்கி வந்தார்.

அம்மா! நான் இங்க இருக்கேன் என்று சமையல் அறையில் இருந்து பதில் வந்தது மார்தவிடம் இருந்து.

இங்க என்ன செய்யறிங்க ரெண்டு பெரும் ? என்று கோபமாய் கேட்டார் மேரி.

அதற்கு குழந்தையைகள் எனக்கு உதவறதா சொன்னங்க அதான் காய் வெட்டி கொடுக்குறாங்க என்று ரிப்சி சொன்னதும் மேரிக்கு கோபம் வந்துவிட்டது. 

  நான் சமையல் செய்தா சமையலறை பக்கமே வரமாடிங்க இப்ப என்ன புதுசா போங்க என்று மேரி திட்டியதும் இருவரும் அங்கிருந்து சென்றார்கள்.

ரிப்சிக்கு மேரி தன்மீது கோபமாக இருப்பது புரிந்தது.ரிப்சி மெளனமாக மார்தவும், மார்கசும் போவதை பார்த்தபடி தனது வேலையை தொடர்ந்தார்.

                                                                              ( தொடரும்...)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக