வெள்ளி, பிப்ரவரி 10, 2012

தனிமையின் தவிப்பு... (பாகம்- 6 )


ஜான் தனது குடும்பத்தை ரிப்சிக்கு அறிமுகம் செய்துவைத்தார். ரிப்சி மேரியை மிக அன்பாக உபசரித்தார்.  மேரிக்கு  ரிப்சி செய்யும் இந்த உதவிக்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே கருதினார். ஆனாலும் தங்கள் நிலைமைக்கு ஏதோ ஒரு வீட்டின் அடைக்கலாம் அவசியம்  தேவை என்பதால் மேரி ரிப்சியிடம் தனது மனதில் உள்ள கேள்விகளை கேட்க மனம் வரவில்லை.ரிப்சிக்கு மேரி ஜன்ஜிநோவின் சந்தேகம் புரிந்தது. ரிப்சி தானாக மேரிக்கு விளக்கமளிக்க முன்வந்தார். பல கேள்விகள் மேரி மனதில் அலைகளிப்பதை உணர்த்து தனது நிலையை மேரிக்கு எடுத்துரைக்கிறார்.

மேரி நான் உங்கள் குடும்பத்திற்கு உதவி செய்ய நினைப்பது எனக்கு சந்தோசமளிக்கிறது. எனக்கானாக என்று ஒரு குடும்பம் இல்லை இப்போது. என் கணவர் என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். எனக்கான எல்ல வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார் ஆனால் ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கவில்லை. உங்களுக்கு நல்ல குடும்பம் இருந்தும் அதை அனுபவிக்க வேண்டிய வசதிகள் இல்லை. ஆண்டவன் ஒன்றை கொடுத்தால் இன்னொன்றை கொடுக்க மறந்துவிடுகிறார். வாழ்க்கை எப்போதுமே ஒன்றிருந்தால் ஒன்று இருப்பதில்லை. எனக்கு உங்கள் குடும்பம் பிடித்திருக்கிறது. உங்கள் நிலைமை சரியாகும்வரை நீங்கள் இங்கே தங்கலாம் என்று ரிப்சி கூரி முடித்தார்.

மேரிக்கு மெல்ல நம்பிக்கை பிறந்தது. மெல்ல தனது கையை ரிப்சியின் கைமீது வைத்தார். நான் உங்களை நம்புகிறேன் என்று தனது புன்னகை வெளிப்படுத்தினார் மேரி. இரவு நேரமானதும் ரிப்சி தனது படுக்கை அறையை ஜான் மற்றும் மேரிக்கு கொடுத்து உறங்கச் சொன்னார்.

இரவு மேரியால் அந்த படுக்கையில் உறங்கமுடியவில்லை. ஜான் மேரியை பார்த்தபடி மேரியிடம் என்ன கேட்பது என்பது தெரியாமல் குழப்பத்தோடு கண் விழித்திருந்தார். மேரி தனது எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்கின்ற தீவிர கவலையில் இருக்கிறார் என்பது ஜானுக்கு தெளிவாக தெரிந்தது.

              ( தொடரும்...)

  
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக