வெள்ளி, நவம்பர் 11, 2011

மறந்துபோன காதல் கதை... பாகம்- 6




 அர்ஜுன் மிகவும் குழப்பத்தோடு தனது அறைக்கு வருகிறான் அப்போது மனோஜ் அர்ஜுனிடம்

 என்ன அர்ஜுன் பூஜாகிட்ட காதலை சொல்லிட்டியா?

இல்லை மனோஜ் அவகிட்ட போகிறவரைக்கும் இருந்த தைரியம் அவளை பார்த்தவுடன் காணாம போயிடுச்சு அது மட்டும் இல்லை நான் என் காதல் கவிதையை சொல்லலாம்னு போனேன் ஆனா அவளோ  நட்பு பற்றிய கவிதையை எனக்கு படிச்சு காட்டினாள். அதனால அவகிட்ட சொல்ல முடியலை.

சரி வருத்தப்படாதே அர்ஜுன்.

இல்லடா அவகிட்ட காதலை சொல்லவும் முடியல சொல்லாம இருக்கவும் முடியல. ரொம்ப அவஸ்த்தப்படுறேன். எதுக்கு அவள்  மேல் காதல் வந்தது?  ஏன் நான் இப்படி இருக்கேன்? என்னால சரியா சாப்பிட முடியல, தூங்க முடியல. அவளை தாண்டி என்னால யோசிக்க முடியல.

அர்ஜுன் நீ ரொம்பவே குழம்பிப் போய்யிருக்க நீ போய் சாப்பிட்டு தூங்கு.

எனக்கு சாப்பாடு வேண்டாம் மனோஜ் என்று கூரிவிட்டு தனது அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டான் அர்ஜுன்.

சுற்றுலா முடிந்து கல்லூரிப்  பேருந்து  கல்லூரிக்கு வந்தது அங்கிருந்து  அனைவரும்  வீ ட்டிற்கு  சென்றனர். அர்ஜுன்  பூஜாவை பார்க்கவும் முடியாமல்.பார்ப்பதை தவிர்க்கவும் முடியாமல் ரொம்ப பலகீனமாய் பூஜாவிட்கு விடையளித்துவிட்டு வேகமாக தனது பைக்கை செலுத்தினான். அவன் மனம் பூஜாவையே  நினைத்திருந்ததால் அவனல்  பைக்கை  சரியாக ஓட்ட முடியவில்லை.

அப்போது திடீர் என்று விபத்து ஏற்பட்ட சப்தம் கேட்டு எல்லோரும் ஓடிச் சென்று பார்த்தனர்.
பூஜாவும்  சத்தம் கேட்டு வேகமாக  சென்று பார்த்தாள் கல்லூரி வாசலை வேகமாக தண்டிச்  சென்ற அர்ஜுன் எதிர்பாராத விதமாக
ஒரு கார் மீது மோதி விழுந்துகிடந்தான்.இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத    பூஜா அதிர்ச்சியில் செயலற்றுப்  போனாள் அவள் ஏற்கனவே தனது தாயை விபத்தில் பறிகொடுத்தது  அவள் மனதில் ஆழமாய் பதிந்திருந்தது. அப்போது பூஜா தன்னை அறியாமல் அழுதாள்.அப்போது அது அர்ஜுன் மீது வைத்த காதல் என்று அவளுக்கு புரியவில்லை. அவனுக்கு விபத்து ஏற்பட்டதனால் அழுகிறாள் என்று எல்லோரையும்  போல் அவளும் நினைத்துக் கொண்டாள்.

                                                               ( காதல் தொடரும்....)







   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக