சனி, நவம்பர் 26, 2011

மறந்துபோன காதல் கதை... கடைசி பாகம்


தான் அர்ஜுனிடம் பேசாமல் இருப்பது தன்னையும் காயாப்படுதுகிறது அர்ஜுனையும் காயாப்படுதுகிறது என்பதை உணர்ந்த பூஜா செமஸ்டர் விடுமுறை முடிந்து இறுதி ஆண்டு கல்லூரிக்குள் நுழைந்ததும் பூஜா அர்ஜுனை தேடிச்சென்றாள். அப்போது அர்ஜுன் மரத்தடியில் சோகமாய் அமர்ந்திருந்தான்.

அர்ஜுன்! உன்கிட்ட பேசாம இருந்ததுக்கு என்னை மன்னிச்சுடு.

நான் ஏதாவது தப்பு செய்தேனா பூஜா? என்று மென்மையாக கேட்டான் அர்ஜுன்.

அப்போது பூஜா தன் அப்பா அர்ஜுனுடைய அம்மா கவிதா பற்றி தனது டைரியில் குறிபிட்ட கவிதாவின் குணங்கள் அப்படியே 
அர்ஜுனிடமும் இருப்பதை நினைத்து வியந்தாள். அதை காட்டிக்கொள்ளாமல் அர்ஜுனை சமாதானப்படுத்தினாள்.
இருவருக்குளும் காதல் வளர்ந்தது. அப்போது ஒரு பெரிய நிறுவனமாகிய வால்- மார்ட்  தங்கள் கல்லூரிக்கு வந்து  மாணவர்களை வேலைவாய்ப்பிற்கு  தேர்வு செய்யப்போவதாக செய்தி அறிவிக்கப்பட்டது.   



இந்த அறிவிப்பை கேட்டதும் பூஜா,அர்ஜுன் மற்றும் அவர்களது நண்பர்கள் அனைவரும்  நேர்காணலுக்கு தயாரானார்கள். நேர்காணலில் பூஜா, அர்ஜுன்,ப்ரியா, கார்த்திக் இவர்களை சேர்த்து பத்து பேர் தேர்வானார்கள். இந்த பத்து பேரும் ஒரு வருடம் அமெரிகாவில் வேலை செய்யவேண்டும் என்ற ஒப்பந்தம் போடப்பட்டது. 

பூஜா அமெரிக்க செல்ல சுவாமிநாதனிடம் அனுமதிகேட்டாள்.

அப்பா எனக்கு அமெரிக்கால வேலை கிடைத்திருக்கிறது. கல்லூரி முடிந்து இரண்டு மாசத்தில்  அமெரிக்கா போகவேண்டும்.

எப்படிமா கல்யாணமாகாமல்  உன்னை  தனியா அமெரிக்கா  அனுப்பமுடியும்?

என்னோடு அர்ஜுனும் தேர்தேடுக்கப்பட்டிருக்கான், அப்பா நானும் அர்ஜுனும் ஒருத்தர ஒருத்தர் விரும்புகிறோம். எங்களுக்கு கல்யாணம் செய்து வைத்தால் நாங்கள் இருவரும் சேர்ந்து அமெரிக்கா செல்வோம் என்றாள் பூஜா.

சுவாமிநாதனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. சுவாமிநாதனால் பதில் சொல்லமுடியாமல் திகைத்தார். தனது முன்னால் காதலியின் மகனை காதலிப்பதாக அவனை திருமணம் செய்து வைக்கும்படி 
தன் மகள் கூரியதைக் கேட்டு  மெளனமாக தன் அறைக்கு சென்றார் சுவாமிநாதன். 

அர்ஜுனும் தனக்கு வேலை கிடைத்த விசயத்தை தனது அம்மா கவிதாவிடம் கூரினான். அதோடு பூஜாவை காதலிப்பதாகவும் தங்களுக்கு
திருமணம் செய்து வைத்தால் இருவரும் சேர்ந்து அமெரிக்கா செல்வதாகவும் கூரினான். எது நடந்துவிடக்  கூடாது என்று  கவிதா பயந்தாரோ அதுவே நடந்துவிட்டது.

அம்மா நீதான் அப்பகிட்ட பேசி எனக்கும், பூஜாவிட்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டான் அர்ஜுன்.

முடியாது அர்ஜுன் பூஜாவை திருமணம் செய்துகொள்ள நான் அனுமதிக்கமாட்டேன்.

இந்த பதிலை சற்றும் எதிர்பார்காத அர்ஜுன் அதிர்ச்சி அடைந்தான்.

ஏன் முடியாது? நான்  பூஜா பற்றி பேசும்போதெல்லாம் நீ ஒண்ணுமே சொல்லாமல்  இப்ப முடியாதுன்னு சொன்னா என்ன  அர்த்தம்?

அப்போ பூஜா யாருன்னு தெரியாது அதனால அப்படி பேசினேன். என்று தன்னை அறியாமல் கவிதா கூரிவிட்டார்.

அர்ஜுனிட்கு இந்த பதில் தூக்கிவாரிப் போட்டது. இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அர்ஜுனுடைய அப்பா சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உள்ளே வந்தார். அர்ஜுனும் கவிதாவும் ராஜேஷ் வந்ததை
கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போ பூஜா யாரும்மா?

கவிதா தன் துக்கம் தாளாமல் அழுதுகொண்டே தான் மறைத்து வைதிருந்த ரசசியத்தை உடைத்தார்.

பூஜாவுடைய அப்பா சுவாமிநாதனும் நானும் கல்லூரி படிக்கும்போது காதலித்தோம் என்ற உண்மை கேட்டு அர்ஜுன் மட்டுமல்ல ராஜேஷும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

  கவிதா கண்களை துடைத்தபடி எல்லாவற்றையும் அர்ஜுனிடம் கூரினார். எல்லாவற்றையும் கேட்ட ராஜேஷ் மெல்ல கவிதாவிடம் சென்றார்.

என்னை மன்னிச்சுடும்மா உன்னுடைய உணர்வுகளை  புரிந்துகொள்ளாமல் நான் உன்னை கஷ்டப்படுத்திடேன். அர்ஜுன் நீயும் என்னை மன்னிச்சுடு என்று தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.

மறுநாளே ராஜேஷ்  சுவாமிநாதனை அவரது அலுவலகத்தில்  சந்தித்தார்.


 நான் ராஜேஷ் அர்ஜுனுடைய அப்பா.

அவரை முன்பே தெரியும் என்பது போல் தலைஅசைத்து ஆமோதித்தார்.

நீங்களும் கவிதாவும் கல்லூரி நாட்களில் காதலித்தது நேற்று கவிதா சொல்லி  தெரிந்துகொண்டேன். அது விதியாக
கூட இருக்கலாம். நாம விரும்பியது கிடைக்காமல் கஷ்டப்பட்டது போல் நம்ம பசங்களும் கஷ்டப்பட
வேண்டாம். அதனால் பூஜாவை அர்ஜுனுக்கு திருமணம் செய்து வைக்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார் ராஜேஷ்.

ராஜேஷ் இவ்வளவு மெச்சுர்டாக பேசுவார் என்பதை எதிர்பார்க்காத சுவாமிநாதன், ராஜேஷ் சொன்னதை ஆமோதித்து பெண் பார்க்க வரும்படி சம்மதம் தெரிவித்தார்.

  

திருமணம் நிச்சயிக்கப்பட்டு மிக சிறப்பாக நடந்தது.


 திருமணம் முடிந்ததும் பூஜா பேராசிரியை பவித்ராவிடம் சென்று எல்லோர் முன்னிலையிலும் பேசினாள்.
  
  நான் உங்ககிட்ட ஒன்னு கேட்ட மறுக்கமாட்டிங்களே என்று பேராசிரியை பவித்ராவிடம் கேட்டார் பூஜா. 

சொல்லு பூஜா கண்டிப்பா உனக்காக எதையும்  செய்வேன். என்ன வேண்டும்? 

நீங்க என் அப்பாவை கல்யாணம் செய்துகொள்வீர்களா? 

பூஜாவின் இந்த கேள்வி பவித்ராவிட்கு மட்டுமல்ல திருமணத்திட்கு வந்த எல்லோருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. 

பூஜா தொடர்ந்தாள் என் அப்பாவிற்கு ஒரு நல்ல துணையா நீங்க  இருக்கணும் சம்மதிப்பீர்களா? 

பூஜா நீ என்ன பேசறேன்னு தெரிஞ்சுதான் பேசறியா?

ஆமாம்! இதை பற்றி சித்ராவிடம் சம்மதம் வாங்கிவிட்டேன் என் பாட்டியிடமும் சம்மதம் வாங்கிவிட்டேன். இனி உங்க சம்மதமும், அப்பா சம்மதமும்தான் மிச்சம் என்று முடித்தாள்.


பேராசிரியை பவித்ரா மெல்ல தன் மகள் சித்ராவை பார்த்தார். சித்ரா கைதட்டி சம்மதம் தெரிவித்தாள். பவித்ராவும் சித்ராவின் வாழ்கையை கருத்தில்கொண்டு திருமணத்திட்கு சம்மதம் தெரிவித்தார். பூஜா, அர்ஜுன் திருமணம் நடந்த அதே பந்தலில் பவித்ராவிட்கும், சுவாமிநாதனுக்கும் திருமணம்
நடந்தது. அங்கிருந்த அனைவரும் பூஜாவை வாழ்த்தி பாராட்டினர். அப்போது கவிதா பூஜா செய்த செயலைப் பாராட்டி அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டார். எல்லோரும் சந்தோசமாக விடைபெற்றனர்.
 
பூஜாவும், அர்ஜுனும் எல்லோருடைய ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டு அமெரிக்கா சென்றனர்.

                                                                     ( முற்றும்...)



  



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக