புதன், அக்டோபர் 26, 2011

மறந்துபோன காதல் கதை... (பாகம்-1)



       காதல் ஒரு ஆணுக்கும், பெண்ணிட்குமான புரிதல் என்னும் ஒப்பந்தம். பிரபஞ்சத்தின்  அழகாக ரகசியம் காதல். இது யாருக்கு எப்போது வரும் என்றெல்லாம் தெரியாதபோது வரும் காதல் முடிவில் வெற்றி அடைந்தாலும், அடையாவிட்டாலும் காலம் முழுவதும் மனதிற்குள் மௌனமாய் மண்டியிட்டு கிடக்கும் ஒரு வெளிப்பாடே காதல்.  அது வளர்ச்சி அடையாவிட்டாலும் எங்கோ நம் மனதிற்குள்  ஒரு மூலையில் தேங்கி நிற்கும் என்பது எக்காலத்திலும் யாராலும் மறுக்க முடியாத 
ஒன்று. 

கல்லுரி முதல் நாள் அர்ஜுன் வேக வேகமாக கிளம்புகிறான். 

டே அர்ஜுன்! இங்க வாட முதல் நாள் காலேஜ் போகும்போது  நெற்றிக்கு திருநீர் இட்டுக்கிட்டு போடா! என்றார்  அர்ஜுன் அம்மா கவிதா.

ஓகே அம்மா! என்று நெற்றிக்கு திருநீர் இட்டுக்கொண்டு தனது பைக்கை எடுத்து கொண்டு  கல்லூரிக்கு  செல்கிறான் அர்ஜுன்!
                                                            ***

ஏண்டி பூஜா இன்னுமா டிரஸ் பண்ற. முதல் நாள் காலேஜ் போற  கொஞ்சம் சீக்கிரம் வாடி என்றார்  பூஜாவின் பாட்டி பங்கஜம்.


பாட்டி போகலாம் என்று தனது அறையை விட்டு வெளியே வந்தாள்  பூஜா. அவள் அணிந்த பாவாடை தாவணியை 
பார்த்து கண்ணத்தில் ஒற்றிகொண்டார் பங்கஜம்.

பூஜா பாவாடை தாவணியில் இருக்கும் அழகை பார்த்து பூஜாவின் அப்பா சுவாமிநாதனுக்கு விபத்தில் இறந்த தனது மனைவி செல்வி நியாபகம் வந்தது.

அப்படியே உன் அம்மாவை பார்க்கற மாதிரி இருக்கு என்று  பூரித்தபடியே  பூஜாவை காரில்  கல்லூரிக்கு அழைத்து செல்கிறார் பூஜாவின் அப்பா சுவாமிநாதன்.

பூஜாவும், அர்ஜுனும் ஒரே நேரத்தில் கல்லூரியை அடைகின்றனர்.

பூஜா காரை விட்டு இறங்கி நடக்கும் போது அர்ஜுன் தன்னை அறியாமல் பூஜவையே பார்த்து கொண்டிருந்தான். அவன் மட்டுமல்ல அந்த கல்லூரியே பூஜாவின் அழகில் சொக்கிப்போனது. இவ்வளவு அழகான பெண் நம்ம கிளாஸ் வரணும் என்று கடவுளை  வேண்டிக்கொண்டான் அர்ஜுன். 

அப்போது அர்ஜுனை வழிமறித்து அவனை பற்றி விசாரிதனார் சீனியர் மாணவர்கள்.

அர்ஜுனிடம் இப்ப ஒரு பெண் போனாலே அவள் பேரை கேட்டுகிட்டு வா... என்று அர்ஜுனுடைய பைக் சாவியை கைபற்றிக்கொண்டனார்.

ஒரு வகையில் சந்தோசம் மனதிற்குள் ஓடிகொண்டிருக்க ஓடிப்போய் பூஜாவை வழிமறித்தான்.

சாரி மேடம்! என் பெயர் அர்ஜுன் முதல் ஆண்டு  மாணவன்! சீனியர் ராகிங் பண்டாரங்க அவங்க என் பைக்சாவியை வாங்கிடாங்க! அவங்களுக்கு உங்க பெயர் கேட்டு சொல்லணுமாம். ப்ளீஸ் உங்க பெயர் சொல்லுங்க? என்று அர்ஜுன் பதட்டத்துடன் கேட்டான்.

பூஜா! என்று தன் பெயரை கூரினாள்.

நன்றி! என்று சொலிவிட்டு அர்ஜுன் சீனியரை நோக்கி நடந்தான்
அர்ஜுன் மனதில் பூஜா என்ற பெயர் பம்பரமாய் சுழன்றது. மனதிற்குள் இடைவிடாது சொல்லிக்கொண்டே போனான் அர்ஜுன்.


                                                                             ( காதல் தொடரும்...)





  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக