அனிதா கொலையானதை கண்டு மேலும் பயந்து போன நிருபமாவிட்கு ஒரு அலைபேசி அழைப்பு வருகிறது.பயந்தபடியே பேசுகிறாள் நிருபமா.
நிருபமா உன்னதான் கொலை செய்யலாம்னு வந்தேன் உன் நல்ல நேரம் நீ கார்த்திக் தம்பியோட வெளியில போய்ட, சரி
வந்தது வந்தாச்சு வெறும்கையோடு போக மனசில்ல அதான் அனிதாவ போட்டேன் என்று சாதரணமாக பதில் சொன்னான்.
டேய் ராஸ்கல்! யாருடா நீ எதுக்குடா இப்படி செய்யற? உனக்கு என்ன வேணும்?
எனக்கு உன் உயிர் தான் வேணும் அத குடுத்துடு நான் வேற யாரையும் கொலைசெய்ய மாட்டேன். பேசிகொண்டிருகும்போது இன்ஸ்பெக்டர் ரவீந்தரன்
நிருபமா கையில் உள்ள செல் போனை வாங்கி கோபமாக
டேய்! நீ ஆம்பளைய இருந்த நீ யாரு எதுக்கு இந்த கொலைகள செய்யறேங்கரத சொல்லு.
கோபப்படாத இன்செப்ச்டோர் நான் பேசறது யாரு மொபைல் நம்பர்னு கொஞ்சம் பாரு!
ஷிட்! என் மனைவிய ஒன்னும் செய்திடாத ப்ளீஸ்! ப்ளீஸ்!...
இப்ப காட்டவா நான் அம்பாளைய! இலையானு!
ப்ளீஸ்! ப்ளீஸ் உன்ன கெஞ்சி கேட்கறேன் அவள ஒன்னும் செய்திடாதே.
அப்படினா நான் சொல்றத நீ செய்யணும் இல்லை அனிதா செத்த மாதிரி உன் மனைவியும் சாவா
உடனே உன் வீட்டுக்கு போ! என்று மிரட்டியபடியே செல் போனை செயலிழக்க செய்தான்.
எல்லோரும் பதட்டத்துடன் இன்ஸ்பெக்டர் ரவீந்தரனை பார்த்தனர்.
அவன் என் மனைவியை கடத்திடான் அவன் சொன்னத நான் செய்யனுமம் இல்லாட்டி என் மனைவி சக்தியை கொலை செஞ்சிடுவானம் என்று மிரண்டபடியே வீட்டை நோக்கி சென்றார் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன்.
கார்த்திக் நடக்கறது ஒண்ணுமே புரியல, எதுக்கு இப்படி நடக்குது ஏன் அந்த கொலைகாரன் இப்படி செய்யறான்? என்று விம்மியபடியே கேட்டுகொண்டிருந்தாள் நிருபமா.
நிருபமா கொஞ்சம் பொறுமையா இருங்க என்று ஆறுதல் சொன்னார் கார்த்திக்.
இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் அவரது வீட்டை அடைந்தார்.
( பதட்டம் தொடரும்...)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக