புதன், அக்டோபர் 26, 2011

ஓர் இரவில்... ஓர் மரணம்... பாகம்- 14


கார்த்திக் சிறிது நேரத்தில் ரவீந்திரன் வீடிட்கு வந்து சேருகிறான். அவன் வருவதை சற்று ஆறுதலாக நினைக்கிறார் ரவீந்திரன்.
சார் என்ன ஆச்சு?

கார்த்திக் என் மனைவியை கடத்திடாங்க இத்தனை கொலைகளுக்கும் காராணம் அணுவின்யாணி ராபர்ட். இந்த துப்பாக்கிய வச்சு அவன் சொல்றவனை கொலை செய்யணுமாம் இல்லை என்றால் என் மனைவி சக்தியை கொலை செய்திடுவானம். 

சார் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கு! ஒரு போலீஸ் உங்களையே கொலைகாரனா ஆக்க  முயற்சியை
இதுவரைக்கும் நான் படத்தில் கூட பார்த்ததில்லை. சார் அந்த துப்பாக்கிய இப்படி கொடுங்க  என்று துப்பாக்கியை வாங்கினான் கார்த்திக்.

சிட்! சார்  இது அணு ஆயுதம்!

ஆமாம் கார்த்திக் அவனும் அதையேதான் சொன்னான். 

சார் அவன் உங்கள ஒரு கொலை செய்ய சொல்லலை ஒட்டுமொத்தமா அவன் உங்களை வைத்தே ஒரு ஊரையே அழிக்க பிளான் போற்றுகான். சார் உங்க கணிப்பொறியை திறங்க என்று கார்த்திக் சொன்னதும். அதில் அணு ஆயுதம் என்று ஆங்கிலத்தில்  அடித்ததும் அதை பற்றின முழு விபரமும் வந்தது.

  


சார் இதை பார்திங்களா ஒவ்வரு நாடும் தன்னுடைய பாதுகாப்பு என்ற பெயரில் அணு ஆயுதம் தயாரிச்சுகிட்டு இருக்காங்க. சார் ஒரு பத்திரிகையாளனாய் எனக்கு தெரிந்ததை நான் சொல்றேன்

லிபியா நாட்டை நாற்பது வருசங்களுக்கு மேல் ஆட்சி செய்த கடபியை பற்றி உங்களுக்கு சொல்றேன். கடபியை பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அணுசக்தி ஒபந்தம் என்ற கொள்கைப்படி அவர்கிட்ட இருந்த அணு ஆயுதங்களி பிரிட்டிஷ் 
அரசாங்கம் வாங்கிடாங்க. அவருக்கு உறுதுணையா இருப்பாங்க என்ற ஒரு காரணத்துக்காக அவர் பிரிட்டிஷ் அரசுக்கு சொன்னத செய்தாரு.ஆனா  புரட்சிப்படை  அவரை
சுற்றி வளைக்கும்போது அவர்கிட போதுமான ஆயுதம் இல்லாமல் அவர் நம்பிக்கிட்டு இருந்த உதவியும் கிடைக்காமல் கொலை செய்யப்பட்டார். கிட்டதட்ட எல்ல நாடுகளுமே அணு ஆயுதத்தை ஒரு போர் கருவியா பயன்படுத்த குவித்து கொண்டிருகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த 
அணு ஆயுதம் இல்லாத சில நாடுகள் கூட அணு ஆயுதம் இல்லாமல் இருப்பதை தனக்கு ஆபத்து என்ற கோட்பாடோடு அணு ஆயுதம் தயாரிக்க முனைந்திருகிறது. எல்லோருடைய இலகும் மூன்றாம் உலக யுத்தம்  வந்தால்  அதற்கு எப்படி சண்டையிடுவது என்ற ஒரு பயமே எல்லோரையும் அணு ஆயுதத்துக்கு மாற்றி இருக்கிறது.

ஜப்பான் அணுமின் நிலையம் புகோசிமா வெடிபிட்கு பின் உலகத்தில் அணு விபத்து பற்றின பவரலான பயம் தொற்றிக் கொண்டு   இருக்கிறது. பல நாடுகள் தங்களது அணுமின் நிலையங்களை மூடிவிட்டது. ஆனால் அதைப்பற்றி கவலைபடாத ஒரே நாடு நம் இந்தியாவகத்தான் இருக்கும். 

காரணம் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க அரசு மிக தீவிரமாக முயற்சிக்கிறது. அதற்கு ஆனா செலவுகளையும் அதில் கிடைக்கப்போகும் லாபத்தை மட்டுமே பார்க்கும் நம் பிரதமர். அதனால் வரும் அபாயத்தை பற்றியும் கவலை படாமல்.
இரண்டாயிரம் மெகவாட்  மின்சாரத்திட்காக மக்களின் வாழ்கையை பணயம் வைக்க 
ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதை மக்களின் விழிப்புணர்வின் மூலம் முறியடிக்கப்பட்டது.   

இந்த அணுவீச்சினால் ஹிரோஷிமா நாகசாகியில் இன்னும் மக்கள் அவதிப்பகிறார்கள். இந்த அணு சக்தியானது நன்மைக்காக பயன்படுத்துவதாக கூரிக்கொண்டு காய்களை நகர்த்துகிறார்கள்.
 அது தவறாக போகும் போது அது ஏற்படுத்தும் அபாயம் மிக கடுமையானதாக இருக்கிரது. இந்த அணு ஆயுதத்தை தீவிரவாதிகள் பயன்படுத்த முயற்சிகிறார்கள் அதில் ஒன்றுதான் இந்த துப்பாக்கி என்று கார்த்திக் அணு ஆயுதத்தை பற்றி சொல்லி முடித்தான்.

(செய்திகள் தொடரும்....)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக