புதன், அக்டோபர் 26, 2011

ஓர் இரவில்... ஓர் மரணம்... கடைசி பாகம்...

கார்திகிட்கு நிருபமா தொலை பேசியில் அழைத்தார்.

கார்த்திக் எங்கே இருகிங்க?

நான் ரவீந்திரன் சார் வீட்டில் இருக்கேன். சொல்லுங்க நிருபமா.

கார்த்திக் உடனே நியூஸ் சேனலை பாருங்க!

கார்த்திக் உடனே நியூஸ் சேனலை மாற்றியதும்  அதில் ராபர்ட் சுட்டு கொல்லப்பட்டதையும் சக்தியை போலீஸ் மீட்டு வருவதையும் காண்பிக்கப்பட்டது.


அந்த காட்சியை பார்த்துகொண்டிருந்த ரவீந்திரன் உடனே தனது உயர் அதிகாரி சுரேந்தர் சின்காவிற்கு போன் செய்தார்.

சார் இது எப்படி நடந்தது? என்று ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும்  கேட்டா ர் ரவீந்திரன்.

ரவீந்திரன் நீங்க உங்க மனைவியை கடத்தியதால உங்களுடைய மன அழுத்தம் என்னால் உணர முடிந்தது. அதனால நான் ஒரு ஸ்பெஷல் போலீஸ் குழுவை நியமித்தேன். கொலைகாரன் ராபர்ட் என்று தெரிந்ததும்
நாங்கள் மிகவும் உசாராக இந்த வேலையை செய்தோம். ஒரு வண்டி விடாமல் சோதனை  செய்தோம். ஒரு பெரிய கனவாகன ஊர்தியில் ராபர்ட்டுக்கு இரண்டு வருடம் பாண்டிச்சேரியில் அடைக்கலம் கொடுத்த செபாஸ்டியனை கைது செய்து அவனிடம் விசாரணை நடத்தியதில் அவனுடைய பிளானை தெரிந்து கொண்டோம். அது என்னவென்றால் உங்களை கொலை செய்ய சொல்லும் போது எல்ல போலீஸ் குழுவும்  உங்களையே கவனிக்கும் அப்போது ஒரு பெரிய வைர கடையில் வைரங்களை கொள்ளை அடிப்பதுதான் அவர்கள் திட்டம். அந்த கொள்ளைக்கு பிறகு அதில் வரும் பணத்தை வைத்து தங்கள் முகத்தையே
பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக்கொல்வதுதான் அவர்கள் திட்டம். இந்த மொத்த பிளானும் ராபர்ட் போட்ட திட்டம் அதோடு நிருபமா அவர்களது கைபையில் சிவா பதிவு செய்திருந்த  அவர்கள் திட்டம் பற்றிய வீடியோ காட்சிகள் மேலும் அவர்கள் திட்டத்தை உறுதி படுத்தியது. அந்த வீடியோ தேடலில்தான் இத்தனை கொலைகளை செய்தான் ராபர்ட். செபாஸ்டியனை ராபர்டிட்கு போன் செய்ய வைத்தோம். அவனிடம் திட்டங்கள் சரியாக நடப்பதாய் பேச வைத்தோம்.

பிறகு போலீஸ் குழு அவன் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து. போலீஸ் வருவதை பார்த்து போலிசை சுட்டான் அப்போது நடந்த சண்டையில் அவனை நாங்கள் சுட்டு கொன்றோம். அவன் இறந்ததை உறுதிபடுத்தியதும் சக்தியை மீட்டோம்.

சார் அப்ப என் கைல இருக்கிறது அணுஆயுதம் இல்லையா?

இல்லை ரவீந்திரன் அது அவனுடைய மாஸ்டர் பிளான். அது அணு ஆயிதம் அப்டின்னு சொன்னதும்  நம்மை திசை திருப்ப அவனது பிளான். நாங்களும் அவன் பேர் அழிவை நோக்கிதான் இவ்வளவும் செய்கிறானோ அப்டின்னு நினைத்தேன். ஆனால் சரியான நேரத்தில் நிருபமா அந்த வீடியோ தொகுப்பை கொடுத்தார். அதில் அவர்களது உண்மையான பிளான் மற்றும் யார்?யார்? இதில் ஈடுபட்டார்கள் என்று  தெளிவாக தெரிந்தது. அதை வைத்துதான் செபாஸ்டியனை எங்களால அடையாளம் காண முடிந்தது.

ரவீந்திரன் தொலைகாட்சியை பார்த்கும் போது போலீஸ் ராபர்டின் உடலை எடுத்து வந்தார்கள்.

ரவீந்திரன் உங்க மனைவி சக்திகிட்ட பேசுங்க என்று தனது செல் போனை சக்திகிட்ட கொடுத்தார் சுரேந்தர் சின்க.
எப்படி இருக்க சக்தி?

நான் நல்ல இருக்கேன்.

சக்தி உன்னை கடத்தியதில் இருந்து நான் செத்துட்டேன். இப்பதான் எனக்கு உயிரே வந்தது.

சக்தி தனது அதிர்ச்சியில் இருந்து மீளாமல் மௌனமாய் ரவீந்திரன் பேசுவதை கேட்டுகொண்டிருந்தாள்.

சக்தி " I Love YOU " உனக்கு ஏதாவது நடந்திருந்தால் கண்டிப்பாய் நானும் உயிரோட இருந்திருக்க மாட்டேன் என்று ரவீந்திரன் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

சக்தி கண்களில் நீர் வழிய " I Too Love YOU "   என்று போனை கட் செய்தாள்.

                                                                                              (முற்றும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக