சனி, அக்டோபர் 08, 2011

பெண் எப்போது அடிமையானாள்...


பெண் எப்போது அடிமையானாள் என்ற பல நூல்களை ஆராய்ந்தால்,
Dr . ஷாலினி எழுதிய "பெண்ணின் மறுபக்கம்" என்ற புத்தகத்தில் ஆதி காலத்தில் பெண்ணே முதன்மையாக கருதப்பட்டது உணர்தப்பட்டுள்ளது. ஒரு பெண் தான் விரும்பும்  ஆணை  தனக்கு துணையாக்கிக்  கொண்டனர் அக்காலத்தில் . அப்போது பெண்களே தெய்வம் என்ற ஒரு நிலைபாட்டினை வகுத்திருந்தனர். ஒரு கூட்டம் என்றல் அதற்கு தலைமை தாங்குவது ஒரு அரசி என்ற ஒரு பெண்ணாகத்தான் இருந்தது. காலமாற்றம் பெண்ணிற்கும் ஆணிற்கும் இடையே பல 
வித்யாசத்தை இயற்கை படைத்திருந்தது. பெண்ணின் உடல்வாகு மென்மையானதாகவும், ஒரு குழந்தையை பத்து மாதம் சுமக்கும் ஒரு சுமைதாங்கியாக,  பெண் பல சுமைகளை
சுமக்கும் உடல்வாகை கொண்டததாக படைக்கப்பட்டாள். அப்போது பசி என்பதே முக்கிய அம்சமாக இருந்தது. பசியை ஆற்ற ஆண்களும் பெண்களும் சேர்ந்து
வேட்டையாடினார்கள். இயற்கை அபோதுதான் ஆண்களுக்கு உடல் வலிமையை மிருகங்களை எதிர்த்து போராடும் சக்தியை
கொடுத்தது. பெண்களால் குறிபிட்ட அளவே வேட்டையாட முடிந்தது. ஆகையால் பெண்கள் வீட்டை கவனித்துகொள்ள ஆண்கள் வேட்டையாட சென்றனர்.
  காலம் பெண்ணை ஆணை எதிர்பார்த்து வாழ்கையை நடத்த வேண்டிய கட்டாயதிட்கு தள்ளப்பட்டது. மெல்ல மெல்ல ஆணின் கை ஓங்கியது முதலில் பெண்கள் ஆண்களை அடிமையாக நடத்தியதை மனதில் கொண்டு பெண்களை பழிவாங்கும் எண்ணத்தோடு அவர்களை கலவியலுக்கு அதிகமாக பயன்படுத்தினர் . பெண் ஆணை கலவியலுக்கு தேர்வு செய்யும் காலம் போய் ஆண் தன் உடல் வலிமையால் பெண்ணை அடிமையாக்கி, அபகரித்து செல்வது வழக்கமானது. ஒரு ஆண் பல பெண்களோடு கலவு கொள்வது வழக்கமாகிப்போக காலமாற்றம் பெண் ஒரு ஆணுடன் வாழ தீர்மானம் நிறைவேற்றபட்டது.

ஒரு பெண் ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்யும்படி தன்மை உடையவள். அனால் ஆணின் தன்மையானது ஒரு நேரத்தில் ஒரு  வேலையைதான் சரியாக செய்ய முடியும். அந்த ஆண் அந்த வேலையை மிக சரியாக செய்வதுதான் அவனது இயல்பு. பெண் அப்படியல்ல அவள் ஒரே  நேரத்தில்  பல வேலைகள் செய்ய முடியும். அதனால்தான்  ஆணுக்கு எந்த பெரிய விஷயமும் சீக்கிரம் மறந்து விடுகிறது. ஆனால் ஒரு பெண்ணிற்கு அப்படியல்ல ஒரு சின்ன விஷயம் கூட மறப்பதில்லை. அதனால்தான் ஆண் அவனது திருமண நாளை, மனைவியின் பிறந்தநாளை, குழந்தையின் ராசியை கூட  மறந்து விடுகின்றனர். ஆனால் பெண்கள் அதை ஆண் வேண்டுமென்றே மறந்துவிட்டதாக சண்டை போடுவார்கள்.

ஆதி காலத்தில் பெண்களை கடவுளாக நினைத்து வழிபடும்போது இத்தகைய ஒரு சிலை வடிவத்தை தான் நிர்மாணித்தனர். இதை எதிர்த்த ஆண் பெண் சிலைகளை உடைத்துவிட்டு ஆண்களே கடவும் அவர்களுக்கு அடிமைகள் பெண்கள் என்பதை ஒவ்வரு பெண்ணின் மனதிலும் விதைத்தனர். ஒரு ஆண் எது சொன்னாலும் அப்படியே செய்வது தான் பெண்ணின் கடமை அதுவே தர்மம்  என்ற ஒரு அடிமைத்தனத்தை ஆதி முதலே விதைத்து விட்டனர். ஆண்களை கவர்வதற்கே 
பெண்கள் தங்களை அழகுபடுத்தி கொண்டனர். இப்படியாக ஒரு சமுதாய கட்டமைப்பு உருவாக காரணமாக அமைந்து விட்டது.


  பண்டைய காலத்தில் ரோம் நகரில் பெண்களின் நிலைமை மிக  மோசமானதாகவே இருந்தது. இன்றும் பெண்களுக்கு இலைக்கப்படும் கொடுமைகள் நிகழ்த்து கொண்டே இருக்கிறது. பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாசாந்தியில் வன் கொடுமைக்கு ஆளான பதினெட்டு பெண்களும் இதட்கு உதாரணம்
ஆண்களின் அரக்க தன்மையை பெண்களின் மீது காட்டுவது என்பது ஒரு மிக பெரிய கொடுமை. ஒரு ஆண் பெண்ணை நிர்வாணபடுத்துவது அவளை கற்பழிப்பது என்ற மிருகத்தன்மை வாய்ந்த
ஆண்களின் மன நிலை கிட்டதட்ட எல்ல காலத்திலும் இருந்தது, இருகின்றது என்பது
ஒரு கசக்கும் உண்மை.

ஆதி காலத்தில் பெண்களுக்கு கல்வி மறுகப்பட்டது. பெண்கள் வீட்டில் மட்டுமே இருந்து கொண்டு அவளது திறமை, அறிவும் எதுவுமே பயன்படுத்த ஆண்கள் சம்மதிக்க வில்லை. காலம் மாறியது இப்போது பெண்கள் இல்லாத துறைகளே இல்லை. இப்போதுள்ள பெண்களுக்கு நிறைய கதவுகள் திறந்திருக்கிறது. அதை முழுமையாக பயன்படுத்தி கொண்ட பெண்கள் இன்று முன்னேறி இருகிறார்கள். ஆனால் வரும் காலங்கள் தான்  அந்த பெண்கள் தங்களுடைய சுதந்திரத்தை சரியாக பயன்படுதுகிரர்கள, இல்லையா என்பது தெரியும் காரணம் இப்போது உள்ளவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே தான் அடுத்த தலைமுறையும் பின்பற்றும். ஆகையால் அதை புரிந்துகொண்ட செயல்படுவது ஆண், பெண் இருவருக்குமே நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக