திங்கள், அக்டோபர் 31, 2011

போதிதர்மனாகிய என்னுடைய வரலாறு...


 திரைப்படங்கள் நமக்கு எத்தனை விசயங்களை கற்றுக்கொடுக்கிறது. காதல் முதல்கொண்டு கொலை செய்வது வரை நல்லவை, கெட்டவை  என்ற அனைத்தையும் நம்மால் மூன்று மணி நேரம் காண முடிகிறது. அந்த படங்கள் நமக்கு நிறைய கற்றுகொடுகிறது என்றால் அது மிகையாகது. போதிதருமன் என்ற அற்புதமான தமிழனை 
பற்றி 
7 ஆம் அறிவு படம் வராவிட்டால் போதிதருமனைப் பற்றி அறியாமலே போய் இருக்கும். இதோ போதிதர்மன்
பற்றிய வரலாறு.


போதிதருமனை பற்றி வெறும் வரலாறாக மட்டும் சொன்னால் சுவை இருக்காது. ஆகையால் போதிதருமனாக நான் உருமாறுகிறேன்.
இன்று 2011 ஆம் ஆண்டில் நாம் இருக்கிறோம் சற்று என்னோடு 495 ஆம் வருடத்திற்கு பயனியிங்கள்.

                 நான் தான் போதிதருமன். என்னுடைய வரலாற்றை நான் உங்களுக்கு சொல்லுகிறேன். நான்
495  ஆம் ஆண்டு சீனா சென்றேன் என்னை  போதிதர்மா என்று தமிழகத்திலும்   தா மோ என்று சீனாவிலும் அழைப்பார்கள். நான் 5 மற்றும் 6  ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். என்னுடைய தந்தை காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர். எனக்கு இரண்டு சகோதரர்கள். நான் என்றுமே அரசாட்சியை விரும்பியதில்லை. ஆனால் என்னை கொல்ல சதிதிட்டம் தீட்டப்பட்டது. ஆனால் நான் சாகவில்லை. நான் என் குருநாதரிடம் பிரஜினாதரவிடம் சென்றேன். அவர் பல பயிற்சிகள் எனக்கு பல வருடம் அளித்தார். நான் ஒரு நாள் அவரிடம் கேட்டேன்  குருவே என்னுடைய வருங்கால கடமை என்ன?. உங்களுடைய மரணத்திற்கு பின்னால் நான் என்ன செய்ய வேண்டும்?. அவர் சொன்னார் போதிதர்மா நீ உலகபுகழ் அடையும் காலம் வந்துவிட்டது. ஆனால் புகழ் என்பது மாயை. அது நம்மை ஒன்றுமில்லாமல் செய்துவிடும். ஆகையால் நீ சீனா செல்வாய். அங்கு உனக்கான கடமை காத்திருகிறது என்றார்.



நான் சீனா செல்ல தயாராகும் நேரத்தில் எனது சகோதரர் இறந்துபோனார். அடுத்ததாக என் சகோதரர் மகன் மன்னர் ஆனார். அவர் என்னை வணக்கி அவர்  தந்தை செய்த பாவத்திற்கு வருந்தினார். அத்தோடு என்னை தலைநகருக்கு வரும்படி என்னை அழைத்தார். ஆனால் நான் சீனா செல்வதை எனது கடமையாகக்   கொண்டிருந்தேன். எனது நோக்கத்தை புரிந்து கொண்டு நான் சீனா செல்லும்போது மன்னர் புறா முலமாக அந்த நாடிட்கு நான் வருவதையும் என்னை வரவேற்று உபசரிக்க வேண்டும் என்பதையும் வேண்டி கேட்டுகொண்டிருந்தார். நான் அங்கு சென்றதும் மக்கள் என்னை அன்போடு வரவேற்றார்கள். நான் எதுவும் கூராமல் தியானத்தில் அமர்ந்துவிட்டேன்.

மக்களுக்கு நான் என்ன சொல்லபோகிறேன் என்று அமைதியாக காத்திருந்தார்கள். நான் அவர்களுக்கு எதுவுமே சொல்லாமல் சென்றுவிட்டேன். மக்கள் சிலர் என்மீது கோபப்பட்டார்கள், சிலர் அழுதார்கள், சிலர் சிரித்தார்கள். நான் அதைப்பற்றி எதையும் அப்போது சிந்திக்கவில்லை. மக்கள் என்னை புத்ததுறவி என்றார்கள். என்னை பலவாறு புகழ்ந்தார்கள். நான் எதையும் பொருட்படுத்தவில்லை. என்னுடைய பெருமைகளை அறிந்த தெற்கு சீனாவை ஆண்ட மன்னர் வு என்னை அழைத்து என்னோடு உரையாடினார். மன்னர் வு தன்னுடைய அருமை பெருமைகளை நான் புகழவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக அவர் பல புத்த கோவில்களையும், சிலைகளையும் நிர்மானிததாகவும் அதே போல் கோவில் மற்றும் சிலைகள் உலகில் எங்கேனும் உள்ளதா என்று என்னை கேட்டார் நான் இல்லை என்று பதில் சொன்னேன். அப்படியானால் நான் சிறந்த மன்னன்தானே என்று என்னை கேட்டார். அதற்கு நான் இல்லை என்று பதில் சொன்னேன். என்னுடைய பதிலை சற்றும் எதிர்பார்க்காத வு. ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நான் அவரிடம் ஒரு மன்னரின் கடமை மக்களை பாதுகாப்பது, புகழ் சேர்பதல்ல என்று கூறினேன். அதற்கு மன்னர் வு என்னை இந்த இடத்தைவிட்டு போகும்படி கோபப்பட்டார்.



நான் அவ்விடத்தை விட்டு என்னுடைய பயணத்தை தொடர்ந்தேன். நான் அடுத்த நகரமாகிய நான்ஜிங் என்ற இடத்தை அடைந்தேன் அங்கு பிரபலமான இடமாகிய பிலோவேர் ரெயின் பவில்லோன் என்ற இடத்தை அடித்தேன் அங்கு மக்கள் ஷேன் கோங் என்ற ஒரு புத்த துறவி மக்களுக்கு போதனை செய்துகொண்டிருந்தார். நான் அமைதியாக அங்கே நின்று கேட்டுகொண்டிருந்தேன். அவருடைய கருத்துக்கள் சில உண்மையும் சில உண்மையற்றதுமாக என் மனதில் பட்டது. நான் உண்மையான கருத்துகளை ஏற்றேன். உண்மையற்றதை நிராகரித்து கூரினேன். என் மீது கோபம் கொண்ட ஷேன் கோங் என்னை தாக்கினார். நான் திருப்பித்தாக்காமல் என் வழியில் நான் சென்றேன்.


என்னுடைய பொறுமையை பார்த்து என்னிடம் கற்றுக்கொள்ள ஷேன் கோங் என்னை பின்தொடர்ந்தார். நான் ஷவோலின் கோவில் அருகில் சென்றேன். என்னுடைய வருகையை அறிந்து அந்த கோவிலின் புத்ததுறவி என்னை அந்த கோவிலில் தங்கும்படி என்னை அழைத்தார். ஆனால் நான் அவரது அழைப்பை ஏற்காமல் ஒரு குகையில் சென்று தியானம் செய்தேன். என்னை பின் தொடர்ந்து வந்த ஷேன் கோங். அவருக்கு பாடம் கற்றுத்தரும்படி கேட்டார். நான் பதில் ஏதும் கூராமல் அமைதியாக தியானம் செய்தேன். அவர் என்னை ஷவோலின் கோவிலுக்கு வரும்படி என்னை அழைத்தார் நான் மெளனமாக என் தியானத்தை தொடர்ந்தேன். ஒம்பது வருடம் எனக்காக அவர் காத்திருந்தார். காலம் கடந்தது பதிமூன்று வருடங்களுக்கு பிறகு ஒரு பனிகாலத்தில் ஷேன் கோங் கோபமடைந்து என்மேல் பனிகட்டியை வீசி எறிந்தார் நான் தியானத்தில் இருந்து விழித்துக்கொண்டேன். அவர் மீண்டும் என்னை கற்றுக்கொடுக்கும்படி வற்புறுத்தினார். நான் சொன்னேன் இந்த பனித்துளி எப்போது சிவப்பாகிறதோ அப்போதுதான் நான் உனக்கு கற்றுக்கொடுப்பேன் என்று. உடனே ஷேன் கோங்  தனது ஆயுதத்தால் கையை அறுத்து அதில் வரும் ரத்தத்தை பனியில் கலந்தார். நான் உடனே அவரை ஷவோலின் கோவிலுக்கு அழைத்து சென்றேன்.

 அங்கு உயரமான அந்த கோவில் சுவற்றில் ஒரு துவாரத்தை செய்தேன் அதில் வந்த தண்ணிரை பருகும்படி பணித்தேன். ஷேன் கோங்  அதை குடித்தார் அந்த தண்ணிர் கசந்தது. அந்த தண்ணிரை ஒரு வருடம் பயன்படுத்தினார் ஷேன் கோங்  மீண்டும் என்னிடம் வந்தார் கற்றுகொடுக்கும் படி கேட்டார். நான் மீண்டும் ஷவோலின் கோவிலில் ஒரு துவாரத்தை இட்டேன் அந்த தண்ணிர் புளித்தது. அதை ஒரு வருடம் பயன்படுத்தினார் ஷேன் கோங் . மீண்டும் என்னிடம் வந்தார் நான் மீண்டும் ஒரு துவாரத்தை அமைத்தேன். அந்த தண்ணிர் உப்பு கலந்திருந்தது. அதை ஒரு வருடம் பயன் படுத்திய பிறகு நான் கடைசியாக ஒரு துவாரம் அமைத்தேன் அதில் வந்த தண்ணிர் இனித்தது. அதை ருசித பிறகு ஷேன் கோங்  புரிந்துகொண்டார் வாழ்க்கை என்பது எல்லாம் கலந்த கலவை என்பதை உணர்ந்துகொண்டார். பிறகு நான் அவருக்கு பல பாடங்கள் கற்றுக்கொடுத்தேன். எனக்கு பிறகு ஷேன் கோங்  ஷவோலின் கோவிலை நிர்மாணித்தார். இதுவே  என்னுடைய வரலாறு.

2 கருத்துகள்: