சிலர் அன்றாடம் கண்விழிப்பது பத்திரிக்கையில்தான். நமக்கு சில நேரம் நல்ல செய்திகளும் பலநேரம் கெட்ட செய்திகளும் தெரிந்துகொள்ள பத்திரிக்கை தான் உதவுகின்றன.ஒரு எட்டு பக்க பத்திரிக்கை நமக்கு உலகத்தில் நடந்த, நடக்கிற விசையங்களை பார்த்து தெரிந்துகொள்ள பெரிதும் உதவுகிறது
ஆனால் இப்போது பத்திரிகையின் போக்கு பலவாறு மாறிவிட்டது என்பதே உண்மை. அதற்கு நல்ல உதாரணம்
இங்கிலாந்த் நாட்டில் நடத்திவந்த "நியூஸ் ஒப் தி வேர்ல்ட்" பத்திரிகை நல்ல உதாரணம். ஒரு ஆட்சி கவில்வதட்கும் புதிய ஆட்சி உருவாவதற்கும் இந்த பத்திரிகைக்கு பெரிய பங்கு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை
ஆனால் அதற்காக அந்த ஊடகங்கள் செய்யும் தவறுகளால் பாதிக்கபடுவது தனிமனித சுதந்திரமே.
அப்படிப்பட்ட தவறை செய்தமைக்காக 160 வருட பழமையான பத்திரிகையான "நியூஸ் ஒப் தி வேர்ல்ட்" அதன் உரிமையாளர் முர்டோச் பத்திரிகையை மூடிவிட்டார்.
அவர் செய்த தவறு என்னவென்றால் பலரது தொலைபேசியை ஒட்டுகேட்டு அதை பரபரப்பு செய்தியாகி அதை வாசகர்களுக்கு சுவாரசியமாக்கித் தந்தார். மக்கள் அபிமானத்தை பெற மற்றும் பத்திரிகை அதிகம் விற்க பலரது தனிமனித சுதந்திரத்தை பறித்துள்ளார். இதுதான் அவர் செய்த மாபெரும் குற்றம். இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இதுவா பத்திரிகை
தர்மம்? வெறும் பரபரப்பை ஏற்படுத்தி மக்களுக்கு ஒரு போலியான கிளர்ச்சியை ஏற்படுத்தி
அதை வியாபாரமாக்கி அதில் வாழ்க்கை நடத்துவது ஒரு கேவலமான ஒன்றல்லவா! இது அங்குமட்டுமல்ல
நம்ம ஊரிலும் நிகழக்கூடிய,நிகழ்த்துகொண்டிருக்கிற ஒரு இழிவான செயல்.
இந்திய சுதந்திரம் பெறாத காலத்தில் பாரதியார் மற்றும் பல தேசபக்தர்கள் சுதேசமித்திரன் போன்ற
பல பத்திரிகைகள் ஆரம்பித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். ஆனால் இப்போது கவர்ச்சியும், தப்பான கிளர்ச்சியும் தந்து மக்களை மந்தகாச நிலைக்கு கொண்டு செல்லும்படியாக இருக்கிறது
சில பத்திரிகைகள். இப்படிப்பட்ட பத்திரிகைகள் ஒருநாள் முகத்திரை கிழிக்கப்பட்டுவிடும் என்பது "நியூஸ் ஒப் தி வேர்ல்ட்" பத்திரிகை ஒரு நல்ல பாடம் என்பது இப்போதுள்ள பத்திரிகை நண்பர்களுக்கு புரிந்தால் நல்லது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக