ஞாயிறு, ஜூலை 31, 2011

பூமியை காப்பாற்றுவது நம் கடமை...

  
                               இந்த பூமி ஆரம்பத்தில் சிரிக்கும் குழந்தையை போல் தான் இருந்தது. எப்போது மனிதன் 
நாகரிகம் அடைந்தானோ அப்போது பூமியின் தன்மை மாறி  விட்டது. அவனது முதல் தேவை பசி அடுத்ததாக ஏற்பட் காம உணர்ச்சி அதற்கு பிறகு அவனது தேவைகள் ஒவ்வொன்றாக வளர்த்தது. அந்த வளர்ச்சிக்கான 
தேடல் ஆரம்பமானது. அவன் தேடிய ஒவ்வொன்றும் அவனுக்கு கிடைக்க, இயற்கை தன் இயல்பை மாற்றிகொண்டது. அப்படி இயற்கை நமக்கு இட்ட பிச்சைதான் இந்த சொகுசு வாழ்க்கை, வானத்தில் பறக்கிற விமானம் எல்லாம். அப்படி இருக்கும்போது மனிதனுக்கு எப்படி புதிய சிந்தனை பிறந்ததோ அதே போல் ஆணவம், அகங்காரம், திமிர், ஒன்றை அழிக்கும் குணம் என்ற வேண்டாத குப்பைகள் அவன் மனதிற்குள் புகுந்தது. அப்படி உருவான தீய எண்ணங்களே இப்போது உலகம் வெப்பமையமாக காரணமாக அமைந்து விட்டது.


இப்போது உள்ள  பனிக்கட்டி மலை உருகிக்கொண்டே வருகிறது. பனிக்கட்டி மலை முழுவதும்  உருகினால் நாம் பெறப்போவது படத்தில் காண்கிறபடி  மிக பெரிய அழிவு என்பது தான் பதில். நாம் இப்போதிருந்து இதை தடுக்க முடியாமல் விட்டால் அழிவு வருவது நிச்சயம்.
உலகம் வெப்பமையத்தால் எரிந்துகொண்டிருகிறது. பூமியை காப்பாற்றுவது நம் கடமை. ஆகையால் முடிந்தவரை நாம் உபயோகிக்கும் வாகனங்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மரங்களை வெட்டுவதை நிறுத்த வேண்டும். தண்ணிரை சேமிக்கவேண்டும். மரங்கள் வளர்க வேண்டும். நச்சு புகைகள் அதிகம் வெளிவராதபடி வாகனங்கள் பராமரிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் பூமி வெப்பமடைவதை ஓரளவுக்கு தடுக்க முடியும். இதுவரை பூமி நம்மை காத்தது அதற்கு நன்றிக்கடனாக நாம் அதை காப்பாற்ற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக