சனி, ஜூலை 23, 2011

"சர்வர் சுந்தரம்"- வியக்கவைக்கும் படம்


திரு.பாலசந்தர் அவர்கள் இயகத்தில் நாகாஷ் அவர்களின் அற்புதமான நடிப்பும் "சர்வர் சுந்தரம்" படத்தை   பலமுறை பார்க்க தூண்டியது. நாகேஷ் அவர்களுக்கு இந்த படதிட்காகவே தாதா சாகிப் பால்கே விருது 
கொடுக்கலாம். நாகேஷ் அவர்கள் ஒரு சகாப்தம் அவரை தமிழ் சினிமாவால் என்றுமே மறக்க முடியாது. பொதுவாக 
சினிமா துறை ஒன்றும் சாதரணமாக எல்லாரும் வெற்றிபெற்றுவிடும் துறையல்ல. பலர் இந்த 
துறைமேல் உள்ள கவர்ச்சியால் வாழ்கையை துளைத்துவிடுகிறார்கள். என்னதான் பல திறமைகள் 
இருந்தாலும் ஒரு வாய்ப்பு சரியாக அமைய வேண்டும். அப்படி அமையவில்லை  என்றால் அந்த துறையே அவர்களுக்கு ஒரு சாபமாகிவிடும். இதை இந்த படத்தில் சரியாக நடித்து புரியவைத்திருக்கிறார் நாகேஷ் அவர்கள்.

    இந்த படத்தில் நாகேஷ் தவிர யாராலும் இந்த படத்தை இவ்வளவு அழகாக படைத்திருக்க முடியாது. வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்த்துகொண்டிருந்த நாகேஷ் அவர்களை சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல், நீர் குமிழி போன்ற படங்கள் ஒரு நல்ல குணசித்திர நடிகராக மட்டுமல்லாமல் ஒரு படதின் நாயகனாக பிரதிபலிக்க செய்தது.


நாகேஷ் அவர்களுக்கு பக்கபலமாக ஒரு நல்ல நண்பன் எப்படி இருக்கவேண்டும் என்பதை முத்துராமன் அவர்கள் மிக சிறப்பாக செய்திருப்பர். நண்பன் தன்னுடைய நிலையை வருத்ததோடு  கூரும்போது மட்டுமல்லாது அவனது வாழ்க்கை தலைகீழாக மாற்றவும் ஒரு நண்பன் நினைத்தாள் முடியும் என்பதை எவ்வளவு இயல்பாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது இந்த படத்தில்.

                                    
இந்த படத்தில் ஒரு நல்ல விசையம் என்னவென்றால் எல்ல கதாபதிரமும் நல்லபடியாக சித்தரிக்கப்பட்டது தான் ஒரு வில்லன் இல்லாத திரைப்படம் என்பதை சொல்லிக்கொள்ள பெருமைப்பட வைக்கிறது இந்த படம். காதல் ஒரு மனிதனை எவ்வளவு தூரம் ஒருவனை உயர்த்தும். அதே காதல் தோல்வி அடைந்தால் அந்த மனிதனின் மனதை எவ்வளவு பக்குவபடுத்தும் என்பது நாகேஷ் நடிப்பில் நம்மால் உணரமுடிகிறது.


            இந்த படம் எல்லார் மனதிலும் துளைத்து அப்படியே மனதோடு ஒட்டிகொண்டது தாய் பாசமே. தன் தாயை மிஞ்சும் பாசத்தை நாகேஷ் அவர்களும் மகனை மிஞ்சும் பாசமாக படத்தில் போட்டிபோட்டு நடிதிருபார்கள். தாயின் இறபிட்கு பிறகு ஆடம்பரமான வாழ்க்கை போலிவாழ்க்கை என்றும், சர்வர் வேளையில் இருந்த நிம்மதி நடிகனாக இருக்கும்போது இல்லை என்று  அவரவர் தொழிலை நேசிக்கவேண்டும் என்பதை புரியவைகிறது இந்த படம். வாழ்க்கை, நிம்மதி எல்லாம் ஆடம்பரத்திலும், காசு சேர்ப்பதில் மட்டும் இல்லை ஆத்மார்த்தமாக, அர்த்தமுள்ளதாக, அடுத்தவர்களுக்கு உதவுவதாக இருப்பதே வாழ்க்கை என்பதுதான் இதன் கருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக