செவ்வாய், ஜூலை 26, 2011

புல்லட் ரயில் விபத்தில் சீனா அரசு செய்த தவறு...



சீனாவில் புல்லட் ரயில் விபத்து நடந்து 34 பேர் உயிரிழந்த சம்பவம் நமக்கு ஒரு பாடம் 
சீனா அரசு  உலக நாடுகளுடன் போட்டி போடுக்கொண்டு வளர்கிறது அந்த வளர்ச்சின் வேகம் 
கிட்டதட்ட புல்லட் ரயிலின் வேகம் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு வல்லரசு நாடாக என்னதான் சீனா வளர முயற்சித்தாலும் அதனிடம் இருப்பது ஒரு போலித்தனமான அணுகுமுறைதான். ஒரு வளர்ச்சியடைந்த நாடக சீனா தன்னை வெளிபடுதிக்கொள்ள நவீன மயமான தொழில்நுட்பத்தை 
கையாள்கிறது. ஆனால் சீனா ஒன்று புரிந்துகொள்ளவில்லை உலகநாடுகளை எப்போதும் தன்வசம் ஈர்கவைக்க நினைத்த 
ஜப்பான் ஒரு மிக பெரிய பூகம்பத்தாலும், சுனாமியாலும் ஒரு அணுமின் நிலையமே வெடித்து சிதறியது அதை 
பார்த்து உலகமே பயந்து நடுங்கியது. அந்த ஒரு பெரிய படிப்பினை ஜப்பானை நிச்சியம் வேறு நல்ல சிந்தனையை தூண்டி இருக்கும். அப்படிப்பட்ட படிப்பினை மற்ற 
நாடுகளிடம் இல்லை என்பதே உண்மை. எப்போதும் ஒரு அனுபவம் நமக்கு ஏற்படுமோ அதுவரை நாம் செய்யும் தவறுகள்   தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறோம் அதற்கான ஒரு உதாரணமே புல்லட் ரயில் விபத்து.

சீனா செய்த தவறு என்னதான் தொழில்நுட்பம் வளர்த்த நாடக இருந்தாலும் விதியை வெல்ல 
முடியாது என்பதற்கான ஒரு உதாரணமாக இரண்டு புல்லட் ரயில்கள் நேருக்கு நேர் 
மோதிகொண்டது. சீனாவில் உள்ள   புல்லட் ரயில் வேகம் 200 km/h என்பதாகும் அந்த ரயில் கிட்டதட 9,676 km (6,012 mi) பயணிக்க கூடியது அப்படிப்பட்ட ஒரு அதிநவீன ரயிலை பயன்படுத்தும் சீனா பாதுகாப்பு நிலையில் மட்டும் கோட்டைவிட்டது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. ஒரு அதிவேக ரயில் இடையில் நின்றால் அந்த தகவல் உடனே மேலிடதிற்கு தகவல் சொல்லுவதட்குள் அடுத்த ரயில் வந்து மோதுகிறது என்றால் எப்படி அத்தனை வேக ரயிலை உடனே நிறுத்த முடியும். ஆகா சீனா வேகத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் விபத்தை தடுக்கவோ அல்லது ஆபத்தில் இருக்கும் பிரயாணிகளை காபற்றவோ எந்த முன்எச்சரிகை நடவடிகையும் எடுக்கவில்லை என்பது உறுதியாகிறது.

இந்த விபத்தின் அடையாளம் என்னவெனில் சீனா தன்னுடைய வளர்ச்சியை அடுத்த நாட்டினர்கு காட்டும் வெறியில் புல்லட் ரயிலை நிருவியதே தவிர மக்கள் மீது உள்ள அபிமானத்தால் அல்ல என்பது தெளிவாகிறது. மின்சார ஒயர் அறுந்து புல்லட் ரயில் நின்றுவிட்ட உடனே மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை, மற்றும்  ஒரே பாதையில் இரு புல்லட் வண்டிகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும்படியான காரணத்தினால் சீனா பாதுகாப்பு விசையத்தில் கூடுதல் 
அக்கறை கொள்ளவேண்டும் என்பது தெளிவாகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக