இரண்டு பெண்கள் இந்த மாதம் ஜூலை2011 இல் இந்தியவுகுள் பயணம் செய்திருக்கிறார்கள் அவற்றில்
ஒருவர் பாகிஸ்தானியர் மற்றொருவர் அமெரிக்கர். முதலில் அந்த பாகிஸ்தானியரை பற்றி பார்போம்.
பாகிஸ்தானில் முல்தான் என்னும் இடத்தில் 19 - november - 1977 இல் பிறந்தவர். இவரது வயது 34 , இவர்தான் இப்போது பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் பெயர் ஹென்ன ரப்பின்
க்ஹர். இவர் மிகபெரிய பணக்கார குடும்பத்தை சேர்த்தவர். இவரது தந்தை குலாம் முஸ்தபா க்ஹர். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன பெயர் annaya மற்றும் dina என்பதாகும்.
இவரது இந்தியா வருகை பாகிஸ்தான், இந்திய பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு அமைய வாய்பிருகலம் என்று தோன்றுகிறது. அதற்கு காரணம் அவர் ஒரு அழகான பெண் என்பதாக கூட இருக்கலாம்.
இவரது ஒவ்வரு செயலும் செய்தியாக வந்தது, ஒரு பாரட்டப்படவேண்டிய செய்தி என்னவென்றால் ஒரு பெண்ணை வெளிஉறவு துறை அமைச்சராக்கி அந்த பெண்ணை இந்த காலகட்டத்தில் பேச்சுவார்தைக்கு அனுப்பியது தைரியமான ஒரு செயல். பொதுவாக முசல்மான் வீட்டு பெண்கள் பர்தா என்னும் முழு உடல் மறைக்கும் உடையை உடுத்திக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் இருந்த நிலை மாறி அவரது இயல்பிலான
உடையனிது வந்தது எல்லோரையும் கவர்ந்தது. அந்த தைரியமும், துணிச்சலும் உடைய அழகும் நிறைந்த ஹென்ன ரப்பின் க்ஹர் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
முஸ்லிம் நாடான பாகிஸ்தானே பெண்களுக்கு முன்னுரிமை தருகிறது என்றால் இந்தியாவும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 33 சதவிகிதமாக உயர்த்துவது தப்பே இல்லை. அப்படி செய்தால் பாகிஸ்தானுக்கு ஹென்னா ரப்பின் போல இந்தியாவுக்கும் திறமையான அமைச்சர்கள் கிடைப்பார்கள்.
அடுத்ததாக நமது இந்தியாவுக்குள் பிரவேசித்த ஹில்லரி கிளிண்டன் அவர்கள். இவரைப்பற்றிய ஒரு சிறு குறிப்பு இவர் 67 ஆவது அமெரிக்க secretory of state . இவர் 26 - october - 1947 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். இவரது கணவர் முன்னால் ஜனாதிபதி திரு கிளிண்டன் ஆவர். இவர் 1973 ஆம் ஆண்டு yela சட்ட கல்லூரியில் சட்டம் படித்தவர். இவர்தான் அமெரிகாவின் முதல் பெண் secretory of state ஆகும்.
இவரது சிரித்த முகமும். எதையும் சமாளிக்கும் திறமையும் உள்ள ஒரு வெற்றி பெண்மணி என்றால் அது மிகையாகது. காரணம் இவரது கணவர் முன்னால் அமெரிக்க ஜனாதிபதி, இவர் இப்போது secretory of state , இருந்தும் இவர் பார்க்க எளிமையாகவும், அடுத்தவர்களோடு நட்பாக பழகும் விதமும் அனைவரையும் கவரும் விதமாக உள்ளதுதான்.
இவர் ஒபாமாவை எதிர்த்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயற்சித்தாலும் இறுதியில் ஒபாமவுடைய மக்கள் செல்வாக்கை பார்த்து இவர் ஒதுங்கி நின்று இப்போது ஒபாமவோடே பனிபுரிவது பாரட்டப்படவேண்டிய செயல். ஒரு பெண் அழகாக இருந்தால் மட்டும் போதாது நாடளவும் திறமை இருக்கவேண்டும் என்பதற்கு
ஜெயலலிதா,மம்தா அவர்களை போல் இவர்களும் வரவேட்கபடவேண்டியவர்கள்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக