திங்கள், ஜூலை 25, 2011

முன்றாம் உலகயுத்தம் நடக்கபோவது தண்ணீருக்காக...



              இந்த உலகம் துவங்கியதில் இருந்து பல யுத்தங்கள் போர் என்று பார்த்துவிட்டாலும்.
இரண்டு உலக யுத்தங்கள் எல்லோர் மனதிலும் திகிலையும், ரணத்தையும் ஏற்படுத்தியது மறுக்கமுடியாத  உண்மை. இரண்டு உலக யுத்தங்கள் கற்றுகொடுத்த பாடம் அதிகம்.ஆனால் நாம் கற்றுக்கொண்ட பாடம் மிக குறைவும். இன்னொரு ஹிட்லரோ, இன்னொரு முசொலினியோ அவதரித்துவிட்டர்கலா? இல்லையா? என்பது தெரியவில்லை ஆனால் இன்னொரு உலகயுத்தம் நடக்க 
பல நாடுகள் அடித்தளம் அமைத்து கொண்டிருகிறது என்பதே கசக்கும் உண்மை. 

இப்போதுள்ள தொழில்நுட்பம்  அதையே பறைசாற்றுகிறது. இருந்த இடத்தில் ஒரு பட்டன் அழுத்தினால் 
ஒரு நாடே அழிவதை படம் பார்ப்பதை போல் பார்த்து ரசிக்கும் அளவுக்குத்தான் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதே.
முன்பு நேருக்கு நேர் சண்டையிடும்போது சாவின் வலியும், உயிரின் முக்கியதுவம் புரியும். அதனால்தான் பலரது மரணத்திற்கு பிறகு 
புத்தி வந்து உலக யுத்தம் நின்றது. ஆனால் இப்போது எல்லாம் நவினமயமாகிவிட்டது. யார் யாரை கொன்றார்கள் என்றே தெரியாமல் போகும் அளவிற்கு
ஒரு ஏவுகணை பிரயோகித்தல் ஒரு பகுதில் இருந்து இன்னொரு பகுதியே இல்லாமல் அழிக்கமுடியும். இப்போது உலகயுத்தம் தொடங்கினாலும் ஒவ்வரு நாடுகளும் கண்டுபிடித்த அதிநவீன ஆயுதங்கள் கொண்டு உலகை ஒரு வாரத்திற்குள் 
 அழித்துவிடலாம்.

    இப்போது மனிதாபிமானம் செத்துகொண்டிருப்பதால் யாருடைய சாவும் யாரையும்  பாதிக்கபோவதில்லை, அவரவருக்கு சாவு வரும்போதுதான்  பெரியவிசையமாக கருதப்படும். இப்போது ஏற்றத்தாழ்வு இல்லாமல் கிட்டதட்ட எல்லாநாடுகளும் ஆயுதங்களை ஏந்தி நிற்பதால் முன்றாம் உலகயுத்தமே  கடைசி யுத்தமாக இருக்கும் காரணம் அடுத்த உலக யுத்தம் வர வாய்பிலதபடி யாரும் உயிரோடிருக்க போவதில்லை.

அடுத்த உலகயுத்தம் 50 வருடங்களுக்குள் நடக்கலாம் என்ற கணிப்பு நிகழ்கிறது. அடுத்த உலக யுத்தம் நடக்க காரணமாய் அமையபோவது தண்ணீருக்காக.கிட்டதட்ட எல்லா நாடுகளும் 
பணபலம் மற்றும் ஆயுதபலம் அதிகபடுத்திக் கொண்டாலும் இயற்கையாய் கிடைக்கும் 
தண்ணீரையோ, காற்றையோ போலியாக உருவாக்க எந்த கொம்பனாலும் முடியாது. ஆகையால் 
எங்கு தண்ணிர் வளம் உள்ளதோ அந்த நாட்டை கைப்பற்ற எல்லா நாடுகளும் முயற்சிக்கும். பிறகு 
அந்த நாட்டை ஆதரித்து சில நாடுகளும் அதை எதிர்த்து சில நாடுகளும் சண்டையில் குதிக்க ஒவ்வரு நாடாக ஒன்னு சேர உலக யுத்தம் ஆரம்பமாகும். இதட்கு நல்ல உதாரணம் 
சீனா பிரம்மபுத்ரா நதி இந்தியாவுக்குள் நுழையவிடாமல் அணைகட்டி வருகிறது. 

இந்த உலகயுத்தம் நம்மால் தடுக்க முடியும் அதற்கு நாம் மனிதாபிமானத்தை வளர்த்துகொள்ளவேண்டும். அத்தோடு வீண் பொறாமைகளை விட்டொழித்து எல்லோரையும் நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தண்ணிரை சேமிக்கவேண்டும். விட்டுகொடுத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை போல் பிறரையும் பார்க்க வேண்டும். இப்படி நம்மை நாமே மாற்றிக்கொண்டால்தான்  உலகம் மனிதர்கள் வாழ உகந்ததாய் இருக்கும். இல்லை என்றால் உலக யுத்தத்தை தடுக்க யாராலும் முடியாது என்பதே உண்மையிலும் உண்மை.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக