ஞாயிறு, ஜூலை 24, 2011

உக்கிரமடையும் நில மோசடி...


கடந்த ஆட்சியில் நில மோசடி என்பது சர்வ சாதரணமாக நிகழ்தது என்பது இப்போது பலர் கொடுக்கும் புகாரில் இருந்து தெரிகிறது. அதில் பல மந்திரிகள் உள்ளனர் என்பது சற்று வருத்த படவைகிறது. காரணம் மக்களிடம் ஓட்டு பிச்சை வாங்கி சிம்மாசனத்தில் அமர்ந்த பிறகு ஓட்டு போட்ட அந்த மக்களிடம் இருந்த நிலத்தை பிடுங்கி தன்னுடையதாக்கிக்கொள்ளும் கேடுகெட்ட வர்க்கங்களை வேறு என்ன சொல்லி திட்டுவது. இவர்கள் செய்த உருட்டல், மிரட்டல் எல்லாம் ஒரு சில கால அளவுதான் என்பது புரியாமல் பல கேவலங்கள் செய்தவர்கள் காலம் ஒருபோதும் சும்மா விட்டுவிடாது. 


பலர் பாடுபட்டு வாங்கிய நிலத்தை தனது அதிகாரத்தாலும், பணபலத்தாலும் மிரட்டி பிடுங்கி கொண்டது என்பது ஒரு நல்ல மனிதன் செய்ய கூடிய செயல் அல்ல. இனி இந்த நில மோசடி நிகழாமல் தடுப்பது எதிர்காலத்தில் நடக்கபோகும் கொலை மற்றும் தற்கொலையை தடுக்க உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது கொடுகபட்டிருக்கும் நில மோசடி வழக்கு உண்மையாயின் அதை அபகரிதவர்களிடம் இருந்து பெற்று உரியவர்களுக்கு வழங்குவதோடு அந்த நில பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கு மிக கடுமையான தண்டனையை வழங்கவேண்டும் என்பதே இப்போதைக்கு அரசு செய்யவேண்டிய முக்கியமான வேளையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக