வியாழன், ஆகஸ்ட் 18, 2011

ஒரு கவிஞனின் காதல் (வசன கவிதை) பாகம்- 4 ....

முன் கதை சுருக்கம்: கதிரவன் ஒரு கவிஞன் அவன் தனது நாடிட்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு வருகிறான். அவன் வரும்வழியில் ராஜகுமாரி செவ்வந்தி யானை மீது உலா  வருகிறாள். செவ்வந்தியை பார்த்தவுடனே காதல் கொள்கிறான் கதிரவன். ராஜகிரியின் அரசனாகிய ராஜவர்மன் தன் மகள் செவ்வந்தியை திருமணம் செய்துவைக்க ஒரு போட்டியை அறிவிக்கிறார் அது அறிவு சம்பந்தப்பட்ட போட்டி என்பதால் அதை பிற  ராஜாக்களும், ராஜகுமாரகளும் 
குழப்பம் அடைகின்றனர். அந்த போட்டியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த கதிரவன் 
 கலந்துகொள்ள தனது தந்தையாகிய கண்ணபிரானிடம் அனுமதி கேட்கிறான். அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு வெளியேறுகிறார் கண்ணபிரான். போட்டி நாள் வருகிறது அந்த போட்டி மைதானத்தில் செவ்வந்தி எதிர்பாரத விதமாக கதிரவனை பார்த்து மனதை பரிகொடுக்கிறாள்.
                                                        (இனி...)
 
. கதிரவன்....
வெச்ச கண்
பின்வாங்காமல்
செவ்வந்தியை
பார்க்க!
 
செவ்வந்தியோ...
ஓரக் கண்ணால்
கதிரவனை
அளக்க!
 
இருவரையும்...
பிரித்து
சுயநினைவிற்கு
கொண்டுவந்தது
ராஜ ராஜவர்மரின்
பேச்சு!
 
ராஜகிரியின்...
ராஜா மட்டுமல்லாது,  
என் மகளாகிய
செவ்வந்தியின்
தந்தையாகவும்
நான் இருப்பதால்
என் மகளின்
விருப்பத்தை
பூர்த்தி செய்யும்
விதமாக
உடல் வலிவு போட்டி
வைக்காமல்
அறிவுப் போட்டியை
வைத்திருக்கிறேன்!
 
என்னுடைய...
மகளின்
மற்றொரு விருப்பதை
இங்கே முன்வைக்கிறேன்
இந்தப்  போட்டியில் கலந்துகொள்ள
ராஜா என்கின்ற தகுதி
மட்டும் போதாது
எவன் ஒருவன்  பெண்ணை
அன்பால் ஆள்கிறானோ
அவன் கண்டிப்பாக
அரசையும் மிக
சிறப்பாக ஆள்வான்!
 
நாட்டை...
ஆள்பவன் 
அரசனே 
ஆனாலும் 
முதலில் 
அவன் 
வீட்டை
நல்லபடியாய்
ஆள்பவனாக
இருத்தல்
வேண்டும்!
 
ஆகையால்...
என் மகளின்
விருப்பதிட்கேட்ப
விதிமுறைகளை
மாற்றி அமைத்திருக்கிறேன்!
 
அதன்படி...
இந்த  போட்டி இங்குள்ள
யார் வேண்டுமானாலும்
கலந்துகொள்ளலாம்
அவர்கள் திருமணம் 
ஆகாத  முப்பது
வயதிற்குள்
இருக்கவேண்டும்!
 
அந்த...
ஆடவர்
மன்னனாக
இருக்கவேண்டும்
என்ற அவசியமில்லை
நல்ல மனிதனாக
இருக்கவேண்டும்
என்பதே
அவசியம்!
 
யார் இதட்கு...
தகுதி உடையவரோ
அவர்கள் அந்த காலி
இருக்கையில் அமரலாம்
என்று தன் உரையை முடித்தார்
ராஜா ராஜவர்மர்!
 
மக்களுக்கும்...
மற்ற நாட்டு மன்னர்களுக்கும்
மிகப்பெரிய அதிர்ச்சி- ஆனால்
கதிரவனுக்கோ
மிகப்பெரிய மகிழ்ச்சி!
 
சற்றும்...
யோசியாமல்
கதிரவன்
அந்த இருக்கையில்
சென்று அமர்ந்தான்!
 
 
மன்னர்கள்...
அனைவரும்
ராஜா ராஜவர்மரை
எதிர்த்து கேள்வி கேட்டனர்!
 
மன்னர்களை...
வரவழைத்து விட்டு
சாதாரண மக்களை
போட்டியில் கலந்துகொள்ள
வைப்பதா? இது எங்களை
அவமானபடுத்தும்
செயல் ஆகாத? என்று
கோபப்பட்டனர்!
 
அதற்கு...
ராஜா ராஜவர்மர் எழுந்து
மன்னர்களே
அமைதி நான்
மன்னன் என்பதாலோ
நீங்கள் மன்னர்கள்
என்பதாலோ
பிடிக்காத ஒருவரை
என் மகளுக்கு
திருமணம் செய்துவைக்க
முடியாது!
 
இது...
பெண்களின் உணர்வுகளை
மதிக்கவேண்டிய
காலம், அவர்களுக்கும்
அவர்களது வாழ்கையை
முடிவெடுக்க சம உரிமை
கொடுக்கவேண்டிய காலம்!
 
ஆகையால்...
என் மகளின்
விருப்பப்படிதான்
இந்த போட்டியை நடத்துகிறேன்
திறமை உள்ளவர்கள்
இந்த போட்டியில் ஜெயித்து
என் மகளை திருமணம்
செய்துகொள்ளலாம். இதில்
உடன்பாடு இல்லாதவர்கள்
இப்போதே போட்டியில் இருந்து
விலகலாம் என்று கூரி தன்
இருக்கையில் அமர்ந்தார் ராஜவர்மர்!
 
                                                            (  போட்டி தொடரும்...)
 
 
 
 
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக