செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

போராடுவோம்! போராடுவோம்! ஊழல் ஒழியும் வரை போராடுவோம்...


                                                    நேற்று சுதந்திர தினத்தை சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று கொண்டாடினோமா? அல்லது இன்னொரு சுதந்திரம் பெறவேண்டும் என்று  கொண்டடினோமா? என்பது தெரியவில்லை. ஆனால் மீண்டும் ஒரு சுதந்திரம் ஊழலுக்கு எதிராக  வேண்டும் என்பது  இன்று அன்னா ஹசாரே கைது நமக்கு சாட்சியமாகியுள்ளது. மத்திய அரசு ஒரு எரிமலை சீருவதட்கு முன் அதை கட்டுப்படுத்த நினைத்து தண்ணிருக்கு பதில் எண்ணையை ஊற்றிவிட்டது. அன்னா ஹசாரே கைது என்ற தவறான முடிவு ஊழலை ஊக்குவிப்பதாக உள்ளது. இந்திய ஒரு ஜனநாயக நாடு அதை அடக்குமுறையால் கைப்பற்ற எந்த நடாலும் முடியாத போது ஒரு  பணநாயகம் முரண்டு பிடிப்பதா?

                                                இந்த நாட்டுடைய வரலாறு தெரிந்தவர்கள் இந்த நாட்டை நேசிப்பவர்கள் கண்டிப்பாக ஊழலுக்கு எதிராக போராடுவார்கள். ஒரு போராட்டமில்லாமல் இந்த பூமியில் பூ கூட பூப்பதில்லை. என்டோசல்பான் மருந்து தெளித்து நிலத்தில் விசத்தன்மை ஊட்டிவிட்ட பிறகு இந்த பூமியில் பூ பூப்பது என்ற இயல்பான விஷயம் கூட இனி போராட்டம் தான். ஊழல் இல்லாத துறையை பட்டியலிட்டால் நமக்கு மிஞ்சுவது மிகபெரிய பூஜியமாகத்தான் இருக்கப் போகிறது. சீனாவை எடுத்துக்கொண்டால் ஒவ்வரு ஒலிம்பிக் போட்டிகளிலும்,காமன்வெல்த் போட்டிகளிலும் எத்தனை தங்கம் பெற்றது யார் முதலிடத்தில் வந்தார்கள் என்று ஆவலுடன் பார்ப்பார்கள். ஆனால் நம் இந்திய தேசத்தில்,காந்தி பிறந்த மண்ணில் காமன்வெல்த் போட்டிகளில் எத்தனை கோடி பணம் சுருட்டினார்கள் யார் அதில் முதலிடம் என்று பட்டியலிடும் அவலம் அது அவலம் அல்ல  நமக்கு கேவலம். ஒரு ஜனநாயகம் பணநாயகமாக மாறும் போது அது பினனாயகமாக நாறும் என்பது மூக்குள்ளவர்களுக்கு தெரியும்.


இப்போது இந்தியாவுக்குள் ஓடவேண்டியது ஊழல் என்னும் சாக்கடை கலந்த ரத்தாறல்ல நேர்மை என்னும் சுத்தாறு. தேசத்திற்காக தேசியக்கொடியை கையில் பிடித்தபடியே உயிரைவிட்ட திருப்பூர் குமரனையும், கொள்கைக்காக தன் உயிரை தியாகம் செய்த வாஞ்சினாதனையும், நாடிட்காக தூக்குக் கயிறை முத்தமிட்ட பகத் சிங்கையும், நாட்டை அடிமை நிலையில் இருந்து சுதந்திர நிலைக்கு கொண்டுவர செக்கிலுத்த வா. ஊ. சிதம்பரத்தையும், சுப்ரமணிய சிவாவையும், சுப்ரமணிய பாரதியையும், நாடிட்காக ஒரு படையை உருவாக்கிய உன்னத தலைவன் சுபாஷ் சந்திர போஸ்சையும், சுதந்திரமே உயிர் மூச்சாக கருதிய
தேசதந்தை மகாத்மா காந்தியையும் இன்னும் பல தேச விடுதலைக்காக போராடிய பல தலைவர்களையும் தியாகிகளையும் நாங்கள் இன்னும் மறக்க வில்லை. அதை மறந்தால் நாங்கள்  மனிதர்கள் இல்லை.

போராடுவோம்! போராடுவோம்! ஊழல் ஒழியும் வரை போராடுவோம்...


            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக